chella நாய்க்குட்டி
29 June, 2026
பெண்களாகிய நமக்கு உடம்பு சரியில்லைன்னா, கூட இருக்கிறவங்களுக்கு முதல்ல தோணுற எண்ணம் "நம்ம routine spoil ஆகுமே" என்பது தான். இதை உணராம நாமும் நமக்கு கடைசி priority தான் கொடுக்கிறோம். நம்ம உடம்புக்கே வாய் இருந்தா அழும் என்னையும் கவனிச்சுக்கோன்னு. அதனால் ஒவ்வொருவரும் அக்கரையில் தனக்கு முதல் இடம் கொடுப்போம். ஏன்னா இப்போ வர்ர சின்ன சின்ன வியாதிகள் கூட அத்தனை பேருக்கும் இழுத்து விட்டுட்டுத் தான் போகுது. அதனால் தன்னைக் காத்துக் கொள்வதும் பிறர் நலம் தான்.
மரபணுக்களை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் கடத்திகளாக நம் கண் முன்னே வளரும் குழந்தைகள் தான் நம் தவறுகளை, பலவீனங்களைக் கண் முன்னே காட்டுகின்றன.
24 June, 2026
நம் மனதுக்குப் பிடித்தவரும் நாமும் இணையத்தில் ஒரே நேரம் இருந்தாலே இருவரும் இணைந்திருப்பது போன்ற உணர்வு வருகிறதே?
உங்களுக்கு எப்படி?
22 June, 2026
பல ஆண்டுகளுக்குப் பின் என்றோ ஒரு நாள் தான் காதலித்த பெண்ணை மறுபடியும் பார்த்ததை ரசித்துச் சொல்கிறார் இயக்குநர் இமயம் பாரதிராஜா தன்னைப் பேட்டி எடுத்த இயக்குநர் கௌதம் மேனனிடம். இப்போ வந்தாக் கூட ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பதாகத் தன் 84 ஆம் வயதில் சொல்கிறார்.
ஆணுக்கு இருக்கும் இந்த சுதந்திரம் பெண்ணுக்கு இருக்கிறதா?
ஓ !! நம் நாட்டின் பண்பாட்டைக் காக்கும் தலையாய கடமை பெண்ணிடம் அல்லவா இருக்கிறது.
09 June, 2026
45 வருடங்களுக்கு முன் ஒரு காட்சி அப்பா இல்லை. அம்மா மட்டுமே . மருத்துவமனையில் பிள்ளை பெற்றவள் ஓடி வந்து அம்மாவைப் பற்றிய படி காலில் விழுந்து அழ, அம்மா அழ, சுற்றி இருந்தவர்கள் அத்தனை பேரும் அழ உள்ளே தொட்டிலில் குழந்தை தனியாக அழத் தொடங்கியது. பிள்ளை பெற்றவள் வேறு யாரும் இல்லை நானே தான். காதல் திருமணத்தால் கோபத்தில் இருந்த அம்மா பிள்ளை பெற்ற மூன்றாம் நாள் தான் பார்க்க வந்தார்கள்.
இன்று ஏன் இது நினைவுக்கு வருகிறது? யாருடைய ஆதரவும் இல்லாமல் குடும்ப வாழ்க்கையைத் தொடங்குவது, தனி ஒருத்தியாய் ஆதரவில்லாமல் பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறுவது. தாய் இணைந்த கையோடு கணரிடமிருந்து அழ அழ பிரித்துச் செல்வது இதற்கெல்லாம் என்ன விலை? என் கணவரிடம் சொன்னார்கள் "அவளையும் குழந்தையையும் மட்டும் தான் அழைத்துச் செல்ல முடியும். விருப்பம் இல்லையென்றால் இங்கேயே வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்"
இத்தனைக்கும் மேலே பணி புரிந்து இல்லற சுமைகளுக்கு தோள் கொடுக்கிறாளே அந்த வலிகளுக்கும் விலை நிர்ணயிக்க முடிந்தால் கணக்கு போடலாம். இல்லறத்தில் யார் அதிகம் செலவு செய்தது என.
பெண்கள் ஆண்களின் குடும்பச் சுமைக்கு தோள் கொடுக்கத் தான் பணி புரிய வந்தார்கள். தனக்கான செலவுகளைத் தானே பார்த்துக் கொண்டு கணவனைக் கொஞ்சம் விடுவிக்கலாமே என நினைத்தார்கள். இன்றைய நிலைமை என்ன? இன்று எத்தனை பேருக்கு அது நினைவில் இருக்கிறது.
என்னமோ மனசு தொய்ந்து இருக்கிறது. சொல்லணும்னு தோணுச்சு.
Subscribe to:
Posts (Atom)
