Bio Data !!

25 December, 2011

ராஜ பாட்டை - திரை விமர்சனம் .


நானும் பார்த்தேன் ராஜ பாட்டை.
பண்டிகைக்கு எல்லோரும் சேர்ந்ததனால் நல்ல ஒரு படம் பார்ப்போம்(!) என்ற ஆசையில், தெய்வத் திருமகள் தந்த மயக்கம் இன்னும் முழுவதுமாக போகாத நிலையில் "ராஜ பாட்டை"யை தேர்ந்தெடுத்தோம்.
ஆக மோசமான ஒரு முடிவு.
இதுவே போதும் என நினைக்கிறேன் படத்தை விமர்சனம் செய்வதற்கு.
படம் ரிலீஸ் ஆன வெள்ளிக்கிழமை அன்றைக்கே படத்தின் டிக்கெட் ரேட் பார்த்து எனக்கு கொஞ்சம் சந்தேகம் தான்.

 இயக்குனர் :சுசீந்திரன்
நடிகர் : விக்ரம்
நடிகைகள்: ஸ்ரேயா, ரீமாசென்
என எதிர்பார்ப்புகள் கூடி இருந்தது.

படம் முடிந்து வணக்கம் போட்டுட்டாங்க இன்னும் ஸ்ரேயா, ரீமாசென்னை காணோமேனு பார்த்தா ஒரு சைட்ல பெயர்கள் ஓடுது அடுத்த  சைட்ல பிகர்கள் (ச்சே !சிபி பதிவுகள் வாசிப்பதன் பாதிப்பு) ஆடுது.  அவ்வளவு தாங்க அவர்கள் இருவரின் பங்கு.

விக்ரம் "தெய்வத் திருமகள்"க்காக உடம்பை வருத்தியதன் பாதிப்பு இதில் அதிகம் தெரிகிறது. முகத்தில் கவர்ச்சி குறைந்து இருக்கிறது. நடிப்பில் கவர்ச்சி குறைந்து விடக்கூடாது என்பதற்காக ஒரே பாடலில் பதினெட்டு விதமான கெட் அப்பில் வருகிறார். ஆனாலும் பிரயோஜனமில்லை பல கெட் அப்புகளில் அவர் தான் விக்ரம் என்று கண்டுபிடிப்பதற்குள் காணாமல் போய்
 விடுகிறார். ஒரே அடி தடி ரகளை. எதற்காக இப்படி ஒரு கதைக்கு விக்ரமை தேர்ந்தெடுத்தார் இயக்குனர்? விடை தெரியாத கேள்வி.

"வெண்ணிலா கபடிக் குழு" "அழகர்சாமியின் குதிரை" போன்ற அருமையான படங்களை எடுத்த இயக்குனர் சுசீந்திரனின் படம் என்பதால் நடிக்க ஒப்புக் கொண்ட விக்ரமைப் போலவே நாமும் ஏமாந்தோம். எடுக்கப் பட்ட கதைக் கரு அருமையான ஒன்று. நில அபகரிப்பு ! புகுந்து விளையாடக் கூடிய கதைக் களம். வில்லியாக வரக் கூடிய அரசியல்வாதி "அக்கா" அருமையான தேர்வு. ஒரு முக்கியமான பாத்திரத்தில் கே. விஸ்வநாத். இவ்வளவு இருந்தும் .......


கே. விஸ்வநாத் தனக்கு நகைச்சுவையிலும் கலக்கத் தெரியும் என நிரூபித்திருக்கிறார். ஹீரோயினை வசப்படுத்த ஹீரோவுக்கு அவர் கொடுக்கும் ஒவ்வொரு திட்டங்களும் சிரிக்க வைக்கின்றன. இதற்காகவே இளைஞர்கள் ஒரு வேளை  பார்க்கலாம். திரைப்படங்களில் பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கும் ஒரு வழக்கம் இருக்கிறது. ஆனால் நடைமுறையில் அப்படி இருப்பதாக தெரியவில்லை. இயக்குனராக வரும் தம்பித்துரை தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். முதியவர் என்று மதிக்காமல் நடத்துவதும், அதற்காக விக்ரம் அவருக்கு 300  கோடி சொத்து வரப் போவதாக பொய் சொன்னதும்  , அதன் பின் குழைய ஆரம்பிப்பதுமாக நன்றாக நடித்திருக்கிறார்.


ஹீரோயின் தீக்க்ஷா சேத். இந்தப் படத்துக்கு இவ்வளவு போதும் என்று தேர்ந்தெடுத்திருப்பார்கள் போல் தெரிகிறது. உணர்வுகள் முகத்தில் கொஞ்சம் கூட தெரிந்து விடக் கூடாதென்பதில் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார். ஆனால் இயக்குனருக்கு பிடித்த(!?!), வித்தியாசமான நீல நிறத்தில் உடை உடுத்தும் போது சிறப்பாக தெரிகிறார். இதற்காகவே இவரை தேர்ந்தெடுத்திருப்பாரோ இயக்குனர் தெரியவில்லை.

இசை யுவன் சங்கர் ராஜாவாம்!!
அடிதடி படங்களுக்கு என ஒரு கூட்டம் அடியாட்களை ( அவர்களுக்கு எண்ணை செலவும் இல்லை மேக் அப்  செலவும் இல்லை ) விடும் பழக்கத்துக்கு யாராவது போர்க்கொடி  உயர்த்தினால் தேவலை.
கொஞ்ச நேரம் நகைச்சுவையை ரசிக்க மட்டுமே நினைத்தால் படத்துக்கு  போகலாம் .

24 December, 2011

HAPPY HAPPY X'MAS; MERRY MERRY X'MAS




அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்
இப்படிக்கு
அன்புடன்
செல்ல நாய்க்குட்டி

19 December, 2011

"சந்தைப்பேட்டை"


கடந்த ஞாயிறு அன்று ஒரு இடத்துக்கு செல்ல முடிவு செய்தோம். கிறிஸ்துமஸ் நெருங்கி வருவதால் சிலர் சேர்ந்து ஒரு முப்பது பேர் சாப்பிடும் அளவில் உணவு தயார் செய்து, கூடவே சில துணி மணிகளையும் எடுத்துக் கொண்டு சென்றோம். சென்ற இடத்துக்கு பெயர் "சந்தைப்பேட்டை" நெல்லையில் இருந்து புளியம்பட்டி செல்லும் வழியில் இருக்கிறது. சின்னதாக "சவேரியார்" கோயில். உள்ளே போய் இறங்கியதும் வெறிச்சென்று இருந்தது. எனக்கு இது தான் முதல் தடவை. ஆனால் என் கூட வந்திருந்தவர்கள் வழக்கமா நிறைய பேர் இருப்பார்கள் இப்போ எங்கே ஒருவரையும் காணோம் என்று சொல்லிய படியே உணவு பாத்திரங்களை இறக்கினார்கள்.

ஒரு வயதான அம்மா வந்து "இங்கே நாங்கள் இருபத்தியைந்து குடும்பங்கள் இருக்கிறோம். கிறிஸ்துமஸ்க்கு துணி குடுக்கிறாங்கன்னு எல்லோரும் பாளையம்கோட்டைக்கு போய் இருக்கிறாங்க" னு சொன்னாங்க. அப்பொழுது தான் கவனித்தேன் ஒவ்வொரு மரத்தின் அடிவாரத்திலும் ஒருவர். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பக்கத்தில் சென்று பார்க்கும் போது திடுக்கிட்டேன். ஒவ்வொருவரும் மரத்தோடு இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டு பூட்டப் பட்டிருந்தார்கள். எனக்கு "சேது" படம் ஞாபகம் வந்தது. எங்களை பார்த்ததும் ஒருவர் குப்புறப் படுத்து இரண்டு கால்களையும் ஆட்டிய படியே "எல்லோரும் ஓடி வாங்க பாயாசம் வருது. பாயாசம் வருது" என்று சத்தமாக சொன்னார்.


 நல்ல வேளையாக நாங்கள் சாப்பாட்டுடன் பாயாசமும் கொண்டு வந்திருந்தோம். அவர் பேசுவது எல்லாம் தெளிவாகத் தான் இருந்தது. அப்புறம் ஏன் இப்படி? இப்படியே ஒவ்வொருவர் பக்கத்திலும் சென்று உணவும், பாயாசமும் வைத்து, ஒரு ஷர்ட் டும் கொடுத்து நகர்ந்தோம். ஒருவரின் கண்களில் உலகத்து சோகம். ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இன்னும் ஒருவர் தானாகவே குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தார். கழுத்தில் கனத்த மாலை அணிந்து இருந்த ஒருவர் உணவை வாங்கியவுடன் "வாட்டர்! வாட்டர் !" என்றார். நாங்கள் என்ன செய்வது என்று யோசிக்குமுன் ஒரு பெரிய பாட்டிலை எங்களை நோக்கி வீசி பைப் இருக்கும் திசை நோக்கி " போய்யா, போ..... போ...." என்பது போல் கை காட்டினார். இன்னும் ஒருவர் ஆட்டோக்காரரிடம் மறைவாக சைகையால், சிகரெட் கிடைக்குமாவென கேட்டிருக்கிறார்.

நோயாளிகள் மரத்தோடு கட்டப்பட்டும் அவர்களுடன் வந்த உறவினர்கள் தங்கள் பெட்டி படுக்கையோடு ஒதுக்கமா ஒரு இடத்திலும் இருக்கிறார்கள். வயதான ஒரு தாத்தா கையில் கெளட்டா பெல்ட் வைத்திருந்தார். "இது எதுக்கு தாத்தா?" என்றேன்.
"எங்க சாப்பாட்டில காக்கா வாய் வச்சிருது. அதை விரட்ட தான் இது."
"யாருக்கு உடம்பு சரியில்ல?" கொஞ்சம் பயந்து கொண்டே தான் கேட்டேன். நோயாளியா ? நோயாளியின் உறவினரா என்பது நிச்சயமாக தெரியாத நிலையில்.
"என் பொண்டாட்டிக்கு தான் உடம்பு சரியில்லை. ஒரே பையனுக்கு கல்யாணம் செஞ்சு வச்சோம். அவன் மாமியார் இவளுக்கு செய்வினை வச்சிட்டா. ஒரே பொலம்பல். தாங்க முடியாம தான் இங்கே கொண்டு வந்தோம். " என்றவர் தொடர்ந்து அரசியல் பேச ஆரம்பித்து விட்டார். "வெள்ளைக்காரன் ஆட்சியில் இப்படி எல்லாம் செய்வினை வைக்க முடியுமா? சுட்டுருவான். இப்போ நாம சுதந்திரம் வாங்கி இருக்கோம்னு தான் பேரு. எல்லோரும் கொள்ளை அடிக்கிறாங்க. பணக்காரங்க தான் வாழ முடியும். ஏழை பாழைங்க புழைக்க ஒரு வழியும் இல்லை. " என்றவர் கொஞ்ச நேரம் கழித்து "எதோ தோணினதை சொல்லிட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்கம்மா " என்றார்.
"அதெல்லாம் பரவா இல்லை தாத்தா. எல்லோரும் அமைதியா தானே இருக்காங்க ஏன் எல்லோரையும் கட்டி போட்டு இருக்காங்க?" என்றேன்.
"அமைதியா தான் இருப்பாங்க. ஆர்ப்பாட்டம் ஆரம்பிச்சிட்டா யாரும் பக்கத்தில இருக்க முடியாது. அவங்க உறவுக்காரவங்க தான் எல்லாம் கவனிச்சு செய்து விடணும்." என்றார்.

திரும்பி வந்ததில் இருந்து எனக்கு  மனதே சரியில்லை. அவர்கள் செய்வினை என்று சொன்னாலும் அது ஒரு விதமான மன நோய் தானே. அவர்களை தனிமைப்படுத்தி கட்டி வைத்தால்  சுகமாக வழி ஏது? இன்னும் அதிகமாக வல்லவா செய்யும்? அனைவருமே வறுமைக் கோட்டுக்கும் கீழே உள்ளவர்கள். மருத்துவம் அது இது என்று செலவு செய்ய வழி இல்லாதவர்கள். கண்ணுக்கு தெரியும் மனிதர்கள் மேல் நம்பிக்கை இழந்து கண்ணுக்கு தெரியாத கடவுள் தாம் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என்று நம்பி அங்கு வந்து வருடக் கணக்கில் இருப்பவர்கள். 

 என் குழந்தைகளை அங்கே அழைத்து வந்து காட்ட வேண்டும். நாம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் என்று புரிந்து தங்கள் சிரமங்களை சுலபமாக சுமந்து கொள்ளும் பக்குவம் பெறுவார்கள்

17 December, 2011

ஜோதி ஆம்க்.


"உலகில் உயிரோடு உள்ள மிகக் குள்ளமான பெண் என்கிற கின்னஸ் சாதனை படைத்த இந்தியரான ஜோதி ஆம்க். இவர்தான் உலகில் உயிரோடு உள்ள மிகக் குள்ளமான சிறுமி என்கிற கின்னஸ் சாதனைக்கு சொந்தக்காரி. 

இவரின் உயரம் 24.3 அங்குலம் மாத்திரம். இந்தியாவின் நாகப்பூர் நகரத்தைச் சேர்ந்தவர்.
கடந்த ஆண்டு தனது 17 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினார். ஆனால் இநத ஆண்டு இச்சிறுமி தனது பிறந்த நாளுடன் யுவதி என்கிற ஸ்தானத்தை அடைந்தார். உலகின் மிக குள்ளமான யுவதியாக கடந்த ஆண்டு இருந்தவர் துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். அவரின் உயரம் 28.6 அங்குலம். ஜோதி அவரை விட 4.3 அங்குலம் குள்ளமான பெண்ணாக உள்ளா். எனவே, உலகின் மிகக் குள்ளமான யுவதி என்கிற நாளை அடைந்த மகிழச்சியில் தற்போது அவர் இருப்பதாக தெரிகிறது."

இந்த  செய்தி என்னைக் கவர்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. கொஞ்ச நாட்களுக்கு முன் விஜய் டி வி யின் "நீயா? நானா? " நிகழ்ச்சியில் பெண்கள் அலங்காரம் செய்வதைப் பற்றிய விவாதம். அதில் Dr. ஷாலினி பெண்கள் தன்னை அழகு படுத்திக் கொள்வதே ஆண்களை கவர்வதற்காகத் தான் என்று சொன்னார். எல்லா விலங்கினங்களுக்கும் பறவைகளுக்கும் இந்த குணம் உண்டு என்றார். ஆனால் விலங்கினங்களையும் பறவைகளையும் தாண்டி நமக்கு ஆறாவது ஒரு அறிவு இருக்கிறது என்பதை மறந்து விட்டார் போலும். 



இந்த படத்தை பார்த்ததும் எனக்கு அது தான் நினைவுக்கு வந்தது. "உலகத்திலேயே" குள்ளமான பெண். அதைப் பற்றிய எந்த தாக்கமும் இன்றி அழகான ஒரு பார்பி டால் போல எவ்வளவு அழகாக, நேர்த்தியாக உடை உடுத்தி, அலங்காரம் செய்து, நிற்கிறது பாருங்கள். இந்தப் பெண்ணின் அலங்காரத்திற்கும் Dr .ஷாலினி இதே காரணம் தான் சொல்வாரா? 

