Bio Data !!

11 June, 2020


 "ஊதா நிற உப்பு பொம்மைகள்" எழுதியவர் கார்த்திகேயன் செங்கமலை. புத்கத்தின் பெயரே கவித்துவமாய் இருக்கிறதல்லவா? 

இதில் இரண்டு கதைகள். ஒன்று " ஊதா நிற உப்பு பொம்மைகள்" மிகச் சிறப்பான கதை. குடும்ப பாரம் உள் நாட்டில் பணி புரிந்து குறைக்க முடியாது என்பதால் வெளி நாட்டில் சென்று பணி புரியும் ஒருவன் காலின் மேல் ஒரு வண்டி ஏறி விடுகிறது. வண்டியின் சொந்தக்காரன் இழப்பீடு மருத்துவ செலவும் கொடுத்தும் அது இவனை வந்து சேரவில்லை. இடைத்தரகரான ஒரு மலையாளி அதை ஸ்வாகா பண்ண நினைக்கும் போது அங்குள்ள ஒருவரின் துணையோடு அதை பெறுகிறான். வெளிநாட்டில் உழைத்தது போதும் எனத் திரும்பி வரும் போது இவனைப் போலவே வேறொருவன் நம்பிக்கையோடு விமானம் ஏறுகிறான். 


இரண்டாவது " பச்சை நிற முத்துக்கள்" குமரப்பன் ஒரு டெல்டா மாவட்ட தென்னை விவசாயி. இரண்டு ஏக்கர் நிலத்தில் 90 தென்னை மரங்களை வைத்து வரும் வருமானத்தில் தன் மகனை பொறியியல் படிக்க வைத்து மென் பொருள் நிறுவனத்தில் வேலையிலும் அமர்த்தி விட்டார்.

கஜா புயலின் தாக்கத்தால் மொத்தமும் பறி போனதில் மனம் உடைந்து மகன் வீட்டில் வந்து இருக்கிறார். செம்பியன் தன் குடும்பத்தோடு இவர் தென்னந் தோப்பில் ஒரு குடிசையில் தங்கி வேலைகளைப் பார்த்து வருகிறான். செம்பியன் மகள் அறிவுக்கரசி. குமரப்பனுக்கு தென்னை அழிந்ததை விட அறிவுக்கரசி மீது தென்னை விழுந்து அவள் தலை நசுங்கி இறந்ததைத் தான் தாங்க முடியவில்லை. 

செம்பியன் தான் சேர்த்து வைத்திருந்த 2இலட்சம் பணத்தை குமரப்பனிடம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சொல்கிறான். 

குமரப்பன் மகன் கதிரவன் தன் கைப்பேசியில் தான் உருவாக்கிய செயலியைத் திறந்து கஜா புயலுக்கு இது வரை வந்த நன்கொடை எவ்வளவு எனப் பார்ப்பதாக கதை முடிகிறது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!