Bio Data !!

09 October, 2023

நாவலின் பெயர் : சிவப்பு அங்கி ஆசிரியர் : கோட்டயம் புஷ்பநாத் தமிழில் : சிவன் கலா நிலையம் பதிப்பகம். விலை : ரூ 210/- முதல் பதிப்பு : 1999 சிவப்பு அங்கி அணிந்து வரும் லூசிபர் பேயின் அட்டகாசங்கள் தான் கதை. இரட்டை பிள்ளைகளான பிரான்ஸிஸ் , பர்னாண்டஸ் இருவரில் பிரான்சிஸ் ஒரு பாதிரியார். பர்னாண்டஸ் ஒரு பெண் பித்தன். லூசிபர் பற்றிய புத்ட்தகம் முதலில் பிரான்சிஸ் கையில் கிடைத்தாலும் பர்னாண்டசுக்கே வாசிக்க வாய்க்கிறது. அதை வாசித்ததிலிருநநது உள்ளுக்குள்ளிருந்து ஒரு சாத்தான் வழிகாட்ட பர்னாண்டஸ் அதன் படி நடக்கிறான். நய வஞ்சகமாக தன் சகோதரன் பிராஅன்சிஸைக் கொன்று தான் பாதர் பிரான்சிஸாக நடிக்கத் தொடங்கி விடுகிறான். இந்த கதை வாசிக்கும் நாட்களில் OTTயில் மாவீரன் படம் பார்த்தேன்ன். அதிலும் கதா நாயகன் சத்யாவுக்கு ஒரு குரல் கேட்கும். இரண்டும் குரல்கள் தான். ஒன்று பிசாசின் குரல். மற்றொன்று சத்யாவை மாவீரனாக்க உதவும் குரல். ஏற்கனவே பெண்களின் விஷயத்தில் பலவீனனான பர்னாண்டஸை தன் திட்டத்துக்குப் பயன்படுத்துவது லூசிபருக்கு சுலபமான ஒன்றாக இருக்கிறது. பெண்ணை வசியம் செய்யும் திறமையைக் கொடுக்கிறது. ஆனால் பதிமூன்றாம் நாள் அநநத பெண்ணை தான் அனுபவித்து ரத்தம் குடித்துக் கொன்று விடுகிறது. ஆனால் இறப்பு இயல்பானதாக பிறருக்குத் தோன்றுகிறது. இப்படியே ஒவ்வொரு பெண்ணாக வசியம் செய்வது தான் கதை. கதா நாயகன் ஒரு பாதராக வருவதால் கதை சர்ச், கல்லறை, சிலுவை என கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களையே சுற்றி வருகிறது. ஒவ்வொரு நிகழ்வும் நம்மில் திகில் வளர்த்து விறுவிறுப்பாக செல்லும் நாவல். சர்ச் விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வின்செந்த் பாதரும் அவருக்கு உறு துணையாக வரும் ரவீநநதிரனும் தான் பைசாச வேலைகளுக்கு எதிராகப் போராடும் சக்திகள். இறுதியில் லூசிபர் பேய் வெற்றி கொண்டதா? தோற்றுப் போய் ஓடியதா?பர்னாண்டஸ் தான் பிரான்சிஸ் பாதரோட உருவத்தில் நடமாடிக் கொண்டிருந்தான் என்பதைக் கண்டு பிடித்தார்களா? அப்படி என்றால் பர்னாண்டசுக்கு தக்க தண்டனை கிடைத்ததா? அறிந்து கொள்ள "சிவப்பு அங்கி" நாவலைத் தேடி படியுங்கள்.
Disclaimer : நான் எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் கிடையாது. ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதில் நான் ரசிக்கும் விஷயங்களை என் நண்பர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வேன். வேறு எந்த சட்ட திட்டங்களுக்க்கும் கட்டுப்பட்டு நான் எழுதுவதில்லை. பதிவு எழுதும் போது என்னைப் போலவே வாசிப்பில் ஈர்ப்பு இருப்பவர்களை அது காந்தம் போல் இழுத்து வந்து என்னிடம் சேர்த்து விடும். அ்து பெரும் நிறைவு.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!