ஒரு நீண்ட நெடும் இடைவெளி.
செய்யும் தொழிலை திருத்தமாக செய்வோமே என கொஞ்சம் விலகி இருந்தேன்.
இதோ ஒரு சின்ன கவிதையோடு மறு விஜயம்.
தாய்க் கூடு தேடி என்னை வெறுமையில் விட்டுச் சென்ற பேரனின் தாக்கம் தான் கவிதையின் கருப் பொருள்.
இனி கவிதை(!?!)
எரிய மறந்த இரவு விளக்கும் ,
ஈரம் உலர்ந்த பக்கத்து படுக்கையும்,
ஆடாது அசையாமல் நின்ற
தொட்டில் கயிறும்,
முகம் சுழித்து எழும் உன்
விம்மல் கரைந்த காற்றும்,
விரல்களின் நிமிண்டலில்
கலகலத்து எழும் உன் சிரிப்பொலியும்,
உதடுகளின் முணுமுணுப்பில்
உறைந்த என் தாலாட்டுப் பாட்டும்,
என்னைப் போலவே
ஊமையாகி நின்றன .
என் செல்லமே !!
என் செல்லமே !!
உன் தாய் வீடு செல்ல நீ
தயாரான போது .
சிறு குழந்தைகளின் வளர்ப்பு பற்றி கேட்டு அறிந்த சிறு குறிப்பு உங்கள் உதவிக்கு.
காலையில் ஐந்து நிமிடம் குழந்தையின் இரு புருவங்களுக்கு மத்தியில் நாம் பொட்டு வைக்கும் இடத்தை நமது ஆள் காட்டி விரல் கொண்டு மெல்ல அழுத்தி விட வேண்டும். மூளையின் ஆரோக்கிய வளர்ச்சியை அதிகரிக்கும்.
பத்து விரல்களின் நுனியையும் கொஞ்ச நேரம் மெல்ல அழுத்தி விட வேண்டும். சிறு நீர், மலம் போன்ற கழிவுகள் நன்கு வெளியேற உதவும்.
அதைப் போலவே கால்களின் பத்து விரல் நுனிகளையும் பிடித்து விட வேண்டும். காது மடல்களின் ஓரங்களில் மெல்ல பிடித்து விட வேண்டும் . வந்தால் குழந்தையின் ஆரோக்கியம் சிறந்த முறையில் இருக்கும் .
நன்றி மீண்டும் சிந்திப்போம்!!
செய்யும் தொழிலை திருத்தமாக செய்வோமே என கொஞ்சம் விலகி இருந்தேன்.
இதோ ஒரு சின்ன கவிதையோடு மறு விஜயம்.
தாய்க் கூடு தேடி என்னை வெறுமையில் விட்டுச் சென்ற பேரனின் தாக்கம் தான் கவிதையின் கருப் பொருள்.
இனி கவிதை(!?!)
எரிய மறந்த இரவு விளக்கும் ,
ஈரம் உலர்ந்த பக்கத்து படுக்கையும்,
தொட்டில் கயிறும்,
முகம் சுழித்து எழும் உன்
விம்மல் கரைந்த காற்றும்,
விரல்களின் நிமிண்டலில்
கலகலத்து எழும் உன் சிரிப்பொலியும்,
உதடுகளின் முணுமுணுப்பில்
உறைந்த என் தாலாட்டுப் பாட்டும்,
என்னைப் போலவே
ஊமையாகி நின்றன .
என் செல்லமே !!
என் செல்லமே !!
உன் தாய் வீடு செல்ல நீ
தயாரான போது .
சிறு குழந்தைகளின் வளர்ப்பு பற்றி கேட்டு அறிந்த சிறு குறிப்பு உங்கள் உதவிக்கு.
காலையில் ஐந்து நிமிடம் குழந்தையின் இரு புருவங்களுக்கு மத்தியில் நாம் பொட்டு வைக்கும் இடத்தை நமது ஆள் காட்டி விரல் கொண்டு மெல்ல அழுத்தி விட வேண்டும். மூளையின் ஆரோக்கிய வளர்ச்சியை அதிகரிக்கும்.
பத்து விரல்களின் நுனியையும் கொஞ்ச நேரம் மெல்ல அழுத்தி விட வேண்டும். சிறு நீர், மலம் போன்ற கழிவுகள் நன்கு வெளியேற உதவும்.
அதைப் போலவே கால்களின் பத்து விரல் நுனிகளையும் பிடித்து விட வேண்டும். காது மடல்களின் ஓரங்களில் மெல்ல பிடித்து விட வேண்டும் . வந்தால் குழந்தையின் ஆரோக்கியம் சிறந்த முறையில் இருக்கும் .
நன்றி மீண்டும் சிந்திப்போம்!!