ஒரு அலுவலகத்தில் ஆண்களோடு ஒற்றை ஆளாய் பணி புரிவதை விட பல பெண்களோடு பணி புரியும் போது தான் ஆடை அணிகலன்களில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். சில பெண்களுக்கு இயல்பாகவே தங்களை அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகம் இருக்கும். இன்று ஆண்களும் போட்டிக் களத்தில் இறங்கி விட்டார்கள். எனவே அலங்காரம் செய்வது என்பது ஒவ்வொரு தனிப்பட்ட ஆளின் இயல்பே அல்லாமல் பொதுவான ஒரு குணத்தில் வகைப்படுத்துவது தவறாகும். 

நான் சொல்வதை கவனித்துப் பாருங்கள். பத்து பேர் பணி புரியும் ஒரு இடத்தில் பத்து பேரும் உடையில் அதிக அக்கறை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். பதினோராவதாக
ஒரு பெண் (அல்லது) ஆண் நன்கு உடை உடுத்தி புதிதாக வந்து சேர்கிறார் என்றால் அதன் பின் அந்த பத்து பேரிடமும் உடையில் ஒரு மாற்றம் ஏற்படும். ஆனால் அந்த மாற்றம் நிரந்தரமானதல்ல. கொஞ்ச நாள் ஆனதும் அவரவர் இயல்பான நிலைக்கு போய் விடுவார்கள். எனவே உடை உடுத்துவதிலும் அலங்காரத்திலும் அதிக கவனம் செலுத்துவது என்பது தனிப்பட்ட நபரின் இயல்பே அல்லாமல் கவரும் நோக்கத்தில் அல்ல. 

பொதுவாகவே நம் மக்களிடம் ஒரு எண்ணம் இருக்கிறது. அலங்காரத்தில் அதிக முக்கியத்துவம் காட்டும் பெண் நிச்சயமாய் நடத்தையில் நேர்மையாய் இருக்க வாய்ப்பு குறைவு என்று.  அது மிகவும் தவறான கருத்து. பார்ப்பதற்கு சுமாராய் , கவர்ந்திழுக்காதவராய் இருவர் பேசிக் கொண்டிருந்தால் நாம் ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுவோம். இதுவே கொஞ்சம் பளிச்சென்று உடை உடுத்தி இருந்தார்கள் என்றால் கற்பனை குதிரையை தட்டி விடுவோம். இங்கே தான் கோளாறு இருக்கிறதே தவிர உடை உடுத்துவதில் இல்லை.

 பதிவர் கௌசல்யா Dr  .ஷாலினியின் கருத்தைப்  பற்றி பதிவு எழுதி வைத்துக் கொண்டு "ரொம்ப நாள் ஆயிடுச்சே அக்கா போடலாமா?" என்று முன்பு கேட்டிருந்தார். நல்ல சந்தர்ப்பம் இது கௌசல்யா. அலங்காரம் செய்வது தொடர்பான உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்களேன்.

15 December, 2011

வாழ்க பல்லாண்டு !!

14.12.11  அன்று மாலை "உணவு உலகம்" பதிவர் திரு சங்கர லிங்கம் அவர்கள் அன்பு மகளின் நிச்சயதார்த்த விழா. எல்லோரிடமும்  அன்பும் அக்கறையும் எடுத்து பழகுபவர் கண்டிப்பாக செல்ல வேண்டும் என்று முடிவு எடுத்தேன். முக்காலே மூணு வீசை நிகழ்ச்சிகளுக்கு அவசர அவசரமாக பணி முடிந்து செல்வதே வழக்கமா போச்சு. இவர் வேற வர்றவங்கள போட்டோ எடுத்து பதிவு போட்டுருவாரே , வீட்டுக்கு வந்து பிரெஷ்ஷா போவோம்னு நினைச்சேன். 

மதியமே கெளசல்யாவிடம் பேசி ஆறு மணிக்கு போவோம்னு சொல்லியாச்சு. எதிர்பார்த்தபடியே மாலை 4 .55 க்கு அலுவலகத்தில ஒரு அவசர வேலை வந்து விட்டது. அரக்க பரக்க மாற்று ஏற்பாடு செய்து வீட்டுக்கு பறந்து(!) லேசா ஒரு டச் அப் செய்து, நிகழ்ச்சிக்கு புறப்பட்டு பாதி தூரம் வந்த பின் தான் நினைவுக்கு வருகிறது ஹெல்மெட் எடுக்கவில்லை என்பது. இப்போ நெல்லையில் பயங்கர கெடுபிடி. வண்டி ஓட்டும் ஒருவரையும் அடையாளம் தெரியாது. எல்லோரும் கொள்ளையர்கள் போல முகமூடியோடு தான் அலைகிறார்கள். 

வழக்கம் போல் சாமியை தொந்தரவு செய்து "சாமி! எல்லா போலிஸ்காரங்களும் போண்டா சாப்பிட போய் இருக்கணும்.நான் மாட்டிக்க கூடாது" என்ற படியே அப்பாடா !ஹோட்டல் ஜானகிராம் வந்து விட்டேன். உள்ளே நுழையும் போது நிகழ்ச்சிகள்  நிறைவை நெருங்கிக் கொண்டிருந்தன. என்னைப் பார்த்ததும் வாசல் வரை வந்து வரவேற்றார் சங்கரலிங்கம். இந்த அன்புக்காக தான் எப்படியாவது வந்து விட வேண்டும் என்று நினைத்தேன். அரங்கத்துக்குள் கண்களை மட்டும் நீந்த விட்டேன். கிடைத்து விட்டது தூண்டில். தம்பதி சமேதராய் ஜோ &கௌசல்யா அருகிலேயே பதிவர் ராமலிங்கம் அவர் மனைவியுடன். நானும் சென்று அவர்கள் அருகில் அமர்ந்தேன். எனக்கு திருமணங்களில் நெருங்கிய உறவினர்கள் ஒன்றாக குழுமமாக சேர்ந்து இருப்பது ஞாபகம் வந்தது .பதிவர்களும் நண்பர் என்ற நிலை தாண்டி உறவுகளாகத் தானே ஆகிக் கொண்டு இருக்கிறார்கள். 
சங்கரலிங்கம் வந்து "எறும்பு ராஜகோபாலும் " வந்திருக்கிறார் என்றார். இவரும் ஒரு பிரபல பதிவர் கொஞ்ச நாளாக "பஸ்" சிலேயே சுற்றிக் கொண்டு இருப்பதால் பதிவு போடுவதில்லை. மேலே மாடிக்கு சாப்பிட போய் இருக்கிறார் என்றார். அருகில் நின்றவர் "நான் தான் எறும்போட அம்மா" என்றார். "இவர் தான் எறும்போட சித்தி, இவர்தான் எறும்போட தங்கை " என்று ஒரு எறும்பு அறிமுகம். சிலரை பார்த்ததும் 'பச்சக்' என்று பிடித்து போகும். அப்படித்தான் ராஜகோபாலின் அம்மாவும். கலகலப்பான பெண்மணி. சங்கரலிங்கம் சாரோட மனைவி இடமும் அறிமுகம் ஆகிக் கொண்டோம். 

ராஜகோபாலை பார்க்கலாம் என மாடிக்கு போனால் அவர் இன்னொரு லிப்ட்டில் கீழே வந்து விட்டார். கண்ணாமூச்சி ! நான், கௌசல்யா, அவர் கணவர் மூவரும் சாப்பிட சென்றோம். 'அபிநயா ஹாலை' பார்த்ததும் மலரும் நினைவுகள். அங்கே தான் நெல்லை பதிவர்களும் மற்றவர்களும் சந்தித்தோம். அறையின் ஒரு ஓரமாக ஆபிசர் பெல்டுடனும் (இவர் நிகழ்ச்சியை விட்டு இங்கே எங்கே வந்தார்?)மனோ அரிவாளுடனும், சிபி பசையுடனும்
(காப்பி & பேஸ்ட் க்காக ) செல்வா ரம்பத்துடனும், சித்ரா இடுப்பில் இரு கை ஊன்றி "ஹா!!ஹா!!" என சிரிப்புடனும் இன்னும் மற்றவர்கள் எல்லாம் அவரவர் தம் ஆயுதங்களுடனும் நிற்பது போல் தோன்றியது. என்ன ஒரு மகிழ்ச்சியான தருணம்!!

சிறப்பான சாப்பாடு.ஸ்பெஷல் ஐட்டம் சைவ கொத்து பரோட்டா. கௌசல்யாவுக்கும் அவர் கணவருக்கும் இடையே இருக்கும் அன்னியோன்னியம் எனக்கு எப்போவுமே பிடிக்கும். இப்போதும். அவர்கள் இருவரும் சேவை செய்வதில் இரு கரங்களையும் இறுக்கமாக சேர்த்துக் கொண்டு இருக்கிறாகள். மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!
 திடீரென்று கௌசல்யாவின் கணவர் யாரையோ பார்த்து உற்சாகமாக கை அசைத்தார் . யாரென்று பார்த்தால் "திவான்ஜி" 

நாங்கள் கீழே செல்லும் போது ராஜகோபால் மறுபடியும் மாடி ஏறி விடக் கூடாது என்பதால் அலைபேசியில் தகவல் அனுப்பி அவசர அவசரமாக கீழே சென்றோம். எங்களைப் பார்த்ததும் சங்கரலிங்கம் ஒருவரைப் பார்த்து "கண்ணா" என்றழைத்தார். செல்லப் பெயர் வைப்பதில் தட்டுப்பாடு.  அநேகம் பேர் "கண்ணா" என்றே வைத்துக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆகியதும் பேச்சு பதிவுலகம் பக்கம் திரும்பியது. பதிவுலகம் எப்படி "யாதும் ஊரே !யாவரும் கேளிர்!" என்று வெளி நாட்டில் இருப்பவர்களையும் நெருக்கமாக்கி வைத்திருக்கிறது என்று வியந்து கொண்டோம். எறும்பு ராஜகோபால் பல விஷயங்கள் பகிர்ந்து கொண்டார். அவர் பேசும் ஸ்டைல் நன்றாக இருந்தது. 

நேரமாகி விட்டதால், அனைவருக்கும் நன்றி சொல்லி விடை பெற்றோம். நிச்சயதார்த்தத்துக்கு தாம்பூலப் பை கொடுத்தது எனக்கு தெரிந்து இங்கே தான் முதன் முதல். கேட்ட போது ராஜகோபால் "ஒரு பொண்ணு தானே செய்வார்" என்றார். அப்பொழுது பொண்ணைப் பார்க்க, வீடியோ காரருக்கு இரு கைகளையும் சேர்த்து 'மெகந்தி போஸ்' கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

மீண்டும் சாமியை வேண்டிய படியே போலீஸ் மாமாவிடம் மாட்டிக் கொள்ளாமலே வீடு வந்து சேர்ந்தேன்.  நிகழ்ச்சியை பற்றி ஒண்ணும் சொல்லலையேனு பார்க்கிறீங்களா அது ஆபீசர் நிச்சயம் பதிவு போடுவார். 
மணமக்கள் நீடுழி வாழ வாழ்த்து மட்டும் சொல்லிக்கிட்டு நான் 'எஸ்' ஆகிறேன்.

13 December, 2011

இதழ்களை இரவல் கொடு!!

பட்ட மரம் கூட அழகாக இருக்கும், எடுக்கும் விதத்தில் எடுக்க வேண்டிய நேரத்தில் எடுத்தால்.
நான் புதிய அலுவலகம் பணி ஏற்றதும் கண்ணில் பட்டது இந்த பட்ட மரம் தான்.(ஆமாம்க ஆமாம் இது நானே எனது செல்லில் எடுத்த புகைப்படம் தான்)  அலுவலகத்தில் நுழைந்ததும் இப்படி நிற்கிறதே எடுக்க சொல்வோம் என்று எண்ணி தான் உள்ளே நுழைந்தேன்.
மாலையில் வெளியே வரும் போது அழகான நீல பின்னணியில் பட்ட மரம் கொள்ளை அழகாய் இருந்தது.
 என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். ஏதாவது மெல்லிய கொடியை
 படர விடுவோம் என முடிவு செய்து கொண்டேன்.
அருகில் இருந்தவர் என்னைக்காவது கீழே விழுந்துடுமே என்றார். அதை அன்னைக்கு பார்த்துக்குவோம். ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து விடலாம் என்றேன்.
பிரச்னை வந்து விடுமோ என பயந்து தானே பாதி காரியங்களை முயற்சி செய்து கூட பார்க்க மாட்டேன் என்கிறோம்.
துணிந்தவனுக்கு ஒரு நாள் சாவு.
கோழைக்கு தினம் தினம் சாவு.

***  face book எனது பழைய காதலை பரணில் இருந்து இறக்கி தூசு தட்டி பள
 பள வென ஆக்க முயற்சிக்கிறது. உதாரணத்துக்கு ஒண்ணிரண்டு கீழே :

சேர்ந்திருக்கும்
சிறு நொடிப் பொழுது
உன் இரு இதழ்களை
எனக்கு இரவல் கொடு.
                 *****
காத்திருந்து , காத்திருந்து
காயம் பட்ட
நகக்கண்கள்,
உதடுகளிடம் முறையிட்டன
காயம் பட நான்
காதலிப்பது நீயா என்று .\
                ******
நல்லாஇருக்கா??

09 December, 2011

காலத்தின் வளர்ச்சி !!

நான் சின்ன பிள்ளையா இருந்தப்போ எங்க வீட்டுக்கு எதிர் வீட்டில ஒரு பாட்டி இருந்தாங்க. கலர்னா கலர் அப்படி ஒரு எம்ஜிஆர் கலர். வயது எண்பதுக்கு
மேல் இருக்கும். தாத்தாவும் அவ்வளவு வயசுக்கு இருந்தார். ப்ரீயா (அப்போல்லாம் டி வீ இல்லாததாலே நிறைய நேரம் கிடைக்கும்.) இருக்கும் போதெல்லாம் அவங்க வீட்டு வாசல் படியில் உட்கார்ந்து கதை கேட்பது வழக்கம். எல்லாம் வாழ்க்கை கதை தான். இடையிடையே தெருவில் போறவர்களை குசலம் விசாரிக்க போய்டுவாங்க .பொறுமையா இருந்தா நல்ல கதை கிடைக்கும். 

"பாட்டி, உங்களுக்கு எத்தனை வயசில கல்யாணம் நடந்திச்சு?" எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத கதை. சில இடங்களில் அவர்கள் மூச்சு விட நேரம் எடுத்துக் கொள்ளும் போது தொடர்ந்து நாங்கள் சொல்லும் அளவுக்கு எங்களுக்கு மனப்பாடம் ஆகி இருந்தது. கல்யாணம் ஆகுறப்போ "எனக்கு 8 
தாத்தாவுக்கு 18 " என்பார்கள். புதுத் துணிக்கும், பூவுக்கும் அலங்காரத்துக்கும் ஆசைப்பட்டே கல்யாணம் நடந்ததாக சொல்வார்கள். திருமணம் ஆகி நாலைந்து வருடங்கள் ஆனா பிறகு தான், தான் 'பெரியவள்' ஆனதாக சொல்வார்கள். ஒரு பெண்ணின் மனதில் ஆணைப் பற்றிய ஆர்வம் வரும் முன் திருமணம் முடித்து விடுவதால் பெண் வழி தவறிப் போகும் வாய்ப்புகள் குறைவு என்பார்கள். ஓடிப் பிடித்து விளையாட வேண்டிய வயதில் இப்படி மணையில் உட்கார்த்தி வைத்திருக்கிறார்களே என்று எனக்கு ஆதங்கமாக இருக்கும்.

