Bio Data !!

21 November, 2009

கதை விமர்சனம்



ஒரு நல்ல கதை படிச்சேன். ஆனா முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை . இதை பதிவாய்ப் போட்டால் முடிவை பற்றிய பல கருத்துக்கள் கிடைக்குமே!.

கதையைப் படிங்க அப்பறம் பேசுவோம்.

கதைப் பெயர் : அச்சு இயந்திரம்

கதை ஆசிரியர் : ஜெகாதா

அகல்யா கதை நாயகி. ஒரு வெகு ஜனப் பத்திரிகையை கடுமையாக சாடும் வழக்கம் கொண்டவள். "விபச்சாரி" என்னும் சிறு கதை ஒரு பத்திரிகைக்கு அனுப்புகிறாள். அந்த பத்திரிகை ஆசிரியர் நேரில் வந்து பார்க்கச் சொல்லி தகவல் அனுப்புகிறார். நேரில் வந்ததும்
" அகல்யா என்ற முகவரித் தபாலை உடைத்தாலே தயவு தாட்சணியம் இன்றி சீறி பாயும் பெண் புலி நீதானா?" இளக்காரமாய் கேட்கிறார் ஆசிரியர்.

"விபச்சார நடிகை *** தற்கொலை செய்ததற்கு பத்திரிக்கை ஆசிரியன் தான் காரணம்னு சொல்ற மாதிரி கதை எழுதி இருக்கிற என்ன நெஞ்சழுத்தம் உனக்கு ." ஆசிரியர்.

"நடிகையோட சாவுக்கு நீங்களும் உங்க பத்திரிகையும் தான் காரணம்."அகல்யா

"இந்த செய்தியைப் போட்டது ஆசிரியரோட குற்றம்னா விபச்சாரம் பண்றது குற்றம் இல்லையா? " ஆசிரியர்.

"விபச்சாரமே தொழிலாகிப் போன சந்தையில் நடிகை என்ற காரணத்தால் அவ ஒருத்திக்குப் பின்னால் மட்டும் சுற்றி சுற்றி வட்டமிட்டது தான் காரணம். அது இந்திய கலாசாரத்தை பாதுகாக்க செய்த ஏற்பாடுன்னு என்னால நம்ப முடியல.

அவள் செய்தது விபசாரம்னா அதை உலகறியப் படுத்தி காசு சம்பாதிச்சது அதை விட பெரிய விபச்சாரம். இதை மாதிரி எனக்கு நடந்தா தற்கொலை பண்ண மாட்டேன் கொலை பண்ணுவேன்."

"நீ உண்மையிலேயே துணிச்சலானவள் தான்."

"நான் துணிச்சல் உள்ளவ தான் நீங்கள் துணிச்சல் உள்ளவர்னா உங்க பத்திரிகையில பிரசுரம் பண்ணுங்க பார்க்கலாம்."

உடல் நடுக்கத்தை மறைத்து கொண்டு வீராப்பாக வெளியேறுகிறாள் அகல்யா.

அச்சத்தில் குளிர் ஜுரம் வந்து விடுப்பு முடிந்து அலுவலகம் போகிறாள். வழியில் பத்திரிகை விளம்பரம் "விபச்சாரி , சிறுகதை அகல்யா "

இந்த நேர்மையை ஆசிரியரிடம் அவள் எதிர்பார்க்கவில்லை.

அலுவலகத்தில் எல்லோரும் அவளையே பார்ப்பது போல் இருந்தது.

தனது மேஜையில் அந்த பத்திரிக்கை. பலரும் புரட்டியதன் அடையாளமாய்

கசங்கி இருந்தது. வேகமாக புரட்டினாள்.தலை கிர்ரென்றது. அந்த கதைக்கு படமாக அவளை ஒரு ஆடவனுடன் நிர்வாணமாக. "அய்யோ அதான் எல்லோரும் அப்படிப் பார்த்தாங்களா? "

நெஞ்சமெல்லாம் தீயாக காந்தியது.

