Bio Data !!

18 October, 2022

 சில பெண்களுக்கு ஒரு பழக்கமுண்டு நான் கவனித்திருக்கிறேன். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை வந்தால் எப்போதுமே குற்றத்தை மனைவி பக்கமே சுமத்துவது.

 (உ.ம்)  ஆக ஒரு பெண் ரொம்ப அமைதியா யாரிடமும் அதிகம் பேசாதவளாக இருந்தால் அவள் கணவன் செய்யும் தவறுகளுக்கு காரணம். "பொண்ணுன்னா கலகலப்பா இருக்கணும். இப்படி உம்மணாமூஞ்சி மாதிரி இருந்தா இப்படி தப்பெல்லாம் நடக்கத் தான் செய்யும் " னு சொல்வாங்க. 

இதுவே பெண் கலகலப்பா பேசுறவளா இருந்தா அதை ஒரு குற்றமா சொல்வாங்க. மொத்தத்தில ஆண் செய்யும் தவறுகளுக்கு பெண் மட்டுமே காரணம் எனக் கொண்டு வருவாங்க.இதைச் சொல்வது அனேகமா பெண்கள் தான்.

 ஆண்களும் மனிதர்கள் தானே. தவறு செய்வது இயல்பு தானே!  இதில் ஒரு சைக்காலஜி கவனிக்கணும். அவங்க சொல்ல வர்ரது என்னன்னா "அந்த இடத்தில் நான் இருந்திருந்தா இந்த தப்பு நடந்திருக்காதுன்னு தன்னை உயர்வு படுத்தறதுக்காக பெண்ணை குற்றப்படுத்துறாங்க. 

அதை சம்பந்தப்பட்டவங்களிடமே சொல்றாங்க. இது எது வரை நடக்கும்னா சொல்பவர் வீட்டில் ஒரு பிரச்னை வந்து அது கை மீறிப் போய் தன்னால் சமாளிக்க முடியாமல் போகும் வரை நடக்கும். முதல்ல அடுத்தவர் வீட்டுப் பிரச்னையில் கருத்து சொல்வதை விடணும். அப்படியே சொன்னாலும் அது நேர்மையான கருத்தாய் இருக்கணும். என்ன நாஞ் சொல்றது?

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!