எனக்கு திருமணம் ஆகும் போது வயது இருபது. கல்லூரிப் படிப்பு முடித்ததும் காதல் அவசரத்தால் திருமணம். குழந்தை வளர்ப்புக்கு அந்த வயது முதிர்ச்சி பத்தாதாக இருந்தது. அம்மா திட்ட திட்ட இரவில் உறங்கிக் கொண்டே பாலூட்டி வளர்த்தது நினைவுக்கு வருகிறது. குழந்தையின் குறும்புகளை ரசிக்கத் தெரியாமல் தொந்தரவாக நினைத்ததற்கும் வயது தான் காரணம் என்று நினைக்கிறேன். 

என் மகளுக்கு திருமணம் செய்ய முடிவு எடுத்த போது உயர் படிப்பு முடித்து, சில காலம் பணி புரிந்து அதன் பின் தான் திருமணம் என்பதில் தீர்மானமாக இருந்தாள். அது அப்போது எனக்கு மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருந்தது. கொஞ்ச நாளில் தான் அது இந்தக் காலத்திய எல்லா குழந்தைகளுக்குமான எண்ணம் என்று புரிந்தது. இந்த வயது முதிர்ச்சியாலேயே அவள் மகனை வளர்க்கும் போது அவனது எந்த செயலையும் ரசிக்கும் பக்குவம் வந்திருக்கிறது. 

இப்படிப்பட்ட வளர்ச்சி அடைந்திருக்கும் நாட்டில் தான் இன்றும் "குழந்தை திருமணம்" நடப்பில் இருக்கிறது. எட்டு வயது பத்து வயது குழந்தைகள் தங்களுக்கு குழந்தை திருமணம் முடிப்பதை எதிர்த்து அவர்கள் சொந்தங்கள், இனம் எல்லோரையும் பகைத்து வெற்றி கண்டிருக்கிறார்கள். அதனாலேயே ஜனாதிபதி பிரதிபா பட்டேலிடம் பாராட்டும், பரிசுப் பணமும் வாங்கி இருக்கிறார்கள். அந்த நிகழ்வின் சந்தோஷத்தை இன்னும் நெஞ்சில் சுமந்தபடி வளைய வருகிறார்கள். ஜனாதிபதி அவர்கள் இந்த குழந்தைகள் இதை மற்ற குழந்தைகளிடமும் சொல்லி அவர்களையும் குழந்தை திருமணத்தில்இருந்து காப்பாற்ற வேண்டும் என்று சொல்லி அனுப்பி இருக்கிறார்கள். 

இன்றைய நமது வாழ்த்தை அந்த குழந்தைகளுக்கு உரியதாக்குவோம் !!

07 December, 2011

சிந்தியுங்கள் நண்பர்களே!!

நெல்லையில் ரெண்டு நாட்களுக்கு முன் நடந்த ஒரு செய்தி. சைக்கிளில் சென்ற ஒரு பள்ளி மாணவியின் மேல் ஒரு கார் மோதி இருக்கிறது. அந்த காரில் இருந்தது சென்னையில் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் ஒரு மாணவன். சைக்கிளில் இருந்து தூக்கி எறியப்பட்ட பெண்ணுக்கு  மருத்துவமனை சென்று கொஞ்ச நேரத்திலேயே மரணம். 

செய்திகள் கசிகின்றன. இதில் எத்தனை சதவிகிதம் உண்மை என்பது போக போகத் தான் தெரியும். மாணவன் சென்னையில் படித்தாலும் நெல்லையை சேர்ந்தவன். கொஞ்ச காலமாகவே அந்த பெண்ணை பைக்கில் தொடர்ந்து தொல்லை கொடுத்திருக்கிறான். பள்ளியில் இருந்தும் காவல் துறையில் கம்ப்ளைன்ட் கொடுத்திருப்பதாக செய்திகள் சொல்லுகின்றன. மாணவன் தவறுதலாக இடித்தானா அல்லது வேண்டுமென்றே செய்தானா என்பது தெரியவில்லை ஆனால் பெற்றவர்களுக்கு பிள்ளையை இல்லை என்றாக்கி விட்டான்.

காதல் என்பது அந்த வயதில் வர வேண்டிய ஒன்று என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மறுப்பவரை மறந்து ஒதுங்கி செல்வது தான் மனித நாகரீகம். ஒருவரிடம் தன் காதலை சொல்லும் போதே அதற்கான பதில் 'எஸ்' என்றும் இருக்கலாம் 'நோ' என்றும் இருக்கலாம்  என்ற எதிர்பார்ப்போடு சொல்லுங்கள் . அப்பொழுது அவர்கள் சொல்லும் 'நோ' உங்களை காயப்படுத்தாது. இல்லை என்றால் 'என்னை எப்படி மறுக்கலாம்' என்று சுய கௌரவம் பாதிக்கப்பட்டதாக நினைத்து ,அதுவே எல்லை மீறும் போது
 விபரீதமாக நடந்து கொள்ள நேரிடும். "சரிகா ஷா" மரணித்த பின்னும் இன்னும் நினைவுகளில் உயிரோடு தானே  இருக்கிறாள்.

மோதிய பையன் வசதி படைத்தவனாய் இருந்தால் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விடலாம். ஏன் ஒரு மத போதகராய் மாறி வெளி நாட்டிற்கு குடி பெயர்ந்து  கூட விடலாம். ஆனால் அந்த பெண்ணின் பெற்றோரை நினைத்து பாருங்கள். இழந்தது இழந்தது தான். எந்த பெண்ணும் கிடைக்கவில்லை என்பதற்காக யாரும் தேவதாசாகவே தேங்கி விடுவதில்லை. கடந்து செல்வது தான் புத்திசாலித்தனமும் கூட. அப்படி இருக்கையில், தன் அன்பை ஏற்றுக் கொள்ளாத பெண்ணை (அதற்கு பல நியாயமான காரணங்கள் இருக்கலாம்)  முகத்தில் ஆசிட் ஊற்றுவது, கொலை முயற்சி செய்வது, அவள் நிமதியான வாழ்க்கையை சிதைப்பது எந்த வகையில் நியாயமாக இருக்கும். 

காதலை மறுதலிப்பதை தன்னை அவமானப் படுத்துவதாக எடுத்துக் கொள்வது எவ்வளவு முட்டாள்தனமானது. அண்மையில் பார்த்து கோபம் கொண்ட ஒரு திரைப்படம் நினைவுக்கு வருகிறது. "மயக்கம் என்ன ?" ஒரு பெண்ணை எவ்வளவு முன்னெச்சரிக்கை அற்றவளாக காட்ட முடியுமோ அவ்வளவு தரம் தாழ்ந்து காட்டப்பட்ட கதை நாயகி. அவள் செய்யும் நல்ல செயல்கள் கூட திணிக்கப்பட்டதாகத் தான் தெரிகிறது. ஒரு திரைப்படம் எளிதாக விஷ விதைகளை ஊன்ற முடியும். தன்னை மறுப்பவளை எந்த வழியிலாவது அடைவது இல்லையேல் அழிப்பது என்ற கதை கண்ணோட்டம் மாறினால் தான் நடை முறையில் இருக்கும் இத்தகைய சோகங்களும் முடிவுக்கு வரும் 

 சிந்தியுங்கள் நண்பர்களே!! 

டிஸ்கி: இன்று செய்தி : தப்பிச் செல்ல முயன்ற மாணவனை காவல் துறை பிடித்து விட்டது. 

06 December, 2011

மந்திர விளைவுகள் !!

இன்று ஒரு சின்ன தகவல் சொல்லணும்னு தோணுச்சு.

எல்லோரும் பிள்ளைங்கள வளர்க்கிறாங்க, நாமும் வளர்க்கிறோம். ஆனால் புத்திசாலித்தனம் இல்லாத சாதாரண பெற்றோர்களின் குழந்தைகள் "நமக்கு உதவிக்கு யாரும் இல்லை நாமே தான் முன்னேறி கணும்   " என்ற நிலையில் தன்னம்பிக்கையோடு யாரை அணுகணுமோ அவர்களை அணுகி முன்னேறுகிறார்கள். ஆனால் புத்திசாலித்தனமாக தன்னை எண்ணிக் கொள்ளும் பெற்றோர்கள் தனது ஐம்பது வயது அனுபவத்தை மறந்து குழந்தைகளை விட தாம் அதி புத்திசாலிகள் என்பதை விளம்பரப் படுத்தும் நோக்கில் அவர்களை மட்டம் தட்டுகிறார்கள். அவர்கள் தன்னம்பிக்கையை சிதைக்கிறார்கள்.

ஏற்கனவே  தன்னம்பிக்கை குறைவாக உள்ள குழந்தை மேலும் மட்டம் தட்டப் பட்டால் இன்னும் உள்ளே அமிழ்ந்து போகும். பல வருடங்களுக்கு முன் நான் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணி புரியும் போது என் அதிகாரியின் மகன் எட்டு வயது இருக்கும். என்னுடன் வந்து அமர்ந்திருப்பான். அவன் சொன்ன ஒரு வார்த்தையை அங்கே வந்திருந்த ஒரு வாடிக்கையாளர் திருத்தினார். அதற்கு அவன்  " எனக்கு மொட்ட நாக்கு அது அப்படித் தான் வரும்"  என்றான். "சொல்லிப்பாரு சரியா வரும் " என்றார்.
அதற்கு அவன் " இல்ல எங்க அப்பா எனக்கு மொட்ட நாக்குன்னு தான் சொல்வாங்க " என்றான். நான் அதற்காக என் அதிகாரியிடம் சண்டை போட்டதாக கூட ஞாபகம். அவன் இருபது ஆண்டுகள் தாண்டிய பின்னும் இன்னும் ஏதும் வேலையில் நிலைப்பட வில்லை.

கொஞ்சம் உறுதியான குழந்தைகள், தான் மட்டம் தட்டப் படுவதையே எதிர்மறை இன்சென்டிவ் ஆக எடுத்து முன்னேறிவிடும். "உன்னால் முடியாது  என சொல்ல , சொல்ல முடித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி ஏறும். ஆனால் அநேகம் குழந்தைகள் அப்படி இருப்பதில்லை. அதனால்  கூடிய வரை அடுத்தவரை தாழ்த்தி பேசும் பழக்கத்தை விட்டொழிப்போம்.விளையாட்டாக பேசுவதாக நினைத்துக் கொண்டால் கூட அடிக்கடி அப்படி பேசும் போது கேட்பவருக்கு ஒரு வெறுப்பு தான் வளரும். 


எங்க வீட்டு செல்ல குட்டி இப்போ ஒரு மாதத்துக்குள் ஏகப்பட்டது படித்திருக்கிறது. அது படித்த விஷயங்களை அவனுடைய அம்மா எனக்கு செய்து  காட்ட சொன்னால் செய்ததும் "ஹேய்" என்று கத்திக் கொண்டு இரு கைகளையும் தட்டிக் கொள்ளும். கூட சேர்ந்து எல்லோரும் தட்டினாலும் தட்டாமல் வேறு ஏதாவது வேலை பார்த்துக் கொண்டிருந்தால், ஓடிச் சென்று அவர்கள் இரு கைகளையும் சேர்த்து தட்டச் சொல்லும். இந்த சின்ன வயசுக்குள்ளேயே அதற்கு தன்னை தானே உற்சாகப் படுத்திக்கொள்ள தெரிகிறது. 

நமது வார்த்தைகள் வலிமை நிறைந்தவை. அதை அளவாக, அழகாக பிரயோகிப்போம். பணி இடங்களில் கூட ஒரு சின்ன சொல் பல மந்திர விளைவுகளை ஏற்படுத்தும்.   செய்யும் வேலைகளில் எல்லாம் குறை கண்டு பிடித்துக் கொண்டே இருந்தால் செய்பவர்கள் கூட செய்யாமல் போகும் வாய்ப்புண்டு. இதன் இன்னொரு பக்கமாக மற்றவர் தன்னை பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் வைத்துக் கொள்ள வேண்டாம். சின்ன குழந்தை செய்வதை போல் நம்மை நாமே உற்சாகப் படுத்திக் கொள்வோம். ஏதாவது சிறப்பாக செய்து முடித்து விட்டேன் என்றால் எனக்கு நானே ஏதாவது பரிசு அளித்துக் கொள்வேன். அது மெகா சைஸ் ஐஸ் கிரீமாக இருக்கலாம். நெடு நாள் வாங்க நினைத்திருக்கும் ஒரு புத்தகமாக இருக்கலாம், ஒரு புடவையாக இருக்கலாம். பட்ஜெட் க்கு தக்க படி ஒரு சின்ன கிளிப் பாக கூட இருக்கலாம். 

நமக்கு நாமே ஒளியாக இருந்தால் வெளிச்சத்தை வெளியே தேட வேண்டியதில்லை .

30 November, 2011

எண்ணச் சிதறல்கள் !!


***இன்று என் அம்மா எழுபத்தைந்து ஆண்டுகளை முடித்து வெற்றிகரமான எழுபத்தியாராம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறார். உங்கள் சார்பாக எனது வாழ்த்துக்களை கூறி விட்டேன்.பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், பேத்தியின் மகன் என்று குடும்ப மரம் விழுது பரப்பி இருப்பதில் ஆக சந்தோஷத்தில் இருக்கிறார்கள், முப்பத்தி எட்டாம் வயதில் விதவையான என் தாய். அவர்களை அதே சந்தோஷத்தோடு நூறு வயது வரை கொண்டு செல்ல அந்த இறைவன் உதவ வேண்டும். கடந்த வருடம் எங்கள் அம்மாவை ஒரு பேட்டி கண்டு பதிவு போட்டேன். அதை பார்க்க
***இப்போ இருக்கிற கிளைமேட்டில், ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்து, குளித்து அம்மாவுக்கு ஒரு பரிசுப் பொருளாக ஒரு சேலையையும் எடுத்துக் கொண்டு (வழக்கமான முறைப்படி எல்லோரும் பணியில் இருக்கும் காரணத்தால் விழா தனியாக விடுமுறை தினத்தன்று) காரை ஓட்டிக் கொண்டு சர்ச்சுக்கு செல்லும் போது உலகமே சொர்க்கமாய் இருந்தது. அந்த நேரத்தில் வேக வேகமாய் நடை பயில்பவர்களில் அதிகம் பேர் வயதானவர்கள் தான். அதிலும் ஒருவர் இரு கைகளையும் வேக வேகமாக வீசி நடந்து கொண்டிருந்தார். காரை ஒரு ஓரமாக நிறுத்தி அவருடன் கொஞ்ச தூரம் அப்படியே நடக்க ஆசையாக இருந்தது.  

***இப்பொழுது எங்கள் ஊரில் சவேரியார் கோவிலில் திருவிழா நடந்து கொண்டு இருக்கிறது. சவேரியாரை பற்றி ஒரு கூடுதல் தகவல் தெரிந்து கொண்டேன். அது உங்களுக்காக. சீனாவுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக கப்பலில் செல்கிறார் சவேரியார். அவருடன் செல்கிறார் அன்டோனியோ. செல்லும் வழியிலேயே உடல் நலம் குன்றி இறந்து போகிறார். அருகில் உள்ள நாட்டில் அவரை புதைத்து விட்டு தொடர்ந்து செல்கிறார்கள். கிட்டத்தட்ட எண்பது நாட்களுக்குப் பின் திரும்பி அதே இடம் வரும் போது என்ன தோன்றியதோ அன்டோனியோ இறங்கி சென்று புதைத்த இடத்தின் கல்லை அகற்றி பார்க்கிறார்.