பேயோ பிசாசோ கண்டவள் போல் தலை தெறிக்க ஓடிய அகல்யா மாடியில் இருந்து அப்படியே தலை குப்புற விழுந்தாள்.

அகல்யா செய்தது சரியா?

அவள் வேறு என்ன செய்திருக்கலாம்?

படிக்கிறதோட விட்டுடாம கொஞ்சம் பின்னூட்டமும் போடுங்களேன்.














17 November, 2009

பௌர்ணமி இரவில் !!

மறுபடியும் அந்த நாள் ஞாபகம் !
நான் படிச்ச ஸ்கூல்ல ,எல்லா மாணவிகளையும் ரோஸ் , லில்லி ,மல்லிகை, தாமரைன்னு குரூப் பிரிச்சு இருப்பாங்க. வருடத்துக்கு ஒரு முறை கலை நிகழ்ச்சிகள் நடக்கும்.
திருவிளையாடலில் இருந்து காட்சியை நாடகமாக்கி இருந்தாங்க.தட்ஷன் நடத்தும் யாகத்துக்கு செல்ல சிவன் மறுப்பு தெரிவிக்க பார்வதி தந்தைக்கும் கணவனுக்கும் இடையே அல்லாடும் காட்சி. சிவனின் கோபம் ..... முக்கிய பாத்திரங்களில் நடித்ததவங்களை சினிமாக்கு எல்லாம் கூட்டிட்டு போனாங்க. நடிப்பு இயல்பா இருக்கணும்ல.
தட்சன் வேடத்தில் நான்.
சரியா பள்ளி விழாவும் சித்தி கல்யாணமும் clash ஆக என்னைய ஒரு விடுதியில சேர்த்து விட்டிட்டு வீட்ல எல்லோரும் ஜுட் விட்டுட்டாங்க .
புது சூழ்நிலை,மறு நாள் நாடகக் கனவு எல்லாம் சேர்த்து தூங்க ரொம்ப நேரம் ஆச்சு . திடீர்னு நாய் ஊளை இடும் சத்தம். திடுக்கிட்டு எங்கேயோனு பார்த்தா அடுத்த சத்தம் ரொம்ப பக்கத்தில. நான் படுத்திருந்த அறைக்கு உள்ளேயே .
தொடர்ந்து அடுத்த ஊளை சத்தம்.
இப்பொழுது என்னால் குரல் வரும் திசையை கொஞ்சம் அனுமானிக்க முடிந்தது. 'என்ன சத்தம் இந்த நேரம்னு 'அந்த திசையில் என் பார்வையை செலுத்தி ...........
"யம்மா" னு அலறப் போனேன். இரு கைகளாலும் வாயை அழுத்தி பொத்தி சத்தம் வராமல் இருக்க பாடுபட்டேன். அங்கே கட்டிலின் மேல் மண்டி இட்டு தலையை லேசா உயர்த்திய படி ஒரு பெண்ணிடம் இருந்து தான் வந்தது அந்த சத்தம் . வாயிலிருந்து எச்சில் ஒழுகி கொண்டிருந்தது.

மெதுவா என் பக்கத்தில படுத்து இருந்த பெண்ணை அசைத்தேன். ரொம்ப நேர முயற்சிக்கு பிறகு "என்ன?"

