Bio Data !!

03 November, 2020

 கனவுகள் ஆழ் மனத்தின் வெளிப்பாடு. நாம் எதை அதிகமாகச் சிந்திக்கிறோமோ அவை கனவுகளாக வெளிப்படும். எழுத்தாளர்கள் முழு நேரமும் தன் கதைகளை நினைவுகளில் ஊறப்போடுபவர்கள் தானே? இவர்கள் தன் கதைகளின் பாதிப்பால் கனவுகளால் கஷ்டப்பட்டிருப்பார்களா? இந்த சந்தேகம் எழுத்தாளர் இமையத்தின் 'செல்லாப் பணம்' திறனாய்வு ஸூம் கூட்டத்தில் எனக்கு வந்தது. 

"செல்லாப் பணம்" அவலங்களின் உச்சம். அன்று அவரிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன். "கதையை வாசித்த எங்களாலேயே கதையை விட்டு வெளிவர காலம் நிறைய எடுக்கிறதே? உங்களால் வெளியே வர முடிகிறதா? அதுவும் அடுத்த கதை எழுத தொடங்கு முன். " நான் கேட்காத கேள்விக்கு கூட்டத்திலேயே பதில் கிடைத்தது. அவர் திறனாய்வு செய்தவரை கதையின் ஒரு பகுதியை வாசிக்க சொன்னார். வாசிக்க வாசிக்கவே கண் கலங்கினார். அது அம்மா இறந்து போன தன் மகளைப் பார்த்து பேசுவது. புத்ர சோகம்! 

எனக்கு புரிந்தது. அவர்களால் வெளியே வர முடியாது. அவர்களைப் பொறுத்த வரை அவர்களது கதைகள் சக்கர வியூகங்கள். அர்ச்சுனன் மைந்தன் போல் உள்ளே போகத் தெரியும். வெளியேறத் தெரியாது. அப்படியானால் அவர்கள் கனவுகளால் பிரசவ வேதனையல்லவா அடைந்திருப்பார்கள். நானறிந்த சில எழுத்தாளர்களிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என நினைத்தேன்.

ஒரு பெண் எழுத்தாளரிடம் பேசினேன். அவர்கள் ரொமான்ஸ் திரில்லர் போன்ற வகைகளில் எழுதுபவர்கள். அவர்கள் சொன்னது "அனேகமாய் என் கதைகள் கற்பனை சார்ந்தே இருப்பதால் கதை எழுதும் போது அதன் பாதிப்பு இருக்கும். முடிந்ததும் வெளியே வந்து விடுவேன் " என்றார்கள். 

மற்றவர்களிடமும் கேட்க வேண்டும். முக்கியமாக ஜெமோவிடம்.அப்பப்பா! எத்தனையெத்தனை கதைக்களம்!


இது செல்லாத பணம் பற்றி நான் எழுதியது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!