 இறந்த சவேரியாரின் உடல் அப்படியே இருக்கிறது. கப்பலின் கேப்டனிடம் காட்டுவதற்காக சிறிது சதைப் பகுதியை அறுத்து எடுக்கிறார். ரத்தம் வழியத் தொடங்குகிறது. அதை கொண்டு காட்டியதும்  பிரமித்த கேப்டன் அவர் உடலை கப்பலில் கொண்டு செல்ல அனுமதி அளிக்கிறார். புறப்பட்ட இடத்துக்கே கொண்டு வந்த பிறகு அவரது உடல் கோவாவுக்கு கொண்டு செல்லப் படுகிறது. அங்கே அவரது அழியாத உடல் இன்னும் இருக்கிறது கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக.

***"பாலை" என்னும் படத்தை எடுத்து ஒரு இயக்குனர் பட்டுக் கொண்டிருக்கும் பாடுகளை கண்களில் நீர் வர அவர் சொல்லும் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. கடும் முயற்சி எடுத்து எடுக்கப் பட்ட படமாகத் தெரிகிறது. சில திரை அரங்குகளில் வெளியிடப் பட்ட இரண்டே நாட்களில் அதுவும் கூட்டம் அதிகமாக வரக் கூடிய ஞாயிறு அன்று படத்தை தூக்கி விட்ட கொடுமையை கண்களில் நீர் வர விவரிக்கிறார். வேதனையாக இருந்தது. ஒரு டிவி நிகழ்ச்சியில் ஒரு பெண் ஆவேசமாக "TODAY THE GOVERNMENT IS RULED BY RICH BUSINESS PEOPLE" என்று கூறியது நினைவுக்கு வந்தது. இன்று நம்மை ஆள்வது பணக்காரர்கள் தானா?

***இன்று ஒரு அதிசயம் நடந்தது. எனது அலைபேசியில் ஒரு கால் சென்னையில் இருந்து. " ஹலோ ! RUFI  நான் மாலதி பேசுறேன்."
எனக்கு உடனே நினைவுக்கு வந்தது இடுப்பு வரை மடித்துக் கட்டிய தலைப் பின்னலுடன், சராசரிக்கும் குறைவான உயரத்தில் சாந்தமாக, என்னுடன் பள்ளியில் படித்த தோழி , அவள் எங்கே அழைக்கப் போகிறாள். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது தொடர்பு விட்டு போய். "எந்த மாலதி"
"ஹேய் ! நான் தான்ப்பா உன்கூட ஸ்கூல் ல சேர்ந்து படிச்சேனே"
அட! அதே மாலதி! மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனேன். 
சென்னையில் தரமணியில் எங்கள் அலுவலகம் ஒன்றிற்கு சென்டிருக்கிறாள். எதற்கும் கேட்டுப் பார்ப்போமே என்று என்னைப் பற்றி ஒருவரிடம் விசாரித்திருக்கிறாள். அவர் தனக்கு தெரியாது என்று சொல்லி அங்கே நெல்லையில் இருந்து மாற்றம் வாங்கிக் கொண்டு வந்த ஒரு பெண்ணிடம் கேட்கச் சொல்லி இருக்கிறார். ஊப்ஸ்!! அந்த பெண்ணுக்கு என் தொலை பேசி எண் தெரியும் என்பதால் உடனே தொடர்பு கிடைத்து விட்டது. என்ன ஒரு COMMUNICATION  DEPARTMENT !    பள்ளி நண்பர்கள் என்றாலே தனி அன்பு தான். அவள் பல ஆண்டுகள் டென்டிஸ்ட் ஆக பணி புரிந்து இன்று பணி விடுத்து அழகான இல்லத் தலைவியாக இருக்கிறாளாம். என் தங்கைகள் இருவரையும் பெயர் சொல்லி விசாரித்தாள். ஆச்சரியப்பட்டேன். இன்று உண்மையிலேயே மிகச் சிறந்த நாள் தான்.
I AM HAPPY TO THE EXTREME MALATHI !!

இன்னும் இதே போல் எங்கள் நட்பு வட்டத்துக்குள் வர வேண்டிய தோழி ஒருத்தி இருக்கிறாள். பெயர் செந்தமிழ்செல்வி (அழகான பெயர் ) அந்தப் பெயருக்காகவே அவளை ரொம்ப பிடிக்கும். அவள் கவிதையும் நான் கவிதை என்ற பெயரில் எதையோவும் எழுதுவோம். கல்லூரி கடைசி தினத்தன்று அவளும் நானும் சேர்ந்து கவிதை எழுதி மாற்றி மாற்றி வாசித்தோம். கண்ணதாசனும் எதோ ஒரு கடை நிலை மனிதனும் மாறி மாறி எழுதியதைப் போன்று இருந்தது. எங்கே இருக்கிறாய் செல்வி?

27 November, 2011

சுவாமி ராமாவின் "இமயத்து ஆசான்கள்"


நம்ம ரஜினி அடிக்கடி போறதாலேயே இமய மலை மேல ஒரு கவர்ச்சி எப்போவுமே உண்டு. அதுவும் சென்னை போயிருந்தப்போ வேடியப்பன் பரிசளிக்க சிறந்த புத்தகம் என சுவாமி ராமா எழுதிய "இமயத்து ஆசான்கள்"  ஐ சொன்னதும் வாங்கினேன். அந்த புத்தகத்தில் என் பெயர் எழுதி இருந்தது போல எனக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஆன்மிகம் சம்பந்தமான புத்தகம் போல தோன்றினாலும் வாழ்க்கை முறையை ஒழுங்கு படுத்த சிறந்த புத்தகம். நான் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவள் ஆதலால் முதலில் "உயர்ந்த மதங்களுக்கு அப்பால் ...." என்ற பகுதியை முதலில் தொடங்கினேன்.
                       " உலகத்திலுள்ள அனைத்து மதங்களும் ஒரே ஒரு மெய்ப்பொருளில் இருந்து தோன்றியவை தான். நாம் உண்மையை பயிற்சி செய்யாது மதத்தைப் பின்பற்றினால், அது ஒரு குருடனை, மற்றொரு கண் பார்வையற்றவன் வழி நடத்துவதைப் போலாகும். இறைவனுக்கு சொந்தமானவர்கள் எல்லோர் மீதும் அன்பு செலுத்துவார்கள். ......"

"அன்பு " என்னும் பயிற்சியை பழகி விட்டால் மற்ற எல்லா பயிற்சிகளும் சுலபமாக படிந்து விடும். "அன்பு" என்பது வார்ம் அப் செய்வது போல. தமிழ்நாட்டில் பிரபலமாக இருக்கும் சாது சுந்தர்சிங் இமயமலை வந்து பெற்ற அனுபவத்தை பற்றி எழுதி இருக்கிறார்கள்.

பைபளில் ஏசுநாதர் பற்றி பதிமூணு வயதில் இருந்து முப்பது வயது வரையில் தகவல்கள் இல்லை. அந்த கால கட்டத்தில் இமய மலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு சான்றாக அவர் நிகழ்த்திய அற்புதங்கள் பிரபலமான யோகாதிசயங்கள் என்கிறார்கள். நம்பவும் முடியவில்லை. புறக்கணிக்கவும் முடியவில்லை.

இந்த  புத்தகத்தில் ஒரு சிறப்பு. முதல் பக்கத்தில் இருந்து தான் வாசித்து வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அனைத்து தலைப்புகளும் முன் பக்கத்தில் கொடுக்கப் பட்டுள்ளன. நம் மன நிலைக்கு ஏற்ற பகுதியை எடுத்து வாசிக்கலாம். அது ஒரு கூடுதல் சிறப்பு. 
"இங்கும்-அங்கும் , இகமும்-பரமும் " என்றொரு பகுதி. அறுபது அடி ஆழமான கிணற்றுக்குள் குதித்து ஒருவர் நீராடிக் கொண்டிருக்கிறார். "பரவச நிலையில் இருக்கும் பொது ஒருவர் இயற்கையின் குழந்தையாக கருதி ஆதரவு அள்ளிக்கப் படுகிறார் " என்கிறார் ஆசிரியர். நாம் இன்று இயற்கையை விட்டு ரொம்ப தொலைவு வந்து விட்ட நிலையில் நாம் திரும்பி செல்ல இது சரியான வழிகாட்டியாக இருக்கும். 
நல்ல புத்தகம் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம். 
புத்தகத்தின் பெயர்                   :இமயத்து ஆசான்கள் 
ஆசிரியர் பெயர்                        : சுவாமி ராமா 
பதிப்பாசிரியர்                           : காந்தி கண்ணதாசன் 
விலை                                         : RS .260 /-
ஆங்கிலப் புத்தகத்தின் பெயர்: LIVING WITH THE HIMALAYAN MASTERS
தமிழில் மொழி பெயர்த்தவர்:    புவனா பாலு
ஒரு நல்ல புத்தகத்தை அறிமுகப் படுத்திய சந்தோஷத்துடன் விடை பெறுகிறேன்

25 November, 2011

வொய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி


விக்கி தான் உதவி செய்யணும். வீடியோ பதிவில் வரச்செய்யும் வழி தெரியவில்லை 
நன்றி நண்பர்களே!! இணைத்து விட்டேன்
   பாடலின் முதல் வரி "வொய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி " படத்தின் பெயர் '3 ' பெயரே அவ்வளவு தாங்க. எழுதி இயக்குபவர் தனுஷின் காதல் மனைவி ஐஸ்வர்யா.
எனது செல்ல மருமகனிடம் இருந்து இப்படி ஒரு பின்னோட்டம்

"தனுஷோட "why this kolaveri " song, உலகத்தையே கலக்கிட்டு இருக்கு. 10 நாளுக்குள்ள 40 இலட்சம் hit - youtube-la மட்டும். இங்க Timesofindia ல இருந்து news TV channels வரைக்கும் எல்லாரும் கவர் பண்ணியாச்சு. பெங்களூர்-லையே FM ரேடியோ-ல போடுறான். ஆனா அது பத்தி ஒரு writer / பிளாக்கர் கூட ஒண்ணுமே எழுதகாணோம், ஆச்சரியமா இருக்கு. நீங்க அந்த பாட்ட கேட்டீங்களா? என்ன நினைக்கீறீங்க?"

ஒண்ணு ரெண்டு தடவை இந்த பாட்டு கேட்டு இருக்கேன். முதல் பாடலில் கொஞ்சம் தன்னம்பிக்கை குறைவு தெரிந்தது. இது வித் புல் கான்பிடேன்ஸ்.

தான் பாடினா நல்லா இருக்குமா என்ற கொஞ்ச நஞ்ச சந்தேகத்தில் ஏதாவது விமர்சனம் வந்தால் காமெடி பாடல் தான் என்று சமாளித்துக் கொள்ளலாம் என்பது போன்ற பாடல் வரிகள். ஆனால் தனுஷின் குரலில் நல்ல வளம், நல்ல ராகம்

கூடிய விரைவில் நல்ல ஆக்டர் கம் பாடகரை தமிழ் திரையுலகம் சந்திக்கும் என்பதில் ஐயமில்லை. சிம்பு மட்டும் தான் பாடுவாரா? நாங்களும் பாடுவோம்ல ... இல்ல தனுஷ்!! .

24 November, 2011

வன்முறைக்கு விடை கொடுப்போம் !!


பெண்களின் மேல் வன்முறையை பயன்படுத்தாதீர்கள்,

பெண்களின் மீதான வன்முறையை முடிவுக்கு கொண்டு வாருங்கள் , ஒவ்வொருவரும் தனித்தனியாக.

எனக்கு தெரிந்த ஒருவர் தனது அறுபது வயதுக்கு மேலான தன் தாயை, அடித்திருக்கிறார் தனது திருமணத்துக்கு முன். திருமணம் ஆன பின் அதே வன்முறையை தன் மனைவி மேல் பிரயோகிக்கிறார். அவருடைய பெண் பிள்ளைகளும் அவரது அடிகளுக்கு தப்பவில்லை. எல்லோர் மீதான தன் வன்முறைக்கும் தன் தரப்பில் ஒரு நியாயம் வைத்த்திருப்பார். 

இப்படியான ஆண்களுக்கும் இவர்களை விட குறைவான வன்முறை உபயோகிப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். போர் தர்மத்தில் கூட சம பலம் உடையவர்கள் தான் போரிட வேண்டும் என்று இருக்கிறது. இறைவனின் படைப்பிலேயே ஆணை விட பெண் உடல் மன பலம் குறைந்து காணப்படுகிறாள். ஹீமோக்ளோபின் அளவில் கூட பெண்ணுக்கு 12  - 14  உம் ஆண்களுக்கு 14 - 18  இருக்க வேண்டும் என்கிறார்கள். பூப் போன்ற பெண்களை பூமியில் வாட விடாதீர்கள்.

"செங்காளி" என்று ஒரு கதை படித்தேன். முதலிரவில் கணவன் இயல்பாக மனைவியிடம் சேர மாட்டான். அவன் தன்னைப் பற்றி காம்ப்ளெக்ஸ் இல் குன்றி விடக் கூடாதே என்று அவள் தன் நாணத்தை புறம் தள்ளி முன் வருவாள். உடனே அவனுடைய நெருப்பான வார்த்தைகள் "ரொம்ப அனுபவம் தான் போல இருக்கு" முதலிரவில் நாவினால் சுட்ட வடு மெல்ல நீக்கி இயல்புக்கு வர முயலும் போது தான் அவனுக்கும் அவன் அண்ணிக்கும் உள்ள தவறான உறவு தெரிய வரும். அந்த ஆதங்கத்தில் அதன் பிறகு அவன் "உன்னைப் பத்தி தெரியாதா?முதலிரவிலேயே தான் உன் புத்தி தெரிந்து விட்டதே" என்பான். உடனே அவள் "நீ பொட்டையா இருந்தா நான் முன்னேறித்தானே தானே வர வேண்டி இருக்குது " என்றவுடன் கணவனின் குடும்பத்தார்கள் எல்லோரும் சேர்ந்து அவளை அடித்து துவைத்து விடுவார்கள். அவனிடம் இருந்து தன்னை விலக்கி விடும் படி பஞ்சாயத்தில் கொண்டு செல்லும் போது கணவன் சார்பான வன்முறைகள் எல்லாம் ஒதுக்கப்பட்டு அவள் தன் கணவனை "பொட்டை " என்பது மட்டும் தான் விவாதத்தில் நிற்கும். அவள் இறுதியில் "நீங்கள் என்ன எனக்கு விவாகரத்து தருவது , நானே இவனிடம் இருந்து விலகிக் கொள்கிறேன்" என்று தன் தாலியை கழற்றி வீசி விட்டு வருவாள். 
தன் மேல் முழு நம்பிக்கை உடைய எந்த ஆணும் தன் மனைவியை சந்தேகப் பட மாட்டான். முக்காலே மூணு வீசம் வன்முறைக்கு சந்தேகம் தான் அடித்தளம். பெண்களின் தலை முடியை தன் கை விரல்களில் சுற்றி அரிவாளால் வெட்டி எறிந்த வன்முறையாளர்கள் எனக்கு தெரியும்." எந்த ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் " என்று பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். அதே போல எந்த ஒரு பெண்ணின் தவறுக்கும் (விலக்குகள் இருக்கலாம்) பின்னால் ஒரு ஆண் இருக்கிறான் என்பது வேதனையான விஷயம். இயல்பாய் நல்ல பெண்ணாய் இருந்து ஒரு ஆணினால் வழி தவறிய பெண் அந்த ஆணை தன் வாழ் நாளில் மன்னிப்பதில்லை. 

