சிலர் நான் காதலித்ததே இல்லைன்னு சொல்லலாம் .ஆனால் காதலிக்காதவர் யாருமே இருக்க முடியாது . அன்றாடம் மலர்வதும் பூக்கள் தான் . பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சியும் பூ தான் . காலையில் மலர்ந்து மாலையில் மறைந்து விடுவது பூக்கள் தான் . வாடிப் போகாத க்ரோட்டன்சும் பூ தான் . என்ன, ஒருவர் நம்மை பாதிப்பதை உணரும் போதே அலெர்ட் ஆகி கவனமா குறுக்குச் சுவரை பலமா எழுப்பிக்கிறவங்க தப்பிச்சிடுறாங்க . மத்தவங்க பனால்.
காதல் என்பது மலர்ச்சி . மனதின் இறந்த செல்களை உதிர்த்து புதுசெல்களை பிறப்பிக்கும் காரணி காதல் . என்றும் உற்சாக துள்ளலோடு , இளமையாக வைப்பது காதல் . கிளைகளின் மலர்ச்சியை மலர்களாய் பார்க்க முடிகிறது . ஆனால் வேர்களின் மலர்ச்சி மறைவாகவே இருக்கிறது . அது மண்ணோடு முடிந்து விடுவது போல சிலரது காதல் மனதோடு முடிந்து விடுகிறது
காதல் என்ற பெயரில் கயமைத்தனம் அதிகமாகி கொண்டிருக்கும் காலம் இது. காதல் அறிவுரை நான் இளையவர்களுக்கு கொடுப்பதை விட பெற்றவர்களுக்கு கொடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். உங்கள் குழந்தைகள் காதலில் விழுந்தது (?) தெரிந்தால் உணர்ச்சி வசப்பட்டு உங்கள் கற்பனைகளில் பயப்பட்டு முரட்டுத் தனம் காட்டுவது எதிர் மறை விளைவுகளில் தான் கொண்டு நிறுத்தும். அநேகம் பேர் ஒரு புதியவரை தெரிந்து கொண்டதும் காட்டும் ஆர்வம் அற்ப ஆயுளில் தற்கொலை செய்து கொண்டு விடுகிறது. அது வரை பொறுக்காமல் நாம் செய்யும் அடாவடி செயல் அவர்கள் அவசர முடிவு எடுத்து அதல பாதாளத்தில் தள்ளுகிறது. பொறுமை காப்போம்.
கடந்த வாரம் கண்ட செய்தி. ஒன்பது வயது பெண்குழந்தை அதிக ஆண் நண்பர்களுடன் பழகிய காரணத்தால் நெருங்கிய உறவினர்களே கொன்று விட்டார்களாம். நுரையீரல் முழுவதும் மணல் நிரம்பி இருந்ததாம். தான் பெற்ற தண்டனைக்கான காரணம் கூட முழுமையாகப் புரியாத வயது. அடப் பாவிகளா!
அருமை... பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteகாமத்தை ஒடுக்கி காதலை வளர்ப்போம்.
ReplyDeleteகாதல் குறித்த பதிவு நன்றாக இருந்தது.
nandri penaa moodi
ReplyDeletenandri tamil uthayam
ReplyDeleteநல்ல எச்சரிக்கை..... காதலிப்பவர்களும்.... பெற்றோரும் பக்குவமாக நடந்துக்கொள்ள வேண்டும்.... இல்லையேல்... சோகம்தான் மிஞ்சும்.
ReplyDelete//வேர்களின் மலர்ச்சி மறைவாகவே இருக்கிறது . அது மண்ணோடு முடிந்து விடுவது போல சிலரது காதல் மனதோடு முடிந்து விடுகிறது//
ReplyDeletesuperb sella naaykkutti manasu
நன்றி கருணாகரசு. நீங்களும் காதலித்துக் கொண்டிருந்தால் காதல் ஜெயிக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி தேனம்மை என் பதிவில் எனக்கு ரொம்ப பிடித்த வரிகள் நீங்கள் சொன்னது தான்
ReplyDeleteஹை சூப்பருல்ல .. :)
ReplyDeletethank u siva
ReplyDeleteஒருவர் நம்மை பாதிப்பதை உணரும் போதே அலெர்ட் ஆகி கவனமா குறுக்குச் சுவரை பலமா எழுப்பிக்கிறவங்க தப்பிச்சிடுறாங்க . மத்தவங்க பனால்
ReplyDelete//
Ha ha ha. Its True :D
ரொம்ப எளிமையா எழுதறிங்க :)
செல்ல நாய்க்குட்டி மனசு மனைவி ஏற்கனவே அன்பு செலுத்துபவள்தான் ஆனால் சகோதரியரைப்பார்த்ததும் இன்னும் அதிக அன்பு செலுத்துகிறாள்
ReplyDeletekaathal patriya ungal pathivu mika nalla pathivum kooda. vaalthukkal
ReplyDeleteAnd also thank you to visit my blog, thala.
//மனதின் இறந்த செல்களை உதிர்த்து புதுசெல்களை பிறப்பிக்கும் காரணி காதல்//
ReplyDeleteரொம்ப சரியான வரிகள்.. ஹ்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம்.. :(
காதலர் தின நல்வாழ்த்துக்கள்..
ReplyDeletei am a follower of ur photo session murali kumar
ReplyDeletethank u for the wishes
மனதை இளமையாக வைத்துக் கொள்ளுங்கள். அது என்ன அந்தக் காலம்?
ReplyDeleteநன்றி மணிகண்டன்
திவ்யா ஹரி தங்கள் முதல் வரவு நல் வரவு ஆகுக.
ReplyDeleteநாய்க்குட்டி மனசு said...
ReplyDeleteநன்றி கருணாகரசு. நீங்களும் காதலித்துக் கொண்டிருந்தால் காதல் ஜெயிக்க வாழ்த்துக்கள்//
நான் காதலித்து தோல்விகண்டு... பின் காதலித்து வெற்றி கண்டவன்.