Bio Data !!

05 November, 2023

புத்தகத்தின் பெயர் : அன்புள்ள அம்மாவுக்கு. ஆசிரியர் : லட்சுமி ராஜரத்தினம். இது மூன்று குறுங் கதைகளின் தொகுப்பு. சில நேரம் லைட் ரீடிங் தேவைப்படும். இது அந்த வகையைச் சார்ந்தது. முதல் கதை அன்புள்ள அம்மாவுக்கு. ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தின் பாடுகளைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னு இந்த புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். ஒரு ஏழை அப்பாவுக்கு நான்கு பெண் குழந்தைகள். ஒவ்வொருவர் திருமணமும் ஒவ்வொரு விதமாய். பெற்ற தாய் தந்தையாகவே இருந்தாலும், பணம் தரும் பிள்ளைகளுக்கு இடையே வேறுபாடு காட்ட வைத்து விடுகிறது. அது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. தனக்குத் தருபவர்களை குளிர வைத்துக் கொண்டால் தானே, தருவது தடங்கலின்றி வரும். இது ஏழ்மை நடத்தும் நாடகம். கதையில் ஆரம்பத்திலிருந்தே பிறருக்காகவே வாழும் ப்ரீதா. சுய நலம் மிகுந்த குழந்தைகளை துணிச்சலாய் ஒதுக்கும் போதும் வாழ்க்கை அதே பிறர் நலம் தொடரவே வழி காட்டுகிறது. எனக்கு பிடித்த வரிகள்: "மரணம் எப்பொழுது, எப்படி, எங்கே நிகழ்கிறது என்பது யாருக்காவது தெரியுமா? மனித உடல் காற்றடித்த பலூனா? அப்படியானால் யார் அதை இப்படி ரகசியமாக பிடுங்கி காற்றை வெளியே அனுப்புகிறார்கள்" இரண்டாவது கதை : நெஞ்சம் எங்கே. இது இரண்டாவது கதை. மலையின் மேல் பணி புரியும் சுந்தரின் மனைவி பாலா, தன் முதல் குழந்தை ரவியை தன் பெற்றவர்களிடம் விட்டு விட்டு, குழந்தை சத்யாவுடன் , சுந்தருடன் வாழ வந்த இடத்தில் , சத்யாவைத் தொலைத்து விடுகிறாள். அதன் பின் சுந்தர் தன் வேலையை உதறி ஊருக்கே வந்து விடுகிறான். ரவி நல்ல உயரமான , அழகான ஆண் பிள்ளையாக வளர அவனைப் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். அவன் மேரியைக் காதலிக்க, சித்ராவை அவன் அப்பா மருமகளாக்க முடிவு செய்ய , காவல் அதிகாரி பணி கிடைத்த சோனாவும் ரவியை விரும்புகிறாள். ஒவ்வொருவருக்கும் ஒரு வழி பிறந்து ரவி யாரைத் திருமணம் செய்கிறான. என்பது தான் கதை. மூன்றாவது கதை : உனக்காக மட்டும். அது மட்டும் உங்களுக்காகவே. முதல் இரண்டு கதைகளும் நம் வாசிக்கும் ஆசையை தூண்டி இருக்கும். மூன்றாவது நீங்களே வாசித்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!