Bio Data !!

26 December, 2020

 கோண தாத்தா

சிறுகதை எழுதியவர் குதிரை சுதாகர்.

ஒரு சிறுகதை மூலம் இவ்வளவு வலி கொடுக்க முடியுமா? முடிகிறது.


சாமான்ய மக்களோடு இருக்கும் போது மனசு வெகுஇயல்பாய் இருக்கிறது என்கிறார் ஆசிரியர்.உண்மை அவர்கள் வாழ்க்கை நாடக பூச்சு இல்லாத நடைமுறை வாழ்க்கை.

எனக்கு வாழ்க்கையை அதன் போக்கில் விடலாம் எனத் தோன்றும். அவரோடது போராட்டக் குணம் என்கிறார். வாழ்க்கை எப்போதும் இப்படியான எதிரெதிர் துருவங்களைத் தானே இணைக்கிறது. 

சொந்த தாத்தாவாக இல்லாமலிருந்தாலும் எல்லாமுமாக இருந்திருக்கிறார் கோண தாத்தா. தாத்தாவின் பூர்வீகம் யாருக்கும் தெரியாது.விந்தி விந்தி உடம்பைக் கோணி கோணி நடப்பதால் இந்த பெயர் வந்து சேர்ந்தது. என்னைப் பார்த்ததும் கண்ணால் மனசு கசிந்து சிரிப்பார் என்கிறார் ஆசிரியர்.

வெற்றி பெற்ற விளையாட்டு வீரன் தன் நாட்டுக் கொடியை இரு கைகளாலும் உயரத் தூக்கிப் பிடித்த படி மைதானத்தை வலம் வருவது போல அவர் குளித்து தன் வேட்டியை பிடித்து காய வைத்து வருவது இருக்கும் என்கிறார். என்ன அழகான உருவகம். 

மாரி என்னும் ஐஸ் விற்கும் காரெக்டர் ஒன்றைப் பற்றி சொல்கிறார்.மாரி ஐஸ் விற்று வந்ததும்  தாத்தா உட்பட குழந்தைகள் பெட்டிக்குள் துளாவி கிடைத்த துண்டுகளை எடுப்பதை சொல்லி இருக்கிறார். தாத்தா அடித்து பிடித்து எடுத்து வரும் துண்டைக. கீழே போட்டு இவனை அதன் மீதேறி நிற்கச் சொல்வார்.

எருமை கோவிந்தன் என்றொரு காரெக்டர். நன்றாகக் குடித்திருந்தவன் தாத்தாவை எட்டி உதைக்க தண்ணீரில் சுருண்டு விழுந்தார். அப்பா தலை வருடி முதுகு தடவி கொடுக்கத் தெரியாமல் அய்யனார் சிலை மாதிரி கம்பீரமாக வாழ்ந்தாலும் வாழ்க்கையை வாழச் சொல்லிக் கொடுத்தவர் தாத்தா தான். கண் பார்த்துத் தான் பேச வேண்டும் என்றும் மனுஷனுக்கும் மிருகத்துக்கும் நடந்தால் தான் கலப்புத் திருமணம் என்றும் வாழ்வின் நெறி முறைகளைச் சொல்லிக் கொடுத்தவர். ஒரு மாட்டு வண்டியில் தலை சாய்த்து நுறை தள்ளித் தாத்தா இறந்து கிடந்தார். தண்ணீரைக் குடம் குடமாய் தலையில் ஊற்றி புது வேஷ்டி கட்ட முற்படும் போது ஒருவன் நக்கலாக "கோண ஆம்பளையும் இல்ல பொம்பளயும் இல்லடா" என்றான். போவோர் வருவோர் அந்த பிறந்த மேனியை வேடிக்கை பார்த்து சிரித்தபடி நகர்ந்தனர். 

எல்லா ரகசியங்களையும் யாருக்கும் சொல்லாமல் மறைத்து அவமானங்களைப் புதைத்து பிணமாக கோணிக் கோணிச் சென் று கொண்டருந்தார் கோண தாத்தா. 

என் 25 வயதில் இப்படி ஒரு குழந்தையை நான் பார்த்ததும் அது பதின்ம வயது வந்து அதன் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் ஆணா பெண்ணா என்று நிர்ணயித்து ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று வலியோடு அதன் தாய் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!