Bio Data !!

01 February, 2023

நாவலின் பெயர் : சஞ்சாரம் ஆசிரியர் : எஸ். ராம கிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகம். விலை : ரூ 340/- எஸ். ரா மல்லாங்கிணறு கிரமத்தில் பிறந்து வளர்ந்து முழு நேர எழுத்தாளராக சென்னையில் வந்து குடியேறுகிறார். பல சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள், திரைப்பட நூல்கள், எழுதி உள்ளார். குழந்தைகள் நூல்கள், உலக இலக்கிய பேருரைகள் வரலாறு, நாடகத் தொகுப்பு, நேர் காணல் தொகுப்பு, மொழி பெயர்ப்பு நூலகளென இவர் எழுத்து விரிந்து கொண்டே செல்கிறது. இந்த நாவல் நாதஸ்வரக் கலைஞர்கள் பற்றியது. சஞ்சாரம் என்ற பெயருக்குப் பொருத்தமாய் கதை மாந்தர்கள் ஒவ்வொறு ஊராய் செல்வது பற்றிய கதை. அந்தந்த ஊர்களின் பெயரே அந்தந்த அத்தியாயத்தின் தலைப்புகளாக வைத்துள்ளார். ஒவ்வொறு அத்தியாயத்தினையும் க்ன்ணி போல் இணைத்து கதையை நகர்த்திச் செல்கிறார். புது விதமான நடையாக இருக்கிறது. ரத்தினம் , பக்கிரி இன்னும் இருவருடன் ஒரு கோயில் திரு விழாவுக்கு நாதஸ்வரம் வாசிக்கப் போகிறார்கள். அங்கே ஒரு தகராறு உண்டாகி ரத்தினம் , பக்கிரி இருவரையும் மரத்தில் கட்டி வைக்கிறார்கள். பூசாரி யாருக்கும் தெரியாமல் கட்டவிழ்த்து விட பக்கிரி கோபத்தில் கோவில் பந்தலுக்குத் தீ வைக்க இருவரும் தப்பிக்கிறார்கள். கண்ணுசாமி என்றொரு நாயனக்காரர். ஊர் எதிர்ப்பை மீறி செருப்பு தைக்கும் கருப்பையாவிற்கு நாதஸ்வரம் வாசிக்க சொல்லித் தருகிறார். பக்க வாத்தியக் காரர்கள் உடன் வாசிக்க மறுத்து விடுகிறார்கள்.. எந்த கோயிலுக்குள்ளும் அனுமதி இல்லை. த்ன்னால் இப்படி ஆகி விட்டதே என்று கருப்பையா தூக்கிட்டுச் சாகிறார். கொஞ்ச நாளிலேயே கண்ணுசாமி காலரா வந்து இறந்து போகிறார். அருமையான கதா பாத்திரங்கள். சாமிநாத பிள்ளை என்ற ஒரு கலைஞருக்கு கொடுக்கப்படும் மரியாதையை விவரிப்பதைப் பார்க்கும் போது மலைப்பாய் இருக்கிறது. அந்தக் காலத்தில் கலை எவ்வளவு மதிக்கப்பட்டு இருக்கிறது. எவ்வளவு கம்பீரம் காத்திருக்கிறார்கள் கலைஞர்கள். மக்களும் இன்றைப் போல் அலைபேசியில் மூழ்காமல் ரசித்திருக்கிறார்கள். . எவ்வளவு கம்பீரம் காத்திருக்கிறார்கள் கலைஞர்கள். கலைஞர்களைக் கவுரவித்து கையில் இருப்பதை எல்லாம் அள்ளிக் கொடுத்த ஜமீன்ககளின் பரிதாப நிலையும் அப்போது கூட குறையாத அவர்கள் கம்பீர நடையையும் அழகாக சொல்லி இருக்கிறார். இடையிடையே பல சிறு கதைகளைச் சொல்கிறார். கரிசல் காட்டில் மழையின்றி போனதற்கு ஒரு கதை சொல்லப் படுகிறது. கரிசல் நிலத்து மக்களுக்கு கோபம் அதிகம். ஆனால் அது மனதுக்குள் உறைந்து போகாது. ஒரு காலத்தில் கரிசல் காட்டு ஆண்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்களாம். ஆனால் இப்போது ஆழ் துளை கிணறு போட்டு வீட்டுக்கு வீடு தண்ணீர் வந்து விட்டதால் அது மாறி விட்டது என்கிறார். அவர்கள் இருட்டுக்கு பழகிய கண்களைக் கொண்டவர்கள். அதனால் பயமற்றவர்கள் என்கிறார். கரிசல் மண்ணில் வீசும் ஒரு வகைக் காற்றுக்குப் பெயர் “வலியன்”. இந்த பெயர் வரக் காரணம் வலி மிகுந்தது. வலியன் என்றொரு ஆட்டுக்காரன். தன் ஆடுகளை ஒரு இடத்தில் விட்டு விட்டு தண்ணீர் தேடிச் செல்கிறார்ன். வந்து பார்த்தால் மொத்த ஆட்டையும் காணோம். அவன் தூக்கிட்டு மரித்துப் போகிறான். வேகமாக வீசும் காற்று ஆடுகளைத் தேடி அலையும் வலியனைப் போல் இருப்பதால் அந்த பெயர் என்கிறார். கில்ஜி மாலிக்கபூர் இருவரின் ரகசிய வாழ்வு ஒரு கதையாக சொல்லப் படுகிறது. வட இந்தியாவில் ஏன் நாதஸ்வரம் வாசிக்கப் படுவதில்லை என்பதற்கு ஒரு கதை. தன்னாசி என்ற கண் தெரியாத பையனுக்கும் சரஸ்வதி என்னும் பெண்ணுக்கும் இடையேயான குழந்தை நட்பு அவ்வளவு அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் பின்னாளில் தன்னாசி ஒரு கொடூர சைக்கோ போல் நடக்கத் தொடங்கி விடுவார். நான் ரசித்த வரிகளைச் சொல்லாமல் பதிவு நிறைவு பெறாது. “ கல் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு பால் குடிக்கும் குட்டி ஆடு போல பாத்திரத்தை முட்டுவதும், அடுப்பை விட்டு தலையை வெளியே எட்டிப் பார்த்து அடங்குவதுமாய் இருந்தது” “ விசித்திரமான மனிதர்கள் வலியூட்டும் நினைவுகள் மறக்க முடியாத பயம் இவை தான் நினைவில் எஞ்சி இருக்கின்றன” வாசிக்க வேண்டியவை என்று ஒரு வரிசை வைத்திருந்தால் அதில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “சஞ்சாரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!