Bio Data !!

16 October, 2023

நாவலின் பெயர் : 23 ஆம் படி ஆசிரியர் : ரா.கி.. ரங்கராஜன் வீ.கே. புக்ஸ் இன்ட்டர்நேஷனல் முதல் பதிப்பு : 2012 விலை ரூ 100/- இந்த கதை மிகவும் விறுவிறுப்பானது. பத்து வருடங்களுக்கு முன் வெளி வந்த நாவல் ஆதலால் பலரும் படித்திருக்கலாம். ஆனால் எனக்கு இப்போது தான் வாசிக்க வாய்த்தது. தொல் பொருள் ஆராய்ச்சி செய்யும் டாக்டர் நாகலெச்சுமி முக்கிய கதா பாத்திரம். சிவ சங்கரன் என்னும் நண்பரின் அறிவுரைப்படி அந்த குழுவில் இணைகிறான் வேணு. புகைப்படக்காரரான கிருபாகரனின் மகள் மோனி மேல் காதல். ஆனால் மோனிக்கு வேணுவுக்குப் பிறகு அறிமுகமான கிஷோர் மேல் காதல். யார் யாருடன் இணைகிறார்கள் என்பது தான் கிளைக் கதை. தொல் பொருள் ஆராய்ச்சி தான் முக்கிய கதை. ஐந்து, ஆறாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த களப்பிரர்கள் பற்றிய ஆராய்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த இடம் மட்டும் ஒரு சோற்றுப் பருக்கையாய்: “ அவனுக்கும் எதுவோ ஒன்று சிலிர்த்தது. நீண்ட நெடும் பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையில் ஒரே ஒரு ரோஜாவாக இந்த மோனி சிரித்தாள். அந்த ரோஜா என்னோடு வராது. அதைத் தாண்டி என் பயணம் இருக்கிறது. பிரிந்து போகு முன் என்னிடமிருக்கும் கடைசிக் குவளை நீரை அந்த ரோஜாவுக்கு ஊற்றி விட்டுப் போகிறேன். நான் போன பின்னரும் அது சிரித்துக் கொண்டே இருக்கட்டும். “ இது தான் உண்மைக் காதல். சேர முடியாத போது தான் காதலித்த பெண்ணின் முகத்தில் ஆஸிட் வீசும் இந்தக் கால காதலுக்கும் அந்த காதலுக்கும் எவ்வளவு வேறுபாடு. கதையின் சுவாரஸ்யத்துக்காக கனவில் வருவது நிஜத்தில் நடப்பது போல் சொல்லி இருந்தாலும் கதையின் வேகம் அபாரம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!