இன்று பெண்களுக்கான வன்முறைக்கு எதிரான நாள். ஒவ்வொருவரும் உறுதி எடுப்போம் எக்காரணம் கொண்டும் தன்னை விட வலிமை குறைந்தவர்களிடம் வன்முறை பிரயோகிக்க மாட்டோம் என்று, 


23 November, 2011

ROSE IS A ROSE IS A ROSE


எல்லோரும் நலமா இருக்கீங்களா?
ஏகப்பட்ட ஆணி புடுங்கற வேலை இருக்கிறதால
எல்லா சாமிகளும் என்னை மன்னிச்சு
கீழே உள்ள லிங்க்க பாருங்க
அங்கே பின் தொடரும் வரை
இந்த தொல்லை தொடரும்

 
http://www.blossom111111.blogspot.com/

20 November, 2011

"ஆதார்"


"ஆதார்" "UID " இதெல்லாம் கேள்வி பட்டிருக்கீங்களா? இல்லைனா சீக்கிரம் பட்டுருவீங்க.

அகில இந்திய அளவில் இந்த ID  கொடுக்கிறார்கள். ஏற்கனவே இருக்கிற பத்து ID  கூட பதினொண்ணா இதுவும் இருக்கட்டுமுன்னு நான், என் வீட்டுக்காரர், என் மகள் மூவருமாக தேடித் போனோம். ஒரு வீட்டில் தான் அந்தப் பணி நடந்து கொண்டிருந்தது. கூட்டம் பார்த்தால் கொஞ்சம் தான் இருந்த மாதிரி இருந்தது. என்ன ஒரு ஐம்பது பேருக்குள் தான் நின்று கொண்டு இருந்தார்கள். சரி சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு அன்று மாலையில் கூடுவதாக இருந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளலாம்னு மகிழ்ச்சியில் இருந்தேன்.

ஒரு form கொடுத்திருந்தார்கள். வீட்டில் எத்தனை பேர் இருந்தாலும் ரெண்டே ரெண்டு forms தான். நாம் மேலே தேவை இருந்தால் xerox எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் நம் முகவரிக்கு ஒரு சான்றும், புகைப்படத்துக்கு ஒரு சான்றும் கொண்டு செல்லவேண்டும். அந்த சான்றுகள் இருபது போல லிஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். அவற்றுள் ஏதாவது ரெண்டு. எல்லாம் சரியாக கொண்டு வரிசையிலும் நின்றாயிற்று. மகிழ்வுப் பேற்றுக்கான பாதையில் இருந்ததால் என் மகளை ஒரு இடம் பார்த்து அமர வைத்து விட்டு நான் வரிசையில் நின்றேன்.

ஒரு ஆணிடமும் ஒரு பெண்ணிடமுமாக மாற்றி மாற்றி வாங்குகிறார்கள். ஆனா என்ன கொடுமைனா ஆண்கள் ஒருவர் ஒரு அப்ளிகேஷன் வைத்திருந்தா  பெண்கள் வீட்டில் உள்ள எல்லோருக்குமாக சேர்த்து அஞ்சு பத்து வைத்திருக்கிறார்கள். வரிசையில் ஒரு பெண் நகர்வதற்குள் ஐந்து ஆண்கள் நகர்ந்து விடுகிறார்கள். போதாதற்கு இடை செருகல் வேறு. இந்த அநியாயம் பொறுக்காமல் ஒருவர் சவுண்ட் விட பாரம் வாங்கிக் கொண்டிருந்தவன், "ஆபீசர் (நம்ம ஆபீசர் இல்ல) வருவார் அவரிடம் இதே சத்தம் கொடுப்பீங்களா?"னு மிரட்டிக் கொண்டிருந்தான். பொதுவாகவே எனது அனுபவப்படி , கூட்டம் சேர்ந்திருக்கும் இடங்களில் நேர்மையாக செயல்பாடு இருந்தால் எவ்வளவு நேரம் ஆனாலும் பொறுமையாக இருப்பார்கள். இல்லை என்றால் ஒரே கூச்சலும் அமளியும் தான்.

முப்பது முப்பது பாரங்கள் வாங்கி மாடிக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்கள், மக்களையும் சேர்த்து தான். மாடியில் நான்கு பேர் கணினியின்  முன் அமர்ந்திருந்தார்கள். நாம் போனதும் கட்டை விரலை தவிர்த்து மீதி நான்கு விரல்களையும் ஒரு கருவியின் மேல் வைத்து அழுத்தச் சொல்கிறார்கள். அரை முழுவதும் "நல்லா அழுத்தும்மா" னு ஒரே சத்தம். அதில் இருந்த டெக்னிக்கை கண்டு பிடித்து விட்டதால் உங்களுக்கும் உதவும் என்று சொல்கிறேன். நாம் விரல்கள் அழுத்தும் இடத்தில் நான்கு 'பச்சை விளக்கு'கள் எரியும். எந்த விளக்கு எரியவில்லையோ அந்த விரலை மட்டும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக அழுத்தினால் போதும். நான்கு விளக்குகளும் எரிந்த உடன் நம் விரல்களின் ரேகைகள் பதிவாகி விடுகின்றன.

பின் இரு கட்டை விரல்களையும் சேர்த்து அந்த கருவியில் அழுத்த சொல்கிறார்கள். அதன் பின் கணினியின் முன் உள்ள நாற்காலியில் அமரச் சொல்லி இரு கண்களை விரித்து நோக்க சொல்கிறார்கள். எவ்வளவு விரித்தாலும் "இன்னும்,இன்னும்" என்கிறார்கள். ஒரு வழியா கண்களின் ரேகைகளும் பதிவாகி விடுகின்றன.


நமக்கு எதிரே இருக்கும் காமிராவைப் பார்க்க சொல்கிறார்கள். அங்கே தான் வருது வில்லங்கம். நம்ம "அழகு திருமுகம்" கணினியில் தெரிஞ்சுடுதா அங்கேயே நம் பார்வை போகுது. பணியாளரும் "நேராப் பாருங்க"னு ரெண்டு மூணு தடவை சொல்லிப் பார்க்கிறார். பிறகு" என்னவோ போங்க"னு வர்ற திருமுகத்தை எடுத்து விடுகிறார். "சார் ரீடேக் உண்டா"னு கேட்டேன் முறைத்தார்.

அதன் பின் நாம் நிரப்பி கொண்டு சென்றுள்ள பாரத்தில் உள்ள தகவல்களை ஆங்கிலத்திலும் தமிழிலுமாக நிரப்புகிறார். அவரிடம் உள்ள கணினியில் நிரப்ப நிரப்ப நமக்கும் தெரிவதால் உடனுக்குடனேயே திருத்திக் கொள்ளலாம். அதனால் நமது வாக்கு சீட்டுக்களில் வருவது போல் தப்பும் தவறுமாக வருவதில்லை. இதில் தப்பு வந்தால் தவறு நமது மீது தான். பார்த்து குறிப்பிட்டு சொன்னால் சரியான தகவல்கள் வரும்.

எல்லாம் முடிந்தபின் நமது புகைப்படம், ரேகைகள், தகவல்களுடன் ஒரு பிரிண்ட் எடுத்து நம்மிடமும், மற்றொன்றை பாரத்துடனும் இணைத்துக் கொள்கிறார்கள். ID நமது முகவரிக்கு கூரியரில் வரும் என்று சொல்கிறார்கள். இது இந்திய அளவிலான ID என்பதால் உங்கள் பகுதியில் கொடுக்கும் இடங்களுக்கு சென்று கண்டிப்பாக பெற்றுக் கொள்ளுங்கள். இன்னும் சில நாட்களில் தபால் அலுவலகங்களிலும் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது.

டிஸ்கி: போட்டோ எடுக்கும் போது மட்டும் கணினியைப் பார்த்து விடாதீர்கள். அகத்தின் அழகு முகம். முகத்தின் அழகு கண்கள் தானே!

17 November, 2011

"இமயத்து ஆசான்கள்"

பதிவர் சந்திப்பின் இறுதிக்கு வந்தாச்சு.
மதியம் இரண்டு மணி அளவில் திரு செல்வகுமாருக்கு மற்றும் ஒரு மீட்டிங் இருந்ததால் மனமில்லாமலே முடித்துக் கொண்டோம். எனக்கு இரவு ஏழு மணிக்கு தான் ட்ரெயின்.அப்படியே லஞ்சுக்கு வெளியே போவோமா என யோசித்தோம். தேனம்மை " வேண்டாம் ரூபி, இங்கே ஹைதராபாத் பிரியாணி ரொம்ப நல்லா இருக்கும்.பார்ஸல் வாங்கிட்டு போய் வீட்டில வச்சு சாப்பிடுவோம். " னு சொன்னாங்க.
உண்மையிலேயே அப்படி ஒரு ருசி, பிரியாணிக்கும் அதனுள்ளே உறங்கிக் கொண்டிருந்த சிக்கென் துண்டுகளுக்கும்.    பேசிக் கொண்டே கலைந்து கிடந்த பொருட்களை ஒதுக்கும் போது எனக்கு  சிந்து பைரவியின் சுகாசினி நினைவுக்கு வந்தார். பேசினோம் பேசினோம் எல்லா திசையின் விஷயங்களையும் அலசினோம். "உங்கள் எழுத்துக்கள் வந்த புத்தகங்களைக் காட்டுங்க பார்ப்போம்" னு சொன்னேன். ரெண்டு பை நிறைய, சின்ன குழந்தைகள் விளையாட்டு சாமான் பை யை கொண்டு கவுத்துறதைப் போல கொண்டு வந்து வெளியே போட்டார்கள். நல்ல எழுத்துத் திறமை தேனம்மைக்கு, அது காய்ந்து விடாமல் உயிர்ப்போடு வைத்துக் கொள்ள வேண்டும். 

என் கொழுந்தன் எழுதும் தீவிரவாதம் புத்தகம் பற்றி பேச்சு வந்தது. தீவிரவாதம் பற்றி அவர்கள் பேசிய பல விஷயங்கள் எனக்கு ஆச்சர்யம் அளித்தன. தீவிரவாதத்தில் மதத்தின் பங்கு பற்றி நீள நெடுக பேசினோம். "ஆச்சியின்" வெள்ளந்தித்தனம் , பிறரை வெளிப்படையாக பாராட்டும் தன்மையும் என்னை மிகவும் கவர்ந்தன. எனது படைப்பை காகிதப் படைப்பாக்கியதில் தேனம்மையின் பங்கு பெரும் பங்கு.

ஒரே ஊர்க்காரர்களாய் இருந்தால் இடைஇடையேயாவது பார்த்துக் கொள்ளலாமே என்ற மன ஆதங்கத்தோடு புறப்பட்டேன். வாசலுக்கு வந்து வழி அனுப்பிய அந்த விழிகளிலும் அதே ஏக்கம்.

என் கொழுந்தனின் உதவியோடு எக்மோர் வந்து சேர்ந்தேன். அங்கும் இறுதியாக ஒரு  நண்பரை சந்திக்கும் ப்ளான் இருந்தது. ஆனால் அவர் அயல் நாட்டு நண்பர்களிடம் மாட்டிக் கொண்டு வர முடியாமல் போய் விட்டது. என்று சொன்னார். அதனால் அவருக்கு வாங்கி வைத்திருந்த "இமயத்து  ஆசான்கள்" என்ற புத்தகம் அவர் நினைவாக என்னிடமே தங்கி விட்டது. முந்தின நாளே ஒரு அவசர இடைவெளியில்  எக்மோர் ஸ்டேஷன் பக்கம் நின்று ஒரு  ஐந்து நிமிடம் சந்திப்பதாக ஏற்பாடு.  எலெக்ட்ரிக் ட்ரெயினில் வந்து கொண்டு இருந்தேன். அம்மா தொலைந்து போகாமல் பத்திரமாகத் தான் இருக்கிறாளா என்ற தன் சந்தேகத்தை என் மகள் நிவர்த்தி செய்து கொண்டிருந்தாள்.  

இடையில் அவரது அழைப்பு "ரூபினா, எங்கே இருக்கீங்க?"  ரொம்ப புத்திசாலியாக ஜன்னல் வழி பார்த்து " இப்போ தான் போர்ட் ஸ்டேஷன் தாண்டுறேன்"  என்றேன். அவர் மெல்லிய சிரிப்பினூடே " போர்ட் ஸ்டேஷன் ? எக்மோர் தாண்டிட்டீங்க போல் இருக்கே? சரி இறங்கி அடுத்த ட்ரெயின் பிடிச்சு வாங்க நான் வெயிட் பண்றேன்" என்றார்.  இதில கொடுமை என்னானா  அருகில் இருந்த பெண் "நீங்க யார்ட்டயோ "எக்மோர் போறேன்" னு சொல்லிக்கிட்டு இருந்தீங்களே அப்போ தான் எக்மோர் போச்சு!!!" னு சொன்னாங்க. இது தான் நகரமா?? 

எப்படியோ மறுபடியும் எக்மோரை தாண்டி போகாமல் சரியாக இருங்கி ஐந்தே ஐந்து நிமிடங்கள் சந்தித்தேன்.  அந்த நண்பர் யார் என்றா கேட்கிறீர்கள். வேண்டாமே!! என்னை பொறுத்த வரை ஒரு நல்ல நண்பர். 

சென்னையில் சந்தித்த, பழகிய, அன்பு காட்டிய . வழி மேல் விழி வைத்து எனக்காக காத்திருந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

16 November, 2011

"போதுமப்பா சந்திப்பைப் பற்றிய பதிவு " எனப் புலம்பாதீர்கள்.

தேனம்மையிடம் நான் சென்னை வருவதாக சொன்னதும் வேடியப்பனின்(எனக்கு பின்னால் புத்தகங்களுக்கே  பலம் கொடுத்து நிற்கிறாரே அவரே தான்) discovery book ஸ்டாலுக்கு வந்து விடலாம் அது தனக்கும் பக்கமாக இருக்கும் என்று சொன்னார்கள். காலை 10 .30க்கு சந்திப்பதாக ஏற்பாடு. நான் 8 ஆம் தேதி காலையில் என் கணவரின் தம்பி வீட்டிலிருந்து வந்து விடுவதாக சொல்லி இருந்தேன் . என்ன ட்ராபிக் ! என்ன ட்ராபிக் !  11 .30 க்கு தான் வர முடிந்தது. தான் VIP ஆக கூட்டம் தொடங்கிய பின் தான் வர வேண்டும் என்று எண்ணி 11 .00 மணிக்கு வந்திருக்கிறார் 'மாண்பு மிகு' செல்வக்குமார் அவர்கள். நான் அதற்கும் அரை மணி லேட் எப்பூடி?
வேடியப்பன்
வேடியப்பன் மிக அமைதியான மனிதராக இருக்கிறார். போட்டோ வுக்கு கொஞ்சம் பெரிய ஆளாக தெரிகிறார் உண்மையில் சின்ன பையன் தான். தேவைக்கு அதிகமாக ஒரு சொல் கூட உதிர்ப்பதில்லை. அங்கே உள்ள புத்தகங்களை பற்றி  நன்கு தெரிந்து வைத்திருக்கிறார். நான் போகும் போதே நண்பர்கள் அனைவருக்கும் ஏதாவது புத்தகம் பரிசளிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். அதை அவர்கள் தேர்வில் எடுக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால் அவரவர் செய்யும் தொழிலுக்கேற்ப சரியான புத்தகங்களை வேடியப்பன் தேர்வு செய்து கொடுத்தார். நண்பர் செல்வகுமார் தனது அடுத்த ப்ராஜெக்ட் காந்திஜியைப் பற்றியது என்பதால் அது சம்பந்தமாக புத்தகங்களை எடுத்துக் கொண்டார். அவரது மிகச் சிறந்த முயற்சியில் அணிலின் பங்காய் இந்த புத்தகங்கள் இருப்பதில் எனக்கு பெருமை. வேடியப்பன் அவர்களுக்கும்  புத்தகம் பரிசளிக்க ஆசை இருந்தது. அது கடலைக்கடை வாசலில் கடலை வண்டி போட்டு விற்பதை போல் ஆகும் என்பதால் அந்த விருப்பம் கை விடப் பட்டது.