குரல் எழும்பாமல் என் கை காட்டிய திசை பார்த்து " நீ படு, கொஞ்ச நேரத்தில சரியாயிடும்."
இனிமே எங்கே படுக்கிறது திகில் அடித்தபடியே உட்கர்ந்திருந்தேன்.
அந்த பெண் அப்படியே சரிந்து தூங்கினாங்க.மறு நாள் என்னைப் பார்த்ததும் "என்ன ரொம்ப பயந்திட்டியா?ஒரு தடவை என்னை வெறி நாய் கடிச்சிடுச்சு. அப்போ இருந்து பௌர்ணமி அமாவாசை ஆனா இப்படிதான். இந்த கண்ராவியினால தான்நான் கல்யாணமே பண்ல." கண்களிலும் குரலிலும் ஒரு வித சோர்வு.
மறு நாள் நாடகம் முடிந்தது. அப்பா அம்மா வந்தாங்க. பார்த்த உடனே நான் ஒரே அழுகை.ஏன் அழுதேன்?
முன் தினம் பார்த்த நிகழ்ச்சியின் பயத்தாலா?
அப்பா அம்மா வை முதல் தடவை பிரிந்ததாலா?"
இந்த கண்ராவியினால ...." அந்த குரலில் இருந்த சோகம் என்னை பலமாகத் தாக்கியதலா?
விட்டு விட்டு இடைவெளியில் விசும்பிக் கொண்டே இருந்தேன்.
வீட்டில ஒரு நாய் வளக்கனும்னு ஆசை இன்னும் இருந்தது.

10 November, 2009

நாயும் நாய் சார்ந்த நினைவுகளும் !!

எனக்கு ரொம்ப நாளா நாய் வளக்கணும்னு ஆசை. ஆனா அது செல்லா காசைப் போலவே செலவாகாமல் என்னிடமே இருந்து விட்டது. ஆனாலும் நாய் சார்த்த எனது நினைவுகளில் நவ ரசமும் உண்டு. சிலதை எடுத்து விடுறேன்.
நான் school ல படிக்கிறப்போ பார்வதி பார்வதி னு ரெண்டு friends உண்டு. அதுல ஒரு பார்வதி வீட்ல ஒரு பெரிய அல்சேஷன் இருக்கும். அவங்க வீட்டுக்கு நான் போகும் போதெல்லாம் நான் ஓட அது விரட்ட, அது விரட்ட நான் ஓடனு ஒரே கபடி ஆட்டம் தான். இதுக்கு எதாவது technique கண்டு பிடிச்சே ஆகணும்னு எனக்கு பலத்த யோசனை. நான் school ல இருந்து எதாவது mood out ஆகி வந்தா எங்க அப்பா என் தலையை பொதுவா வருடி விடுவாங்க. கொஞ்ச நேரத்தில கூல் தான்.அது work out ஆகுமான்னு யோசிக்கும் போது,
"ஏய்! அப்படியே நில்லுப்பா.ஒண்ணும் செய்யாது" இது பார்வதி. "அப்படிய்ய்ய்ய்ய்ய்யே நிக்றதா!"
அப்பா ஸ்டைல் பின் தொடர்ந்து பார்ப்போம்னு முடிவெடுத்து மெதுவா தலை கிட்ட கையை கொண்டு போனேன். விரல் லேசா கழுத்துக்கு பக்கத்தில படறது. சரி எதோ கிடைக்கிற இடத்தை தடவி விடுவோம்னு மனசை கல்லாக்கி கிட்டு லேசா தடவி விட்டுட்டேன். (அப்பாடா! அதற்குள் இருக்கிற மிருகம் அடங்கி விடுமா?)
எதோ magic போல கொஞ்சம் அடங்கின மாதிரி இருந்தது. நிஜமா? கற்பனையா? இன்னும் கொஞ்சம் வருடிக் கொடுக்க, அய்ய்ய் ! அடங்கி விட்டது அல்சேஷன். அப்படியே தன் தலையை லேசா என் கால்களில் சாய்த்து...
நான் கைப் பிள்ளையை அலுங்காமல தொட்டிலில் போடுறது போல மெதுவா நகர்ந்து ஒரு நாற்காலியை மெதுவா இழுத்து உட்கார்த்திட்டேன். வருடி கொடுத்த கை வருடிய படியே. அப்படியே அது தன் தலையை என் முழங்காலில் சொகுசா சாய்த்து கண்கள் சொருக அப்படியே படுத்து விட்டது.
இப்போ எனக்கு புதுசா பிரச்சினை ஆரம்பம் ஆயிடுச்சு. தடவி கொடுத்த கையை எடுத்தா உர்ர்ர்ர்ர்றிந்குது. இது வரைக்கும் பார்வதியை ஒரு ஜான்சி ராணி போல லுக் விட்டுட்டு இருந்த நான் இப்போ பரிதாபமா பார்க்க ஆரம்பிச்சேன்.
"என்னடி இவளே எதாவது செய். இப்படியே எவ்வளவு நேரம் நான் இருக்கிறது."
"ஹேய்! டைகர் come here" " நீ அப்படியே இரு " முன்னதை டைகர் இடமும் பின்னதை என்னிடமும் சொன்னாள். (அது என்னங்க எல்லா வளர்ப்பு பிராணிகளுக்கும் english நல்லா புரியுது?)
அதுவானா கண்ணு சொருக காதுகளை விறைத்த படிஇந்த சொகத்தை விட்டிட்டு போறதா இல்ல இப்படியே continue செயறதானு ஓர கண்ணால அவள பார்க்குது.
"Tiger ! come here" மறுபடியும் பார்வதி
தன் எஜமான விசுவாசதூடே அவளிடம் ஓடிப் போய் சமத்தா வாலை ஆட்டிகிட்டு நின்ன நிமிஷம் என்னை zoom பண்ணா நான் எங்க வீட்ல நின்னேன்.
அப்பறம் இந்த technique ஐ அடிக்கடி முயற்சி பண்ணி உடமைக்காரியை விட நான் இப்போ ரொம்ப க்ளோஸ் ஆக்கும்.
நினைவுகள் தொடரும்....

