chella நாய்க்குட்டி
02 June, 2026
"நீ உன் வாழ்க்கையின் வசந்த காலமெனும் வாலிபப் பருவத்தில் கடவுளை அழைக்காவிடில் குளிர் காலமெனும் முதுமைப் பருவத்தில் அவர் வர மாட்டார்."
இன்று வாசித்ததில் என்னை பாதித்தது. என்னைப் பொருத்தவரை எப்போ அழைத்தாலும் தயங்காமல் வந்து அரவணைப்பவன் தான் இறைவன்.
நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க.
29 May, 2026
மலரினும் மெல்லிய மனமுடையார்
இந்த பூ பேர் தெரியாது. மகிழம்பூவா இருக்கலாம். நல்ல மணம்
அத்த இடத்தைக் கடக்கும் போது வா வா என்றழைக்கும். அத்தனை பேரும் அலட்சியப்படுத்திய அழைப்பை ஒருவர் மதித்தார்.
தினம் உதிரும் பூக்களை அழகாக அடுக்கி வைத்தார். நான் இன்று அவரிடம் பேசினேன். ஆங்கிலத்தில் தான்.
ரொம்ப ஆர்வமா தினமும் அலங்கரிக்கிறீங்களே! என்றேன். அதற்கு அவர் சொன்ன பதில் தான் பதிவெழுதத் தூண்டியது.
இரவெல்லாம் நிறைய பூக்கள் உதிர்ந்து கிடக்குது. அப்படியே விட்டால் ஏறி மிதித்து நடந்து போவாங்க. அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அதனால விழுந்த பூக்களை அலங்கரிப்பேன் என்றார்.
ஒரு நல்ல விஷயம் என்னென்னா இதன் பக்கத்தில் உதிர்ந்து கிடக்கும் பூக்களையும் மக்கள் மிதிப்பதில்லை. ஒதுங்கிச் செல்கிறார்கள்.
மலரினும் மெல்லிய மனமுடையவர்கள்.
28 May, 2026
நமக்கு அவர்களைப் பார்த்துப் பொறாமைப் பட எவ்வளவோ விஷயங்கள் இருக்கும். ஆனால் நமக்கு பொறாமையே வராது. அவர்களிடம் இல்லாத ஒரு விஷயம் நம்மிடம் இருக்கும். அதைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். இவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.
27 May, 2026
இது என்னாது?
உங்க பேரை அடித்தால் google map இல் உங்கள் பெயரில் உள்ள எழுத்துக்களுக்கு ஏற்ற மாதிரி Landscape ஐ எடுத்து வருகிறது. படம் இணைத்திருக்கிறேன் பாருங்கள்.
என்ன செய்யணும்?
Google search ல nasa னு அடிங்க. கீழே வர்ர வரிசையில் your name in landsat னு வரும் அதைத் தேர்ந்தெடுங்க. உங்க பெயரைச் சொல்லச் சொல்ற இடத்துல பேரை டைப் பண்ணுங்க.
படத்தில் உள்ள படி வரும். முயன்று பார்த்து enjoy பண்ணுங்க.
19 April, 2026
#நான் கேட்ட நற்செய்தி 2
"அதிகாரம் எப்போதுமே ஒரே இடத்தில் குவிந்து கிடக்கக்கூடாது. அது பரவலாக்கப்பட வேண்டும். அப்போது தான் தவறுகள் குறையும். பணிகள் முடிவுக்கு வரும். "
ஆமாங்க நினைச்சுப் பார்த்தா வேலை நடக்காத ஒரு அலுவலகத்தை உற்று நோக்கினா மற்றவர் மேல் நம்பிக்கை இல்லாமல் அத்தனை பொறுப்பையும் தானே சுமந்து , தானும் முடிக்க முடியாமல் பணிகள் தேங்கிக் கிடப்பதைப் பார்க்கலாம்.
வீடுகளில் மாமியார் மருமகளிடம் வேலைகளைப் பிரித்துக் கொடுக்கத் தெரியாமல் தானே செய்து புலம்பிக் கிடப்பதைப் பார்க்கலாம்.
அதிகாரம் தேங்கும் போது மாற்றி யோசிக்கும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. தவறு ஏற்பட்டு விட வாய்ப்பு அதிகம். பிரித்துக் கொடுத்து விட்டால் நாம் மேற் பார்வை மட்டும் பார்த்தால் போதும்.
சிந்திப்போமா.
Subscribe to:
Posts (Atom)