அங்கே இருக்கும் போதே செல்வகுமார் அலைபேசியில் அழைப்பு.  எண்ணைப் பார்த்ததும்,சத்தம் வராமல் "கௌசல்யா" என்று உதடசைத்து என் கையில் கொடுத்தார். "ஹலோ!!அண்ணா!" என்றார் கௌசல்யா
"நான் அண்ணா இல்லம்மா அக்கா!" என்றேன்
"அக்கா.....எனக்கு பொறாமையா இருக்குதுக்கா" என்றார். அந்த குரலில் பொறாமை இல்லை அன்பு தான் பொதும்பிக் கொண்டிருந்தது.
செல்வகுமார் சிறப்பான மனிதர். "HELLO ! GOOD MORNING !RUFINA!" என்று சொல்லும் போதே அவருக்குள் இருந்து அந்த உற்சாகம் நம்முள் படர ஆரம்பித்து விடும். அதன் பிறகு அவர் பேசி முடிக்கும் வரை உல்லாச ஊஞ்சலாட்டம் தான். அவரது "முத்தக் கவிதைகள்" பிரசித்தி பெற்றவை. மனுஷர் முத்தத்தை பற்றி ஆராய்வதில் கமலஹாசனுக்கு அடுத்து நிற்பார் என நினைக்கிறேன். சொல்ல முடியாது முந்தி விட்டாலும் ஆச்சரியம் இல்லை. 
ஜேம்ஸ், தேனம்மை, ரூபினா , செல்வா, ஜிபின்
                                                                                
மேலே இருப்பதில் நாலு பேரை பற்றி இப்பொழுது உங்களுக்கு தெரியும். தரையில  இருக்கிறாரே அவர் தான் என் கணவரின் தம்பி. என் புகுந்த வீட்டில் ஒரே அலை வரிசையில் இருப்பது நாங்கள் இருவரும் தான். சந்திப்பின் எல்லா போட்டோக்களும் அவர் எடுத்தது தான். ஆனால் அவரை மட்டும் இப்படி எடுத்து விட்டோம். ஏதோ இதுவாவது கிடைத்ததே! "தினத்தந்தியில்" Economic Times ஒரு பக்கம் வருமே அது இவர் கை வண்ணம் தான். அது இன்றைய நிலை. உண்மையிலேயே பெரிய மனிதர். திரை உலகில் இவரது முதல் படமே பெரிய ஹிட். "குணா" படத்தில் உதவி இயக்குனர். அது பல ஆண்டு கடும் சோதனைக்கு பிறகு தான். இருந்தும் திரை உலகின் நெளிவு சுளிவுகள் இவருக்கு பழகியே வராத காரணத்தால் பத்தாண்டுகளுக்கு பின் வலுக் கட்டாயமாக வெளிக் கொணர்ந்தோம். ஷேக்ஸ்பியரின் "மாக்பெத்" இவரது முயற்சியால் தமிழாக்கம் பெற்று வெளியிடப் பட்டிருக்கிறது. மற்றும் ஒரு புத்தகம் விரைவில் வெளியிடப் படும் முயற்சியில் இருக்கிறது. இவரைப் பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. பாயாசத்தின் முந்திரிகளாய் அப்பப்போ இடையில் சொல்கிறேன். இப்போதைக்கு இது போதும். 

இனி வருவது, இறுதியாக வருவது ஒரு முக்கியமான VIP ...காத்திருங்கள் 

12 November, 2011

discovery book palace சந்திப்பு !


இவர் நம்ம பதிவுலகத்துக்கு சம்பந்தம் இல்லாதவர். நான்கு ஆண்டுகளாக பழக்கம். ஆனால் இந்த முறை சென்னை செல்லும் போது தான் முதன் முறையாக பார்க்கிறேன். உடல் சரியில்லாமல் கொஞ்சம் டல்லாக இருக்கிறார். படு ஸ்மார்ட் பார்ட்டி. 

நான்கு ஆண்டுகளுக்கு முன் என் அலுவலக நண்பர் CCNA வில் 100 /100 வாங்கியதாக செய்தித் தாளில் பார்த்தவுடன் CCNA மேல் ஒரு காதல். அதை பற்றி தெரிந்து கொள்ளலாம் என அன்றைய ஹீரோ வான ஆர்குட் க்ரூப்ஸ் இல் தேடிய போது சிக்கினார். நாகர்கோயில் காரர் என்றதும் ஒரு பாசம் (என் திருமண வாழ்வின் முதல் ஆறு வருடங்கள் இருந்த ஊர் அல்லவா?)அன்று முதல் நண்பர்கள். அப்பொழுது ஒரு மென் பொருள் நிறுவனத்தில் சுமார் அரை லட்சம் மாதம் சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆனால் எந்த நேரத்திலும் வேலையை விட்டு கனவுத் தொழிற்சாலைக்குள் (அதே தான் சினி பீல்ட் தாங்க) தொபுக்கடீர்னு குதிக்க தயாராக இருந்தார். வீட்டுக்கு , ஏன் அவங்க அம்மா அப்பாவுக்கு கூட ஒரே பிள்ளை. அதனால நான் பேசும் போதெல்லாம் அதை டிஸ்கரேஜ் செய்து கொண்டே இருப்பேன். 

திடீர்னு ஒரு நாள் "நான் வேலையை விட்டுட்டேங்க. வாழ்க்கையில ரிஸ்க் எடுத்தாத் தான் சாதிக்க முடியும்"  னு சொன்னார். எனக்கு பகீர்னது. வளரும் பயிர் சின்ன வயதில் மிக உயர்ந்த வேலை. அதை விட உயர்வாக அதை விடுவதில் இருந்த துணிச்சல்.   ஒன்றும் சொல்வதற்கில்லை. வேலையை விட்டாச்சு. அதன் பின் கண்டிப்பாக நம்பிக்கை ஊட்டி தான் பேச வேண்டும். 

கொஞ்ச காலம் ரொம்பவே கஷ்டப்பட்டார். IT துறையில் கை நிறைய சம்பாதித்துக் கொண்டிருந்தவர் சிரம தசையில் இருந்தார். கட் அண்ட் பேஸ்ட் அது தாங்க எடிட்டிங் துறையில் தான் இவருக்கு ஆர்வம் இருந்தது. ஒரு சில வளர்ந்த எடிட்டர்களிடம் உதவியாளராக சேர முயன்றார். நடக்கவில்லை.  இன்றைய டெக் உலகத்தில் இவரது கம்ப்யூட்டர் அறிவு மிக எளிதாக தொழில் கற்றுக் கொள்ள வைத்தது. சங்கத்தில்  சந்தாதாரராக இருந்தால் தான் அவர் பெயர் வெள்ளித்திரையில் வரும். அதற்கு ஒரு பெரிய தொகை தேவையாக இருந்தது. வேலையை விட்டது வீட்டுக்கு தெரியாது. இந்த நிலையில் சில காலம் இவர் செய்த எடிட்டிங் க்கு இவர் சொந்தம் கொண்டாடாமல் இருந்து பின் சங்கத்தில் சந்தாதாரராகி விட்டார். பல விளம்பரப் படங்கள் செய்திருக்கிறார். "திருமண மாலை" சில காலம் எடிட்டிங் செய்தார். இவர் எடிட்டிங் செய்த படம் முதன் முதலாக இவர் பெயரில் அநேகமாக ஜனவரியில் வெளிவரும். 

சொந்தத்தில் இப்பொழுது எடிட்டிங் ஸ்டுடியோ வைத்திருக்கிறார். அங்கே போய் படங்கள் எப்படி எடிட் செய்யப் படுகின்றன என்று செய்முறை விளக்கம் தந்தார். பறந்து பறந்து அடிக்கிற பாச்சா வெல்லாம் இனிமே என்னிடம் பலிக்காது. அதெல்லாம் எப்படி என்று சொல்லித் தந்து விட்டார்.

சின்ன பிள்ளையா இருக்கும் போது எங்க அப்பா சென்னையில் "உலகம் சுற்றும் வாலிபன்" ஷூட்டிங் பார்க்க ஒரு சிபாரிசில் கூட்டி போயிருந்தார்கள். க்ளோப் உருண்டையில் இருந்து மஞ்சுளா ஆடிய படியே படிகளில் கீழே இறங்கி வரும் காட்சி.  சுற்றி இருப்பவர்கள் வீரிய மௌனம் கடைப் பிடிக்க வேண்டி இருந்தது. சின்ன சத்தம் வந்தாலும் இயக்குனர்களுக்கு கோபம் வந்து விடும். ஆனால் இப்பொழுது எடிட் பண்ணாமல் ஒரு காட்சி காட்டினார். அதில் பின்புலத்தில் பேசிக் கொள்வதெல்லாம் கேட்கிறது. "நோ ப்ராப்ளம். அதை எரேஸ் செய்திடுவோம்" னு சொன்னார்.         

அதன் பின் டப்பிங் ஸ்டுடியோ பார்த்தேன். ஏற்கனவே AIR  இல் நிகழ்சிகள் வழங்கி பழக்கம் இருப்பதால் கொஞ்சம் 'தெரிஞ்ச மாதிரி' கேள்வி எல்லாம் கேட்டேன். டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகணும்கறது எனது நெடு நாள் கனவு. இப்போ வாழ்நாளில் பாதி ஓடி விட்டது, பார்ப்போம் ! ! ஹோட்டல் அக்க்ஷயாவில் பிரைட் ரைசும், சாம்பார் வடையும் வாங்கித் தந்தார். அன்று நான் சைவம் சாப்பிடும் மூடில் தான் இருந்தேன். அந்த சாம்பார் வடைக்காகவாவது மறுபடியும் சென்னை செல்ல வேண்டும். 

நிறைந்த மனதோடு, டிஸ்கவரி புக் பாலஸில்  நடக்கப் போகும் பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்து பிரிந்தேன். இன்னும் தொடர எண்ணம் உண்டு ....

அவர் பேரை சொல்லாமலே விடுறேன்னு பார்க்கிறீங்களா ? வாய்க்குள்ளே நுழையாத ஒரு பெயர் இப்போதைக்கு விட்டுருவோம் இன்னொரு மழை நாளில் சொல்கிறேன்.

11 November, 2011

பள பள மாம்பலம் !!


சொல்ல கொஞ்சம் வெட்கமா தான் இருக்குது இருந்தாலும் சுய சரிதை அல்லவா சொல்லிடலாம்னு முடிவு. ஹா !! ஹா !! இது நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது கொஞ்சம் ஓவர் பில்ட் அப்பு !!

நான் பொதுவாவே இருக்கும் இடத்திலேயே சுகம் காண்பவள். அதிகம் ஊர் சுற்ற பிடிக்காது பல வருடங்களுக்கு பின் சென்னை போனேன். கிளம்பும் போதே என் மகள் " அம்மா !சென்னையில தொலஞ்சு போய்டாதே . இந்த மதுரையிலேயே எந்த திசையில போகணுமோ அதுக்கு எதிர் திசையை காட்டுவே. பத்திரம். ஒவ்வொரு இடம் போய் சேர்ந்ததும் போன் பண்ணு " என்றாள்.  

சென்னையில் எனக்கு தெரிஞ்ச ஒரே இடம் (சந்தேகமில்லாமல் தெளிவாக) மீனம்பாக்கத்தில உள்ள BSNL ட்ரைனிங் சென்டர் தான். தாம்பரத்தில இறங்கி எலெக்ட்ரிக் ட்ரைன் பிடிச்சு சரியா போய் இறங்கிடுவேன். நான் முதல் முதலில் போக வேண்டிய இடம் அடையாரா இருந்ததால வெஸ்ட் மாம்பலத்தில இறங்கி ஆட்டோ பிடிச்சு வரச் சொல்லி இருந்தாள் தோழி. "அதெல்லாம் வந்திடுவேன்" என்று கெத்தாக சொல்லி விட்டேன். எனது 'செல்'லில் சிக்னல் வரும் இடத்தை சொல்லும் ஏற்பாடு செய்திருந்ததால்  மிகுந்த நம்பிக்கை எப்படியும் சரியாக போய் சேர்ந்திடுவோம் னு.  

ரயிலில் எனக்கு அருகில் தாம்பரம் தாண்டியதும் இரண்டு பெண்கள் இருந்தார்கள். அதில் ஒரு பெண் ஏறியதில் இருந்தே அலட்டலாய் ஏதாவது செய்து கொண்டே இருந்தது. அதனால் அடுத்த  பெண்ணிடம் மாம்பலம் எத்தன ஸ்டேஷன் தாண்டி வரும்னு கேட்டேன். "நான் ஊருக்கு புதுசுங்க, "என்றது. வேறு வழியில்லாமல் மற்ற பெண்ணிடம் அதே கேள்வியை கேட்ட போது பிரகஸ்பதி அது எக்ஸ்பிரஸ் என்பதை நினைக்காமல் "நாலு ஸ்டேஷன் தாண்டி வரும்" என்று சொல்லி விட்டார்கள். நானும் சாவகாசமாக இருந்து விட்டேன். அடுத்த ஸ்டேஷன் மாம்பலம், ரொம்ப நேரம் நின்றதும் 'செல்'லை எடுத்துப் பார்த்தால் அது "துரைசாமி நகர்" என்று சொல்லி கழுத்தறுத்து விட்டது.  வண்டி புறப்பட்டு ஸ்டேஷன் கடக்கும் போது பார்த்தால் மஞ்சள் கலரில் மாம்பலம் பளபள வென்று இருக்கிறது. 

என் பதற்றத்தைக் கண்டதும் எங்கே கீழே குதித்து விடப் போகிறேனோ என்று பக்கத்தில் இருந்த பெண் என் கையை பிடித்த படி  "நீங்க எக்மோர் போய் அங்கே  இருந்து அடையார் போய்டுங்க " என்று சொன்னாள். "ஓகே!ஓகே! " என்றேன் "ம்க்கும் இதுக்கு மட்டும் குறைச்சலில்ல !" சரி எக்மோர் போய்க்லாம்னு சாவதானமா உட்கார்ந்தா மறுபடியும் ரயில் நிற்கிறது. பார்த்தால் "சேத்பட்" மற்றும் ஒருவரிடம் கொஞ்ச நேரம் நிற்குமா? இறங்கலாமா? என்பதை எல்லாம் தெளிவு படுத்தி இறங்கி டிக்கெட் எடுத்து எலெக்ட்ரிக் ட்ரைன் ஏறி, மாம்பலத்தில் இறங்கி, ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன். 

டிஸ்கி: ஒரு பிளாட்போர்மில் இருந்து மறு பிளாட்பார்முக்கு ஏறி இறங்கும் வழியிலேயே  டிக்கெட் கவுன்ட்டர் வைத்திருக்கும் ரயில்வே துறைக்கு ஒரு நன்றி.   