02 November, 2009

முதல் அழுகை !!

அழுகைன்கிறது பெண்கள் பயன்படுத்தும் ஆயுதமாகத் தான் சித்தரிகிறோம். உண்மை என்னனா அழுகை மட்டும் தான் பிறரிடமிருந்து கற்று கொள்ளாமல் இயல்பா வெளிப்படற முதல் உணர்ச்சி.குழந்தை பிறந்த உடன் வீல்னு கத்தும் கேடிருகீங்களா? . அப்படியே கத்தலைனா பின்னாடி ஒரு அடி கொடுத்து அழ வைப்பாங்க .
ஏன் இந்த அராஜகம்னு நினைச்சிருக்கேன் . ஏன் ஒரு குழந்தை கூட ஹா! ஹா! ன் சிருச்சிகிட்டு பிறக்கிரதிலைனு வேடிக்கையா கூட நினைச்ச்துண்டு .
பின்னாடி தான் புரிஞ்சது அது ஒரு அடிப்படைத் தேவையின் இயக்கம். பாப்பா வைத்துக்கு உள்ள இருக்கும் போது நுரை ஈரல் ஒட்டி போன பலூன் போல இருக்கும். உதாரணம் சொல்லனும்னா கடையில் வாங்கிற புது foot ball மாதிரி இருக்கும். வைத்துக்கு உள்ள இருக்கும் போது பாப்பா சுவாசிக்க வேண்டிய் தேவை இல்லை. அந்த முதல் அழுகை தான் அதன் நுரையீரலை விரிவடைய செய்து நன்கு சுவாசிக்க வைக்கிறது. .
நாள் போக போக தான் தனது அழுகை தனது தேவைகளை பெற்றுக் கொடுக்கிதுனு படிச்சிகிட்டு அப்பப்ப தேவைப்படும் போதெல்லாம் அழ ஆரம்பிக்கிறது .
இன்னும் வளர வளர ஆண் பிள்ளைகள் அழுவது கேவலம்னு நினைச்சு அழுகையை மறைக்கிது.
பிறக்கும் போது ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நான்னென்ன எல்லாம் ஒரே அழுகை தான். பேதமில்லை...