Bio Data !!

06 July, 2020

கிண்டிலில் வெங்கட் நாகராஜ் என்பவர் எழுதிய "ஏழு சகோதரிகள் (பாகம் 1) வாசித்தேன். வட கிழக்கு மாநிலங்கள் ஏழை ஏழு சகோதரிகளாக உருவகப்படுத்தி இருக்கிறார்.  முதல் பாகத்தில் மணிப்பூரையும் நாகாலாந்தையும் பற்றி சொல்லி இருக்கிறார்.

முதல் சகோதரி மணிப்பூர். மணிப்பூரில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பதினைந்தாம் நூற்றாண்டு கோயில் ஒன்று இருக்கிறது. செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட முதல் கோயிலாம்.

மணிப்பூர் ராஜாவையும் மக்களையும் அவமதிக்கும் விதமாக பீர் திகேந்திர ஜீத் சிங் மற்றும் தளபதி தங்கல் ஆகியோரை தூக்கிலிட்ட இடத்தில் ஆங்கிலேயர்கள் 8000 பெண்களை விதவைக் கோலத்தில் நிற்க வைத்து தூக்கிலிட்டார்களாம்.
அந்த இடத்தில் உயிரிழந்த தியாகிகளுக்காக ஒரு ஸ்தூபி எழுப்பி இருக்கிறார்களாம். மூன்று தூண்கள் கீழிருந்து மேல் நோக்கிச் சென்று மேலே சேர்கிறதாம். அங்கே மணிப்பூர் நகரச் சின்னமான டிராகன்கள் மூன்று வைத்திருக்கிறார்கள்களாம்.

இரண்டாவது சகோதரி நாகாலாந்து. இங்கே நாகாலாந்து பழங்குடி மக்கள் தவிர பல பீஹாரிகளும் உத்திரப் பிரதேச மக்களும் இருக்கிறார்கள். கூலி வேலை செய்பவர்கள். ஒரு நீண்ட குச்சியில் இரண்டு பக்கமும் தகர டின்னில் தண்ணீர் கொண்டு வரும் வேலையும் செய்கிறார்கள். தண்ணீருக்கு இங்கே பஞ்சம்.

தலைநகரமான கொஹிமாவில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும்  மிகப் பெரிய மரச்சிலுவை அமைத்த சமயத்தில் ஆசியப் பகுதியிலேயே பெரிதாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
நாகாலாந்து மக்களும் சீனர்களைப் போலவே வாத்து வெள்ளெலி புழுக்கள் நத்தை தேனீக்கள் எதையும் விடுவதில்லையாம். எல்லாம் உண்கிறார்களாம்.

ஏழு சகோதரி மாநிலங்களில் எல்லா மாநிலங்களிலுமே பெண்கள் தான் வேலை செய்கிறார்கள். வேலை செய்யும் ஆண்களைப் பார்ப்பது கடினமாக இருக்கின்றது. பெண்கள் தான் இங்கே குடும்பத்தினை தாங்குகின்ற தூண்கள். வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு கைக் குழந்தைகளை முதுகில் கட்டிக்கொண்டு கடைகளுக்கு வியாபாரம் செய்ய வந்து விடுகிறார்கள்.

நாகாலாந்து மக்களுக்கு ஒரு பழக்கம் இருந்ததாம். தன் எதிரிகளைக் கொன்று மண்டை ஓடுகளை சேகரித்து வருவார்களாம். ஒவ்வொரு முறை தலையைக் கொய்ததும் தன் உடலில் பச்சை குத்திக்  கொள்வார்களாம். அது அவர்கள் வீரத்துக்கு அடையாளமாக இருக்குமாம்.

மற்ற சகோதரிகளையும் அறிந்து கொள்ள ஆவலாய் காத்திருக்கிறேன்