2 )படாத பாடு பட்டு போய் சேரும் போது, வீட்டைக் கண்டு பிடிக்கும் சிரமம் இல்லாமல் 'செல்' லை முழு சார்ஜிலும், சைலென்ட் மோடில் போடாமல் இருந்து காப்பாற்றிய தோழிக்கு ஒரு நன்றி. 

3 )சென்னை ரொம்ப மாறி இருக்கிறது. மரியாதையாக பேசி சரியான இடம் கொண்டு சேர்த்து, சரியான சார்ஜ் (!?!) வாங்கிய ஆடோக்காரருக்கு ஒரு நன்றி 

10 November, 2011

நான் பட்டணம் போனேனே !!

பள்ளி தோழியின் மகளின் திருமணத்திற்காக நெல்லையில் இருந்து சென்னைக்கு பயணம். பதிவர்களை சந்திப்பது வெகு நாள் கனவாக இருந்த காரணத்தினால் திருமண நாளின் முன்னும் பின்னும் ஒவ்வொரு நாள் சேர்த்து மூன்று நாள் பயணம். பெரிய கதையே எழுதுவேன் என் சந்தோஷத்தை பகிர்வதற்கு நேரம் இன்மையின் காரணமாக அவசர பந்தி இது. தொடரும் விரிவாக......

இந்த திருமணம் மிகச் சிறப்பாக நடந்தது. நான் கல்யாண சாப்பாடு வெளுத்துக் கட்டி விடக் கூடாது என்று என் மகள் சரியாக 12.30 க்கு அழைத்தாள். ஆனால் நான் 11 .30 க்கே எல்லாம் முடித்து பீடாவுக்கு வந்து விட்டேன். 

இதில் நான் மிகவும் ரசித்த விஷயம் ஒன்று இருந்தது. ஒரு வேளை பல திருமணங்களிலும் நடந்திருக்கலாம் ஆனால் எனக்கு முதன் முறையானதால் எழுதுகிறேன். பிள்ளை தாலி கட்டும் போது போடுவதற்காக எல்லார் கைகளிலும் பூ உதிரியாக கொடுப்பதுண்டு. பலரும் அதை இருந்த இடத்தில் இருந்தே வீசுவார்கள் அநேகம் இதழ்கள் முன்னால் இருப்பவர் தலையில் தான் விழும். ஆனால் இங்கு எல்லோரும் முன்னே போய் மணமக்களின் தலையில் விழுமாறு பூ தூவினார்கள். அதற்குள்  தாலி கட்டி முடித்து விட்டதனால்   மணமக்கள் வந்திருப்பவர்கள் பக்கம் திரும்பி தலை வணங்கி அவர்கள் பூ தூவுதலை ஏற்றுக் கொண்டார்கள். அதனால் வயதானவர்கள் கூட நடக்க முடியாமல் நடந்து வந்து பூ தூவினார்கள்.

எனக்கு பெரியவர்களின் ஆசிக்கு தலை வணங்கும் அந்த பிள்ளைகளைப் பார்க்க பூரிப்பாக இருந்தது.
                               "வாழ்க மணமக்கள் பல்லாண்டு" 

மற்றும் ஒரு வித்தியாசமான விஷயம் சாப்பாடு பிரமாதமாக இருந்தது. யார் கேட்டரிங் என்று கேட்க வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாது பீடா வைத்திருந்த இடத்திலேயே கேட்டரிங் செய்தவரின் விசிட்டிங் கார்டும் வைத்திருந்தார்கள். தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொள்ளும் படி இருந்தது. 

அடுத்த நிகழ்ச்சியோடு விரைவில் வருகிறேன் !

04 November, 2011

சில அழகிய பனித் துளிகள் !!


1 )  தொல்லை செய்யும் பூனையை என்னவர் இரண்டு கால்களிலும், அவரிடம் இருந்து தப்பித்து அது தன் நான்கு கால்களிலும் துள்ளிக் குதித்து ஓடும் அழகே அழகு

2 )மழைக்காலக் குடைகளாய், ஹெல்மெட்டுகள் தலை அடிபடாமல் இருப்பதை விட தலை நனையாமல் இருப்பதற்கு அதிக முக்கியத்துவம்

3 )வார்த்தைகளின் வெளிப்பாட்டிற்கும், வாழ்க்கையின் வெளிப்பாட்டிற்கும் பலரிடம் 'முரண்' இருக்கிறதே ஏன்? ஏன்?ஏன்? 

4 )மனநலம் குன்றிய குழந்தைகள் எல்லாம் ஒரே ஜாடையில் இருப்பது போல தோற்றம். அவை தெய்வக்குழந்தைகள் ஆனதாலா?



5 )தலை குனிந்து, நெளிந்து வளைந்து நடக்கும் பெண்கள் ,காவல் துறை சீருடையில் பார்க்கும் போது எங்கே போய் முட்டிகிறதுன்னு தெரியல.
சீருடை போட்டதும் சிக்கென கம்பீரம் தொற்றிக் கொள்ள வேண்டாமா?

6 )காதல் தோல்வி கலங்க வைக்கும். தோற்ற காதல் ஜெயித்து மறுபடியும் தோற்றால் உயிரை உருக்கி விடும். கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் 

7 )இருட்டில், துழாவி அலைபேசி எடுத்து , FM க்கு உயிர் கொடுக்கும் போது நமக்கு ரொம்ப பிடித்த பாடல் ஒலித்தால் அடடடா !!அறிவியலின் ஆனந்தம் !

8 )கணவனோடு கோபம் கொண்டு அந்நிய ஆடவனிடம் அந்தரங்கம் பகிர்வது ஆளும் கட்சி மேல் ஆத்திரம் கொண்டு எதிர்கட்சிக்கு ஓட்டு போடுவது போல


9 )உன்னிடம் தோற்க எத்தனை பேர் வரிசையில் நிற்கின்றனர். இன்னும் தயக்கம் ஏன்? முயற்சி செய். முன்னேறு !

10 )உழைப்புக்கு இரண்டு கரங்களை விட ஒரு மனது தான் முக்கியம்.
நான் சென்னைக்கு போறேன்(வாரேன்) அதனாலே எல்லோரும் பத்திரமா இருந்துக்கோங்க !

01 November, 2011

என்ன நான் சொல்றது ?

ரெண்டு நாட்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில் ஒரு பிரிவு உபச்சார விழா. வழக்கமாக பெரிய கான்பெரென்ஸ் ஹாலில் வைத்து நிறைய பேர் பாராட்டி பேச, ஓய்வு பெறுபவரின் குடும்பத்திலிருந்து வந்திருப்பவர்கள் அவர்கள் இவ்வளவு செய்திருக்கிறார்களா என்று வியப்பதுண்டு. ஆனால் ஒரு முறை மிக சிறந்த, ஆனால் குற்றம் செய்பவர்கள் மேல் கடுமையாக நடவடிக்கை எடுக்கும் ஒரு அதிகாரி ஓய்வு பெரும் போது, தாக்குதல் உணர்வோடு பேச  முடிவு எடுத்திருந்த  ஒருவரை தடுத்து அதை தவிர்ப்பது பெரும் பிரயத்தனமானதாகி விட்டது. அதில் இருந்து பிரிவு உபச்சார விழா ஜெனரல் மானேஜரின் அறையில் வைத்து நடப்பதாகி விட்டது. ஓய்வு பெறுபவர்களின் நெருங்கிய நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே கலந்து கொள்ளும் ஒரு சிறிய விழாவாகி விட்டது. 

எனது தோழி ஒருவரும் மற்றும் ஒருவரும் ஓய்வு பெரும் விழா நடந்தது. அந்த பெண்ணின் மகன் மகள் இருவரும் நல்ல நிலையில் படித்து மிகச் சிறப்பாக வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டார்கள். ஆனால் அன்று நடந்த விழாவில் அவரும் அவர் கணவரும் மட்டும் தான் பங்கேற்றிருந்தார்கள். உடன் ஓய்வு பெற்றவர் வீட்டில் இருந்து அனைத்து உறவினர்களும். அந்த பெண்ணின் முகத்தில் ஒரு சோகம் படர்ந்ததை பார்த்ததும் 
"ஏம்ப்பா, பிள்ளைகள் யாரும் வரலியா?" என்றேன்.
"எல்லோரும் ரொம்ப பிஸியா இருக்காங்க " என்றார் இது போலியான சமாதானம் என்று எனக்கு புரிந்ததால் மீண்டும் தொடர்வார் என்று அமைதி காத்தேன். 
"L KG படிப்பை கூட P HD மாதிரி பீல் பண்ணி பேசுறவங்களை என்ன சொல்றது" என்றார்.

இது தான் உண்மை. தான் ஓய்வு பெரும் இன்று கூட தனது பணிகளை ஒதுக்கி வைத்து வர தான்  பெற்றவர்களுக்கு மனது வரவில்லையே என்ற ஆதங்கத்தை எந்த பெற்றோருக்கும்  குழந்தைகள் கொடுத்து விடக் கூடாது. பணிக்கு செல்லும் பெண்கள் அன்புக்கும், கடமைக்கும் பாசத்துக்கும் இடையில் மாட்டிக் கொண்டு எவ்வளவு பாடு படுகிறார்கள் என்று அநேகம் பேருக்கு புரிவதில்லை. வெளிப்படையாக சொன்னால் "அப்போ வேலையை விட்டுட வேண்டியது தானே " என்று பதில் வரும். அதனால் வேதனைகளை உள்ளேயே அழுத்தி கொடுமைக்காரி போல நடமாட வேண்டியது தான். இந்த பெண்மணி கூட இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கும் நிலையில் தான் ஓயவி பெறுகிறார். "என் பேத்தி 'ஆச்சி எனக்கு 100  டேஸ் லீவ் நீ என் கூட வந்து இருக்க மாட்டியா?' ன்னு கேட்கும் போது பரிதவிச்சு போகுது. அதனால தான் வேலையை விட்டுட்டேன்." என்று தான் நன்றி உரை கூறும் போது கூறினார்.   

ஓய்வு பெறுவது என்பது டீன் வயது பிள்ளைகளை நடத்துவது போலவே கண்ணாடி மேல் நடப்பதை போன்றது. அவர்கள் தான் முக்கியமாக நடத்தப் படவில்லையோ என்று நினைக்க தொடங்குவார்கள். அவர்கள் ஓய்வு பெரும் அன்று வந்திருந்து எவ்வளவு சிறப்பாக அவர்களை மகிழ்விக்க முடியுமோ அவ்வளவு மகிழ்விக்க வேண்டும். அந்த ஒரு நாள் நடப்பு அதன் பின் என்ன நடந்தாலும் 'காலக் கொடுமை' மற்றபடி நல்ல பிள்ளை தான் என்று அவர்களை நினைக்க வைக்கும். 

அடிக்கடி அறிவுரை சொல்ல ஆரம்பிச்சிட்டேன் வயசாகிக்கிட்டே போகுதோ என்னவோ?.  ஆதலினால் பிள்ளைகளே பெற்றவர்கள் ஓய்வு பெரும் அன்று என்ன வேலை இருந்தாலும் தூக்கி தூரப் போட்டு விட்டு அன்று அவர்களோடு குடும்பத்தோடு இருந்து அவர்களுக்கு உரம் கொடுங்கள்.  நான் பணி பணி என்று இருந்து பல சந்தோஷங்களை இழந்திருக்கிறேன். ஏன் இன்று கூட இழந்து கொண்டு இருக்கிறேன். அதே தவறை மற்றவர்களும் செய்து விடக் கூடாது என்ற ஆதங்கத்தில் சொல்லும் வார்த்தைகள் தான் இவை. ஏன் என்றால் பல பெரியவர்கள் ஓய்வு பெற்ற அன்று பிறர் பாராட்டி பேசிய சொற்களை மறுபடியும் மறுபடியும் கூறி சந்தோஷப் படுவதை பார்த்திருக்கிறேன். தன் பிள்ளைகள் அத்தனை வேலைகளையும் தூக்கிப் போட்டு பங்கு பெற்றதை பெருமையாய் சொல்வதை பார்த்திருக்கிறேன். காசா பணமா அந்த சந்தோஷத்தை நாம் நம் பெற்றவர்களுக்கு கொடுக்கலாமே ? என்ன நான் சொல்றது ?

27 October, 2011

வாழிய வளமோடு தாய்மை !!

எனக்கு அப்பப்போ என் செல்ல பிராணிகளை பற்றி சொல்லணும்னு ஆசை வந்திடும். போன வாரத்தில ஒரு நாள் எங்களுக்கு பழக்கமான ஒரு குடும்பத்தின் மூன்று பேரும் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். அப்பா, அம்மா, மகள். மகள் பேஷன் டிசைன் படிப்பு முடித்து விடுமுறையில் இருந்தாள். கொஞ்ச நேர சம்பிரதாய   பேச்சுக்கு பின் அந்த பெண்ணின் அம்மா மெதுவாக,
"உங்க வீட்டுக்கு போன தடவை வந்தப்போ பூனை, குட்டி போட்டு இருந்தது. இவளுக்கு படிப்பு முடிஞ்சு வீட்டில நேரம் போகறதில்ல. அதான் ஒரு குட்டி இருந்தா   வாங்கிட்டு போகலாமேனு வந்தோம்" அப்படின்னாங்க. 

எனக்கு ஒரே சந்தோஷம். ஒரு பெண், பூனை வளர்க்க ஆசைப்பட்டதற்காக தாயும் தந்தையும் மெனக்கெடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது. தற்போது கை வசம் இல்லாத காரணத்தால் அடுத்து குட்டி போட்டால் தருகிறேன் என்று உறுதி கூறி அனுப்பினேன்.

எங்க வீட்டு செல்ல புஸ் முதல் குட்டி போட்டது எனக்கு பிளாஷபாக் வந்தது.   
எங்க வீட்ல செல்ல பிராணிகள் வளர்க்க அனுமதித்ததே இல்லை. கணவருக்கும் விருப்பம் இல்லாமல் தான் இருந்தது. எப்படியோ இது மட்டும் ஒட்டிக் கொண்டது. கண் திறக்காத நிலையில் எங்கள் வீட்டுக்கு வந்தது. வளர்ந்து பருவம் அடைந்ததோ, இணை தேடி இணைந்ததோ தெரியாத நிலையில் திடீரென அதன் அடிப்பகுதியில் முடிச்சு முடிச்சாக முலைகள் முளைக்கத் தொடங்கின.

செல்லப் பிராணிகள் வளர்த்தறியாத நானும் என் கணவரும் எதோ வியாதி வந்து விட்டதோ என பயந்து போய் மிருக வைத்தியரிடம் கொண்டு போக முடிவு செய்தோம். நல்ல வேளை பூனை காப்பாற்றியது. கையில் நாய்க் குட்டியை போல பூனையை தூக்கினாலே பயந்து இறங்கி ஓடி விடும் . அதனால் அப்போதைக்கு வைத்தியரிடம் போவதை தள்ளிப் போட்டோம். அது கருவுற்றிருந்த உண்மை தெரிந்த போதுதான் வைத்தியரின் முன்  எப்படிப்பட்ட தலைக் குனிவிலிருந்து காப்பாற்றியது என சந்தோஷப்பட்டேன். ஒரு செல்ல முனகலுடன் என் அருகிலேயே படுத்து இருக்கும். அதை ரொம்ப பரிவோடு தடவிக் கொடுக்கும் போது தான் வயிற்றில் கனமாய் தட்டுப்பட்டது. பிறந்ததில் இருந்து வீட்டிலேயே வளர்வதால் அதன் முகத்தில் கடுமை இராது. ஒவ்வொரு நாளும் வயிறு பெரிதாகிக் கொண்டே போக எனக்கு உள்ளூர பதற்றம் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது. 

