Bio Data !!

22 February, 2023

நாவலின் பெயர் : தளிர் ஆசிரியர். : நஸீமா ரசாக் மெட்ராஸ் பேப்பர் பதிப்பகம். விலை : ரூ 310/- ஆசிரியரின் உலகம் குழந்தைகளால் சூழப்பட்டது. அடுத்த தலைமுறைக்கு படிப்பும் சத்தான ஆரோக்கியமான உணவும் கொடுப்பது போலவே உணர்வுகளும் எண்ணங்களும் செழுமையாக ஆக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர். இந்த புத்தகம் குழந்தைகளின் உலகுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும் என்று நம்புவதாக சொல்கிறார் . அழைத்துச் செல்கிறது. கதை தொடங்கும் போது துபாயின் சான்ட் சின்றோமோடு தொடங்குகிறது. அதை ராஜஸ்தானில் அனுபவித்தவள் என்ற வகையில் ஆரம்பமே என்னை விறுவிறுப்பாக உட்கிரகித்துக் கொண்டது. அங்கே வார விடுமுறை வெள்ளி . அன்று கூலி வேலைக்கு நாடு விட்டு நாடு வந்திருக்கும் பலரும் சில இடங்களில் கூடுவார்கள் . காசு செலவு செய்து வேறு எங்கும் செல்ல முடியாததால் பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் புல்வெளிகளில், சாலைகளுக்கு நடுவில் இருக்கும் புல்வெளிகளில் நிறைந்து விடுவார்கள் என்கிறார். தன் குடும்பம் முன்னேற தம் வாழ்வை பலியாக்கும் ஒரு குழு நம் கண் முன் வருகிறது. பல நாடுகளிலும் இருக்கும் கல்லூரி தோழிகள் ஸ்கைப்பில் இணைந்து பேசுகிறார்கள். தங்கள் குழந்தைகளோடு அவர்கள் சந்திக்கும் முரண்பாடுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நல்ல ஐடியாவாக தோன்றுகிறது கல்லூரி தோழிகளிடம் நம் பிள்ளைகளின் குறைகளைப் பற்றி பேசுவதில் ஈகோ இருக்காது . பர்வீன் கதையின் நாயகி அவள் வீட்டு வேலைகளை சிறப்பாக செய்து, தனது தோழிகளுடன் தொடர்பில் இருந்து, இளம் குழந்தைகளுக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கிறார் ஒவ்வொரு பெண்ணும் நாம் பர்வீன் போல இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் கதாபாத்திரம் . குளிர் மாதங்களில் அமீரகம் நோக்கி புலம் பெயர்ந்து வரும் பறவைகள் பற்றிய விவரிப்பு வரும்போது நமக்கும் ஒரு சரணாலயத்தில் இருக்கும் உணர்வு வருகிறது. கடலில் குளிப்பதில் இருக்கும் புத்துணர்ச்சி பாலைவன மணலிலும் இருக்கிறது என்கிறார்கள் . "சில நேரங்களில் பெற்றோர்களின் தவிப்பு கடுமையான கண்காணிப்பாக மாறும் போது அது பிள்ளைகளுக்கு வேதனையை தந்து விடுகிறது" உண்மைதான் சமூக வலைதளங்களில் குழந்தைகளை சூறையாடும் கயவர்களும் இருப்பதால் இது அவசியம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும் கதையில் 124 வது மாடியில் இருப்பதாக வந்தது இத்தனை உயரம் ஆடிகள் எப்படி கட்டுறாங்க என்ற ஆச்சரியமும் துருக்கியில் நடந்த நிகழ்ச்சியின் ஞாபகமும் ஒருசேர எழுந்தது அந்தக் கட்டடத்தில் மொத்தம் 142 மாடிகள் என்கிறார் . கதை முடியும் வரை நம்மையும் துபாயிலேயே இருத்தி வைத்துக் கொள்கிறார் ஆசிரியர். தாய்மை ததும்பும் கதை வாசிப்பதற்கு இதமாகத் தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!