Bio Data !!

20 October, 2022

 டிரெயின்ல தள்ளி விட்டானே அந்த சத்யா பொண்ணோட அம்மா பேசுற ஒரு வீடியோ பார்த்தேன். பரிதாபம். அந்த அம்மாஒரு நோயாளி. ஒரே சமயத்தில் கணவனையும் இழந்து மகளையும் இழந்து பரிதவிக்கிறார்கள். இந்த மீடியா காரங்க ஆளு மாத்தி ஆளு போய் மைக்க நீட்டறாங்க. அந்த அம்மா ஒன்றிரண்டு கேள்விகள் மண்டையில நச்னு அடிச்ச மாதிரி கேட்டாங்க.

1 என் மகள் இறந்து போயிட்டானு ஆளு மாத்தி ஆளு என்னை வந்து கேட்கிறீங்களே அந்த பையன் வீட்டில் இருப்பவர்களிடம் இப்படிப் பண்ணிட்டானே நியாயமான்னு யாராவது போய் கேட்டீங்களா? அந்த குடும்பத்து ஆட்களை வெளி உலகத்துக்கு ஏன் காட்டலைங்கிற அந்த தாயின் கேள்வி நியாயமாத் தான் தெரியுது.

2. என் மகளைப் பற்றி தப்புத் தப்பா போட்டு பார்வையாளர்களை அதிகரிச்சு சம்பாதிக்கிறீங்களே அப்படியாவது கிடைக்கிற அந்த பணம் உங்களுக்கு அவசியமா? 

3. என் பெண் அந்த பையன் தொந்தரவு பண்றதா சொன்னதும் போலீஸ்ல புகார் கொடுத்தேன். அவன் குடும்பத்து ஆட்கள் புகாரை வாபஸ் வாங்கி விடுங்கள் அவனை வெளி நாடு அனுப்பிடுறோம்னு கெஞ்சி கேட்டுக் கொண்டதால்  வாபஸ் வாங்கினேன். வாங்காதிருந்தால் அவன் இந்நேரம் உள்ளே இருந்திருப்பான் என் மகள் உயிரோடு இருந்திருப்பாளே?! அப்போ இரக்கப்பட்டதல்லவா தப்பாக போய் விட்டது. 

இது ஒரு முறையல்ல. சித்ரா இறந்த போதும் இதே தான் நடந்தது. இன்னும் ஒரு பெண் இறந்தாலும் இதே தான் நடக்கும். 

இறந்தவர்களின் குடும்பத்து ஆட்களை நிம்மதியாக துக்கம் அனுஷ்டிக்க விட வேண்டாமா? இறப்பே பெரும் சோகம். அதை மேலும் குத்திக் கிளற வேண்டாமே!

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!