Bio Data !!

31 August, 2020

கொரோனாவுக்கு ஒரு கடிதம்.
அனுப்புநர்
வேற யாரு
நாந்தேன்.

பெறுநர்
கொரோனா
கொள்ளை நோய் பட்டி
உலகம்.

அன்புள்ள கொரோனா

நீ நலமாத்தான் இருப்ப. கேட்க வேண்டாம். ஆனால் நாங்க நல்லாவே இல்லை. எங்கேயோ சைனாவில இந்த வியாதி வந்தப்போ "பாம்பையும் பல்லியையும் தின்னான்க. அவஸ்தப்படட்டும்னு ஜாலியா இருந்தோம். இப்படி உலகம் முழுவதும் டூர் அடிப்பேன்னு தெரியாம போச்சு. வச்சு செய்றியே கொரோனா.

ஒரு நாளைக்கு ஐம்பது அறுபது தடவை கையைக் கழுவி கை ரேகையெல்லாம் அழிஞ்சு போச்சு தெரியுமா? கொரோனா ல இருந்து தப்பிக்க முடியுமானு ஜோசியக்காரன்ட போய் கேட்டா கையப் பார்த்திட்டு ரேகையெல்லாம் எங்கேன்னு கேட்கிறான்.

மாஸ்க்கை போட்டே சுத்தி சுத்தி இப்ப எதிரே யாராவது மாஸ்க் போடாம வந்தா அடையாளமே தெரியிறதில்லை தெரியுமா? முன்னால ஒரு காலத்தில சேலைக்கு சம்பந்தமில்லாத ப்ளவுஸை போட்டு யார் கேட்டாலும் "இப்ப இது தாங்க ஃபேஷன்னு டபாய்ச்சுகிட்டு இருந்தேன். இப்போ " என்ன டிரஸ்சுக்கும் மாஸ்க்குக்கும் சம்பந்தமே இல்லை" கிறாங்க. என்ன பதில் சொன்னாலும் ஏமாற மாட்டேங்கிறாங்க. தெரியுமா?

இதில சிலர் "என்ன ஸ்கை ப்ளூ டிரஸ்சுக்கு நேவி ப்ளூ மாஸ்க் போட்டிருக்கன்னு கேட்டு கொல்றாங்க. உன்னை பாம்புன்னு நினைச்சு பயப்படுறதா பழுதுன்னு நினைச்சு தாண்டுறதான்னு ஒரே குழப்பமா இருக்கு.

விளக்கு ஏத்தி மணி அடிச்சு டான்ஸ் ஆடி பாட்டுப் பாடி எல்லாம் பார்த்தாச்சு. நீ எதுக்கும் ஏமாறுற மாதிரி தெரியல. நாலு மக்களை பார்த்து நாளு பல ஆச்சு. (எல்லாம் தெரியும் தெரியும் னு உன் மைன்ட் வாய்ஸ் கேட்குது.)

26870 பேர் இருக்கிற மத்யமர்ல அத்தனை பேரையும் விட்டுப்புட்டு உனக்கு கடிதம் எழுதுறேன். முதல்ல போட மாட்டேன்னு சொன்னவங்க கூட கொரோனாவை எதுக்கு பகைச்சுகிட்டுனு நினைச்சாங்களோ என்னமோ போடச் சொல்லிட்டாங்க.

நேற்று உன் மேல உள்ள கொள்ள காதல்ல எழுதினதைப் போல இப்போ எழுத முடியல. இருந்தாலும் என் காதலைப் புரிஞ்சுகிட்டு
கோ  ஃபாஸ்ட் கொரோனா
வேகம் போ(ங்க) கொரோனா
பேக ஹோகு கொரோனா
வேகம் போய்க்கோ கொரோனா
வேகங்க வெள்ளான்டி கொரோனா
ஜல்தி ஜாவோ கொரோனா.

இப்படிக்கு





 இப்படிப்பட்டவர்களும் இருப்பதால் தான் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம்.


Avesh Vhichker . இவர் 25 வயது IT professional. அவர் ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு ஜிம்மிலிருந்து திரும்பும் போது தன் அபார்ட்மென்ட்டின் தூண்களில் லேசான விரிசல் தெரிகிறது. உறுத்துகிறது. அது ஒரு ஐந்து மாடிக் கட்டடம். ஆனால் சீரியஸா நினைக்காம வீட்டுக்கு போயிட்டார். 


அவர் அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்துக்கு பக்கத்தில் பிரிட்ஜ் இருந்திருக்கிறது. திடீரென்று அந்த பிரிட்ஜில் சின்ன அசைவு தெரிந்திருக்கிறது. அம்மாவிடம் ஏதும் வித்தியாசம் தெரிந்ததா எனக் கேட்டிருக்கிறார். அவர்கள் உணரவில்லை.


ஆனால் இவருக்கு தான் மாலையில் பார்த்த தூணின் விரிசல் ஞாபகம் வந்ததும் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என உணர்ந்து அவசரமாய் வீட்டிலுள்ளவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார். இறங்கும் போது ஒவ்வொரு வீடாக தட்டி விஷயம் சொல்லி அனைவரையும் வெளியே வரச் சொல்லி 20பேருக்கு மேலாக காப்பாற்றி இருக்கிறார்.


அவர் பயந்தது போலவே கொஞ்ச நேரத்தில் மொத்த கட்டடமும் மண்ணோடு மண்ணாய். சுமார் 16 பேர் இறந்து போனார்கள். அந்த வீடுகளின் மொத்த எதிர்காலமும் மண்ணுக்குள் புதைந்தது. 


