Bio Data !!

03 April, 2018

உண்ணா விரதம்.
அப்பொழுது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். டைப் ரைட்டிங் லோயர் முடித்து ஹையர் படித்திருந்தேன். என் கணவர் வீடு எங்க வீட்டுக்கு அருகில் தான். டைப் பரீட்சை வைத்திருந்த வளாகத்தில் தான் என் கணவரின் தந்தை பணி புரிந்து கொண்டிருந்தார். என் வீட்டில் காதல் பிரச்னை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் நான் பரீட்சை முடித்து என் கணவரின் தந்தையை சந்திக்க விரும்பினேன். னஙே அவருடைய வீட்டுக்குப் போய் என் கணவரிடம் பேசி விட்டு வந்தேன். திரும்பி வருவதை தொலைவிலிருந்து பார்த்த எங்க அம்மா அவர்கள் வீட்டுக்குச் சென்று என் கணவரின் தம்பியிடம் நான் ஏன் வந்து போனேன் என விசாரித்திருக்கிறார். அவன் உள்ளதை சொல்லி விட்டான். வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் டமால் டுமீல். நான் வாக்குவாதம் முடிந்ததும் இனி இங்கே சாப்பிட மாட்டேன் என பிரகடனப்படுத்தி என. உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தேன். இரண்டு நாட்கள் "உண்மையான" உண்ணா விரதம். இரண்டாம் நாள் டைப் பரீட்சை. அதைக் காரணம் காட்டி சாப்பிட வைக்கப் பார்த்தனர். நான் ம்ம்ம்கூம். பரீட்சைக்குப் போனால் என் கணவரின் தந்தையை நான் சந்திப்பேன் என நான் சொல்ல அம்மா அப்போ பரீட்சையே வேண்டாமென்றார்கள். அதன்பின் அந்த தேர்வு தொங்கலிலேயே நின்று விட்டது. மூன்றாம் நாள் எங்க தாத்தா, குடும்ப நண்பர் என பெரியவர்கள் வந்து வற்புறுத்தியதால் உண்ணாவிரதம் தோல்வியில் முடிவுக்கு வந்தது. இருந்தும் பின்னொரு நாளில் என்தந்தையின் கணவர் "உன்னை விட என் மகனுக்கு சிறந்த பெண் கிடைக்க மாட்டாள். என்றும் நான் உங்கள் பக்கமிருப்பேன்" என்று சொன்ன படியே திருமணத்தையும. முடித்துக் கொடுத்தார். அதனால் அந்த உண்ணாவிரதம் வெற்றி என்றே கொள்ளலாம்