Bio Data !!

03 February, 2023

“ராங்கி” என்றொரு தமிழ்படம் நெட்ப்ளிக்ஸில் பார்த்தேன். படத்தின் ஹீரோ த்ரிஷா. ஆம் படத்தின் முக்கிய கதாபாத்திரம் த்ரிஷா தான். ஏ.ஆர்.முருகதாஸின் கதைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் : M. சரவணன். சோஷியல் மீடியாவின் ஆபத்தை அப்பட்டமாக சொல்லும் படம். ஆனால் சோஷியல் மீடியாவில் இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் ஆபத்தை சொல்லும் படம். ஆன்லைன் மீடியாவில் ரிப்போர்ட்டராக பணி புரியும் தையல் நாயகி.யாக த்ரிஷா கலக்கி இருக்கிறார். அவள் அண்ணன் மகள் சுஷ்மிதா பள்ளி மாணவி. அவளுக்கு முக நூல் கணக்கு கிடையாது. ஆனால் அவள் உடன் படிக்கும் மாணவி தான் அழகாக இல்லாததால் தனக்கு நண்பர்கள் அதிகம் முக நூலில் இல்லை என சுஷ்மிதாவின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி ஒரு கணக்கு தொடங்கி தன்னுடன் சாட் செய்பவர்களுடன் அத்து மீறி நடந்து கொள்கிறாள். சாட் செய்யும் நண்பர்களில் ஒருவன் அவளுடைய ஆடை இல்லா முகம் இல்லா படத்தை அவள் தந்தைக்கு அனுப்ப தனது மகள் படம் என்ற அச்சத்தில் அந்த விபரீத விஷயம் த்ரிஷா வுக்கு தெரிவிக்கப் படுகிறது. அந்த காரியத்தை மிகவும் துணிச்சலாக கையாள்கிறார் தையல் நாயகி. ஒரு நிலையில் “ நான் லோக்கல்ல ஒரு பிரச்னையை உன்னிடம் கொண்டு வந்தால் அதை இன் டர்நேஷனல் பிரச்னையாக்கி விட்டாயே என்று அண்ணன் ஆதங்கப் படுகிறார். முக நூலின் ஆபத்தை மிக அழுத்தமாகவும் அதிலும் முக்கியமாக பெண்கள் எத்தகைய மன தைரியத்துடன் கையாள வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். பெண்களின் பிரச்னையையும் உலக அரசியலையும் அழகாக கொண்டு இணைத்திருக்கிறார்கள். வித்தியாசமான முயற்சி. த்ரிஷா கதா நாயகி. கதாநாயகன் படத்தில் இல்லை. இடையிடையே இப்படிப் பட்ட துணிச்சலான முயற்சியும் தேவையாகத் தான் இருக்கிறது. த்ரிஷா நடிப்பில் முதிர்ச்சியும் சண்டைக் காட்சிகளில் சுறுசுறுப்பையும் காட்டி இருக்கிறார். வறண்ட பாலைவனத்தில் தீவிரவாதக் கும்பலோடு இருக்கும் ஆலிம் மனத்தில் முகிழ்க்கும் மென் காதலும் அது அவனுக்கு கொடுக்கும் பரவசமும் அழகாக காட்டப் பட்டு இருக்கிறது. பெண்களை கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தும் நியாயமற்ற முறை மாற வேண்டும். அதற்கு இது போல் பல படங்கள் வர வேண்டும்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!