ஒரு எலக்ட்ரீஷியன் Naveed Duste அந்த கட்டடத்துக்கு வேலை செய்ய வந்தவர் தனக்குத் தெரிந்த குடும்பம் அங்கே இருப்பது ஞாபகம் வர போய் காப்பாற்றி இருக்கிறார். திரும்பி வரும் போது அவர் இரு கால்களிலும் அடிபட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாய்.


மற்றுமொரு தெய்வம் Kishore Lokhande. இவர் அங்கே இடிந்து கிடந்த கட்டட பாகங்களை நீக்கும் பணியில் இருந்தார். அவர் தான் அதற்கிடையே சிக்கிக் கொண்டிருந்த மனிதர்களை/மனித உடல்களை மீட்க உதவி உள்ளார். 24வயது இளைஞன். 36மணி நேரம் தொடர்சியாக அந்த JCB மெஷினில் அமர்ந்து உழைத்திருக்கிறார். மெஷினில் ஏறிய 26மணி நேரங்களுக்குப் பின் தான் முதன் முறையாக கீழே இறங்கி இருக்கிறார்.  நாலைந்து முறை இயற்கையின் அழைப்புக்கு இறங்கியது தவிர மீதி நேரமெல்லாம் மெஷினிலேயே. இவரது உதவியால் ஒரு நாலு வயதுக் குழந்தை உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறது.


மறு நாள் அங்கு குடி இருந்தவர்கள் அந்த கட்டட சிக்கல்களுக்கு நடுவே தன் வீட்டில் வைத்திருந்த பாஸ்போர்ட், ஆதார், பாங்க் பாஸ்புக் இன்னும் எத்தனை விலை உயர்ந்த பொருட்கள் நம் வீடுகளில் வைத்திருப்போம். அதில் ஏதாவது கிடைக்காதா என குப்பையைக் கிளரும் கோழிகளாய் சுற்றி வந்தது பரிதாபமாய் இருந்திருக்கிறது. ஒரு நிமிடத்தில் போட்டிருக்கும் உடைகள் தவிர வேறெதுவும் இல்லாதவர்களாகிப் போனார்கள்.


இது நடந்த அபார்ட்மென்ட்டின் பெயர் "Tarique Garden" New Mumbai. இந்த தெய்வங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்களால் தான் இன்னும் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது.

07 August, 2020

 "Gently falls the bakula"

This book was written by Sudha Murthy. Yes she is wife of Infosys N.S. Narayana Murthy. This is the first book I am reading of this author. Wonderful love story.

"When you are mine your loan is also mine. It comes as a package. I cannot say I want only my husband. His joys and difficulties are also acceptable to me" 

இவ்வளவு அருமையான பெண் தான் மனைவியாக வருகிறாள். பள்ளியில் மிகச் சிறப்பாக படிக்கும் மாணவன் மாணவி  ஸ்ரீகாந்தும் ஸ்ரீமதியும் காதலித்து மணமுடிக்கிறார்கள். அவனை மணமுடிக்க முடிவு செய்யும் போதே அவனுடைய கடன்களையும் சேர்த்தே தான் ஏற்றுக் கொண்டதாக சொல்கிறாள்.

"He thought she was like the lady who carries a torch and removes all the obstacles on the road to success for her husband. He had taken her for granted. He had a rare diamond in his hand but he was searching for a worthless glass of achievement."

ஆணின் இந்த taken for granted மனநிலை தொடரும் போது தான் ஒரு பெண் தன் மனநிலையை மாற்றிக் கொள்கிறாள்.

"Shri asked a simple question . Which is more important. The kalinga war which your emperor Ashoka fought or present day terrorism which we have to stop"

அவள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி. அவன் இரண்டாவது. தன் ஆர்வத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சரித்திரம் எடுத்து படிக்கிறாள். அவன் கம்ப்யூட்டர் படித்த பெரிய வேலைக்கு போகிறான். அது தெரிந்தும் அவள் ஆர்வத்தை தாழ்வாக பேசுகிறான். யார் என்று தெரியாத ஒருவனைத் திருமணம் செய்து இது நடக்கும் போது பெண் மனம் அடிபடுவதில்லை. 

Business has taught him to insult a person. Yoy don't need to attack him or her directly. One can do that instead by attacking what that person admires or respects. In company's language it is "Track report"

ஆனால் அவள் அதைப் புரிந்து கொள்கிறாள். "If you can't understand my silence then you will not understand my words" என்று சொல்கிறாள். என் மௌனத்தை புரிந்து கொள்ளாத உன்னால் நான் அதை வெளிப்படுத்தினாலும் என் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாது என்கிறாள்.

Nothing is free in life. In achieving your position you have lost your shrimathi. 

அவள் புத்திசாலியாகவும் பணிவு கொண்டவளாகவும் இருந்ததினாலேயே அவன அவளை அலட்சியப்படுத்தி விட்டான். அவள் கோபமாகவும் தனக்கு வேண்டியதை அழுத்தமாக கேட்டுப் பெருபவளாகவும் இருந்தால் அவன் இவ்வளவு அலட்சியப்படுத்தி இருக்க மாட்டான். 

முடிவு ரொம்ப யதார்த்தமாக இருக்கிறது. இன்றைய திருமணங்கள் பலவும் ஏன் தோல்வி அடைகின்றன என்பதன் காரணம் வெகு தெளிவாக புரிகிறது. கண்டிப்பாக வாசியுங்கள். நல்ல ஒரு எழுத்தாளர் அறிமுகமானதில் மகிழ்ச்சி.