ஒரு நாள் அது நிலை கொள்ளாமல் தவித்தது. வாசல் படியில் சப்பணம் இட்டு அமர்ந்த   என் சேலை மடிப்புகளில் உறங்கி பழகிய அது, அதே போல மடியில் ஏற முயன்றது. எனக்கோ மடியில் குட்டி போட்டு விடுமோ எனப் பயம். நான் அதை இறக்கி விடுவதும்  அது மறுபடியும் ஏறுவதுமாக மல்யுத்தம். அன்று முழுவதும் நான் பூனைத் தாயாய் மாறிப் போனேன். மறு நாள் விடிந்தது. ஒரு அழகான காட்சி காணும் சந்தர்ப்பம் அமைந்தது. அதன் கருவாசல் வழியாக ஒரு மெல்லிய வால் மட்டும் வெளியே வந்தது. பூனை நிலை கொள்ளாமல் நடந்த படி அந்த வாலை நாவால் வருடி கொடுத்தது.  

ஒரு வைத்தியர் இல்லாமல், உறவோ நண்பரோ சுற்றி இல்லாமல் கொஞ்ச நேரம் கத்துவதும் கொஞ்ச நேரம் முயல்வதுமாக தொடர்ந்தது. தாயின் பரிவான நாக்கின் வருடலால் குட்டிக்கும் வெளி வர ஆசை அதிகமாகியதோ? அதுவும் வெளியே வர முயற்சி செய்து, தாயின் முயற்சியும், குட்டியின் முயற்சியும் ஒரு நேர்கோட்டில் இணையும் பொழுதில் அந்த பூனைக் குட்டி வெளியில் வந்து விழுந்தது. அடுத்து அரை மணி இடைவெளியில் அதே போல் இரு குட்டிகள். அடர் செங்கல் நிறமும் வெள்ளை நிறமும் வரி வரியாய் அழகாய் ஒரு பூனை குட்டி.  சாம்பல் நிறம் அடர்த்தியையும் மெல்லியதாயும் கலந்த இரு பூனை குட்டிகள். எனக்கு பாரதியின் "வெள்ளை நிறத்திலொரு பூனைக்குட்டி" பாடல் நினைவுக்கு வந்தது. ஈரமாய், அதன் சருமத்தின் முடிகள் எல்லாம் ஒட்டிய நிலையில் இருந்த அந்த குட்டிகளை, பூனை தன் நாவால் நக்கி நக்கியே கொஞ்ச நேரத்தில் அழகாக்கி விட்டது.

ஒரு கிண்ணத்தில் நாங்கள் வைத்த பாலை, தன் குட்டிகளுக்கு  பால் கொடுத்தபடியே குடுத்து முடித்தது.  சாதாரணமாய் குட்டி போட்ட பூனை ஆக்ரோஷமாய் இருக்கும் என்பார்கள். எங்கள் மேல் வைத்த நம்பிக்கையின் காரணமாய் குட்டிகளை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் இன்றி விச்ராந்தியாய் குட்டிகளுக்கு பால் கொடுத்தபடி சொக்கிப் போய் படுத்துக் கிடந்தது. 

இந்த பதிவு முதல் பிரசவத்தை எதிர் நோக்கி இருக்கும் பெண்களுக்கு சமர்ப்பணம். மனித இனம் அழிந்து விடாமல் காக்கும் பணியில் அணிலாய் நம் சேவை தான் இந்த பிரசவம். இதில் பெருமிதப் பட்டு சின்ன சின்ன சிரமங்களை சகித்துக் கொள்ளப் பழகிக் கொள்ளவேண்டும். இந்த சிரமங்களை அனுபவிக்கப் பழகி விட்டால் இயல்பான , ஆபரேஷன் தேவை இல்லாத பிரசவத்துக்கு நாம் தயாராகி விடுவோம். 

வாழிய வளமோடு தாய்மை !!


25 October, 2011



கோலாகலமாய் இருக்கட்டும்
இந்தத் தீபாவளி .
இன்பத் தீபாவளி.

இன்றொரு நாளாவது
விடியலைப் பார்க்கட்டும்
இளைய தலைமுறை.

நம்பிக்கைகள் துளிர்க்கட்டும்
நாச வேலை நரகாசுரன்கள்
நசித்துப் போகட்டும்.

இன்று போல இன்பம்
என்றும் நிலைக்கட்டும்
இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள் !!

24 October, 2011

சமையல் தேர்வு

கொஞ்சம் கொசுவத்தி சுத்தி பழைய நினைவுகளை அசை போட ஆசை வந்தாச்சு
அப்போ நான் காலேஜ் மாணவி. வீட்டில எப்போவும் சமையலுக்கு ஆள் உண்டு. அந்த அம்மா எப்போவாவது லீவ் போட்டா எங்களுக்கு எல்லாம் ஒரே கொண்டாட்டம் தான். ஏன்னா அம்மாவுக்கும் ரொம்ப விசேஷமா சமைக்கத் தெரியாது. அதனால வடகம், துவையல், பருப்பு கடஞ்சதுன்னு எல்லாம் எங்களுக்கு பிடிச்சதா இருக்கும். அப்படியாப்பட்ட ஒரு நாளில் எங்கள் தெருவில்  உள்ள ஆண்கள் "உனக்கு டைனிங் டேபிள் போனாத்தானே என்ன சமையல்னே தெரியும்னு " ரொம்ப கலாச்சதாலும், அன்று எனக்கு விடுமுறையா இருந்ததாலும் "அம்மா இன்று நான் சமையலை கவனிச்சிக்கிறேன்" னு ரொம்ப பெருமையா சொல்லிட்டேன். மெனு என்ன தெரியுமா ரசம், வாழைக்காய் பொரியல். (பெரிய்ய்ய்யா மெனு!) ஆனா அன்னிய தேதிக்கு அதுவே பெரிய விஷயம். இப்போ நான் சமையல்ல கில்லாடி தைரியமா சாப்பிட வரலாம்.

எதிர் வீட்டு பாட்டியிடம் ரசம் எப்படி வைப்பதுன்னு எல்லாம் கேட்டுட்டு வந்திட்டேன். எல்லாம் அவங்க சொன்னபடியே செய்தாச்சு. அந்த நேரம் பார்த்து எங்க பக்கத்து வீட்டில இருந்த எங்க சித்தி உள்ளே வந்ததும் நான் ரொம்ப ஆர்வமா "சித்தி இன்னைக்கு நானே ரசம் வச்சிட்டேன். டேஸ்ட் பண்ணி எப்படி இருக்குனு சொல்லுங்க" னு சொன்னதும் 
"கொஞ்சம் நேரம் ஆகட்டும் சூடா இருக்கும்ல "ன்னாங்க.
எனக்கு அப்போ தான் உள்ளுக்குள்ள திகீர்னது. "சூடா இருக்குமா?" 
ஏன்னா எல்லா செய்முறையும் சொன்ன அந்த பாட்டி அவ்வளவையும் அடுப்பில வைச்சு செய்யணும்னு சொல்லாததாலே எல்லாம் கீழேயே வைத்து செய்து முடிச்சிட்டேன். 

எனக்கு ஒரு தங்கச்சி இருக்குது. அறுந்த வாலா அப்போ இருந்தது. இப்போ ரொம்ப அமைதி. அதுக்குள்ளே வாசலுக்கு போய் அங்கே நின்னவங்க கிட்டே எல்லாம் "எங்க அக்கா அடுப்பிலேயே வைக்காம ரசம் வச்சிட்டுது" னு தண்டோரா போட்டுட்டா. அந்த அவப் பெயரை நீக்க எனக்கு ரொம்ப காலம் ஆச்சுது. என்னோட வீட்டுக்காரர் வேற ஒற்றை நாடி சரீரமா இருப்பார். 
"என் இப்படி இருக்கீங்க " னு யாராவது கேட்டுட்டா 
"அடுப்பிலேயே வைக்காம சமைச்சு கொடுத்தா இப்படித்தான் இருப்பார்" னு என்னை மண்டை காய வைப்பாங்க.

ஆனா இத்தனை வருஷத்துக்கு அப்பறம் எனக்கு சாதகமா ஒரு விஷயம் கிடைச்சிருக்கு.  குழம்பு கூட்டறது தரையிலேயே வைச்சு செய்றது தானே  அதையே தான் அன்னைக்கும் செய்திருக்கேன் என்ன ஒரு தடவையாவது அடுப்பில வச்சிருக்கணும்......

புளிக்குழம்பு சுவையாக செய்ய செய்முறை:
புளியும் உப்பும் போட்டு கரைத்து வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும். அதில் மல்லித்தூளை போட்டு கரைத்து விடவும். தேங்காய், வற்றல், சீரகம், மூன்று பல் பூண்டு எல்லாம் போட்டு மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்து அதையும் புளித் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். முருங்கைக்காய், வாழைக்காய் ஏதேனும் ஒரு காயை தண்ணீரில் வேக வைத்து அதையும் குழம்பு கூட்டியதில் போடவும். வெண்டைக்காய் புளிக் குழம்புக்கு மட்டும் வெண்டைக்காயை தனியாக சிறிது எண்ணை விட்டு நன்கு வதக்கி போட்டால் போதும் வேக வைக்க வேண்டாம். இது வரை அடுப்புப் பக்கமே போற வேலை இல்லை.

எண்ணை விட்டு கடுகு,சிறிது வெந்தயம் (வெந்தயம் கூடினால் கசப்பு வந்து விடும்) கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி, நான்கு பூண்டு பல் போட்டு வதக்கவும். புளி கரைத்ததில் உப்பை கொஞ்சம் குறைவாக போட்டு மீதியை வெங்காயம் வதக்கும் போது போட்டால் தக்காளி நன்கு மசிந்து விடும்.  வெங்காயம் பொன் நிறமாக வெந்ததும் குழம்பு கூட்டியதை ஊற்றி சிம்மில் வைத்து மூடி விட்டால் நீங்கள் அடுத்த வேலையை பார்க்க போய் விடலாம். குழம்பின் வாசம் தயாராகி விட்டது என்பதை உங்களுக்கு சொல்லி கூட்டி  வந்து விடும் 

செய்து பார்த்திட்டு சொல்லுங்களேன் நான் சமையலில் தேறி விட்டேனா என்று 

19 October, 2011

இரு கோடுகள் !!

இரு கோடுகள் !!
ஜெமினி நடிச்ச பழைய படத்தை பத்தி ஏதேனும் சொல்லப் போறேன்னு நினைச்சீங்களா? அது தான் இல்ல .

இது ஒரு அனுபவ பகிர்வு. நம்ம எப்போவுமே அழகு, திறமை போன்றதில ஒருவரை தனியா குறிப்பிடுறோம். ஆனால் அது அப்படி இல்லைன்னு நினைக்கிறேன். என்னோட பணிக் காலத்தில முழுசும் மிகச் சிறந்த அதிகாரிகளிடம் பணி புரியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்களது அனுபவத்திற்கும் திறமைக்கும் முன் நாம் தனித்து தெரிய ரொம்ப சிரமப் பட வேண்டி இருக்கிறது. அதுவே நம்மை விட திறமை சற்று குறைந்த அதிகாரிகள் அவர்களை விட திறமை குறைந்த மேலதிகாரிகளிடம் பணி புரியும் போது சுலபமாக நல்ல பெயர் தட்டிச் சென்று விடுகிறார்கள். இவர்கள்    செய்யும் சிறு விஷயம் கூட அவர்களுக்கு பிரமிப்பைத் தருகிறது 

அதே போல் தான் நமக்கு கீழே பணி புரியும் அதிகாரியும் திறமைசாலி என்று பெயர் எடுத்தவராய் இருந்தாலும் நமது வேகத்துக்கும், திறமைக்கும் ஈடு கொடுக்க முடியாதவராய் இருந்தால் நாம் சலித்துக் கொள்கிறோம். இந்த இரு கோடு தத்துவத்தை உணராமல் "அதெப்படி அவரிடம் நல்லா வேலை செய்தவர் இவரிடம் சுமாரா வேலை செய்வார்" என்று வாக்குவாதம் பண்ணுகிறோம். 

இந்த திறமை என்பதையும் ஒரு பண்டலாக பார்க்க கூடாது.  நான் பணி புரியும் இடங்களில் கணினி சார்ந்த சிக்கல்களை விடுவித்து சிறப்பாக பணி புரிகிறேன் என்று வைத்துக் கொள்வோம். அதனாலேயே என்னை கணினிப் பிரிவில் கொண்டு போய் பணியில் அமர்த்தினால் அங்கு இருப்பவர்கள் எனது திறமையை மிகப் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் போகலாம். 

விஷயங்களை சுலபமாக கிரகித்துக் கொள்ளும் தன்மை உள்ளவர்கள் ஒரு இடத்தில் புதிதாக பணியில் சேரும் போது ஆரம்பத்தில் சிரமப் படுவது போல் தோன்றினாலும் சீக்கிரத்திலேயே சூழ்நிலையை தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். ஒரு தனி மனிதன் எதில் சிறந்து விளங்குகிறான் என்று பார்த்து அதை சார்ந்த பணியைக் கொடுத்தால் அவனுக்கும் நிறைவு இருக்கும் நிறுவனத்துக்கும் பலன் இருக்கும். நமது தேவை ஒருவரை திறமை அற்றவர் என்று நிரூபிப்பதல்ல, நிறுவனத்துக்கு எப்படி அவன் சேவையை பயன் படுத்திக் கொள்ளலாம் என்பதே. 


இப்போ இதை சொல்ல என்ன அவசியம் வந்ததுனு பார்க்கிறீங்க   இல்ல. அவசியம் வந்திடுச்சே. IPMS (Indivudual performance monitoring scheme) என்று ஒன்று சில நிறுவனங்களில் கொண்டு வந்திருக்கிறார்கள். இது குழுவாக  இல்லாமல் ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் நிறுவனம் உயர்வதற்கு என்ன தனிப்பங்கு ஆற்றி இருக்கிறான் என்பதை கணக்கிட தான் இந்த முறை. 

கணக்கிட வேண்டிய அதிகாரி இந்த இரு கோடுகள் தத்துவத்தை மனதில் கொண்டு கணக்கிட வேண்டும். தனது வேகத்தோடும், திறமையோடும் பொருத்திப் பார்த்து ஒருவனை எடை போடாமல், கொடுக்கப்பட்ட வேலையை முடிக்க வேண்டும் என்ற முயற்சிக்கும் மதிப்பெண் கொடுக்க வேண்டும். உழைக்கும் இரு கைகளுக்கும் கொடுக்கும் மதிப்பெண்ணுடன் உழைக்க வேண்டும் என்ற மனதிற்கும் மதிப்பெண் கொடுக்க வேண்டும் . 

இப்படி செய்வது பணி புரிபவர்களை ஊக்குவிப்பதாகவும் இருக்கும், மனம் தளர்ந்து போகாமல் இருக்கவும் செய்யும். நான் எல்லாம் சரியாய்த்தான் சொல்லி வருகிறேன்னு நினைக்கிறேன். 
உழைப்புக்கு இரண்டு கரங்களை விட ஒரு மனது தான் முக்கியம்.