Bio Data !!

28 September, 2023

நாவலின் பெயர் : வடலிவிளை செம்புலிங்கம் ஆசிரியர் : கலைமாமணி தாமரை செந்தூர் பாண்டி சிவகாமி புத்தகாலயம் விலை ரூ 320/- கதை நாயகன் செம்புலிங்கம் பண்டார நாடாரின் இரண்டாவது மனைவியின் மகன். அவள் பேச முடியாதவள். மூத்த மனைவிக்கு குழந்தை இல்லாததால் செம்புலிங்கத்தை தன் மகன் போலவே வளர்க்கிறாள். இருவத்தோரடி ஆழமுள்ள கிணற்றை சவாலை ஏற்று அவன் தாண்டுவதை வாசிக்கும் போது நமக்கே அவனை பார்க்கணும் போலிருக்குது. " வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் பார்க்காதவர்கள் அந்தப் பாய்ச்சலைப் பார்த்து புரிந்திருப்பார்கள். நடுக் கிணற்றில் சட்டெனக் கிணற்றுக் குருவி ஒன்று உள்ளிருநநது மேலே பறந்ததைக் கண்ணுற்ற செம்புலிங்கம் அதையும் கையில் பிடித்த படியே பாய்ந்து கிணற்றைக் கடந்து ஒன்றரையடி தூரத்தில் வெளியே குதித்து நின்றான்." என்கிறார் ஆசிரியர். ஒரு திருட்டில் செம்புலிங்கத்தின் பெயர் சேர்க்கப்பட்டு இருப்பதாகக் கேள்விப்பட்டு மலை மீதுள்ள காட்டில் மறைந்திருக்கிறான். பன்ணையார், தன் மீது மிகுந்த அன்பு கொண்ட சுந்தரி என்ற பெண்ணிடம் அத்து மீறியதைக் கண்டித்திருக்கிறோமே என்பதை மறந்து அவரிடம் உதவிக்கு செல்வதை பயன்படுத்தி பண்ணையார் பழி வாங்கி விடுகிறார். அதன் பின் அவர் வற்புறுத்தலின் பேரில் போலீஸ் அவன் பெயரை இணைக்கிறது. சில நேரங்களில் பிரச்னையை தீர்க்க நாம் எடுக்கும் முயற்ச்சியே பிரச்னையை பெரிதாக்கி விடும் என்பதை நமக்கு உணர்த்தும் இடம். சந்தர்ப்ப சூழலால் திருடனாகி விட்டாலும் பெண்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தான். அவர்களை உடன் பிறந்தவர்களைப் போலவே நடத்துவான். கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் சில சமயங்களில் நடந்து கொள்வான். ஒரு இடத்தில் மோர் விற்ற இரு பெண்கள் கொஞ்சம் தெனாவெட்டாக பேசியததம் ஆவர்கல் காதுகளில் உள்ள பாம்படத்தைக் கழற்றி அவற்றில் ஒன்றால் அவர்களின் ஆளுக்கொரு காதினை இணைத்து பூட்டி ஊருக்குள் போகும்வரை பேசக் கூடாது என அனுப்பி விடுவான். ஒரு முறை வந்த வண்டிகளை கொள்ளை அடிக்க நிறுத்திய போது அவை ஒரு அனாதை இல்லத்துக்கு செல்வதாக அறிந்ததும் கொள்ளை அடிக்காதது மட்டுமல்ல உடன் போய் பத்திரமாக சேர்க்கிறான். வழியில் " நான் தான் செம்புலிங்கம்" என்று கூறிக்கொண்டு பொய்யாக வந்து கொள்ளை அடிக்க முயலும் சிலரிடமிருந்தும் காக்கிறார். ஒரு இரவில் செம்புலிங்கம் பசி மிகுந்து களக்காடு "சி" னா "த" னா என்பவர் தோட்டத்தில் இளநி வெட்டி குடித்து விட்டு படுத்திருக்கும் போது அவர் வந்து அன்பாய் பேசீ வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே பதினேழு வயதிலேயே கணவனை இழந்த அவர் தங்கை பார்வதியின் கண் வலைக்குள் மாட்டிக் கொள்கிறார் செம்புலிங்கம். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் உடல் வலைக்குள்ளும். செம்புலிங்கம் " ஜாதி என்னல ஜாதி" என்று மிராசுதார் ஒருவரிடம் கேட்பதாக ஒரு நிகழ்வு வருகிறது. சுதந்திரத்துக்கு முந்திய கால கட்டத்தை சேர்நநத செம்புலிங்கம் அன்்று கேட்ட கேள்விக்கு இன்று வரை விடை கிடைத்த பாடில்லை. இன்றும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம் " ஜாதி என்னல ஜாதி?" காருண்யா அம்மையார் ஒருவர் செம்புலிங்கத்தை அன்பு செலுத்தி திருத்த முயல்கிறார். அவருடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். காவல் அதிகாரியிடம் அவன் சரணடைந்தால் குறைந்த தண்டனையுடன் விடுவிக்க வேண்டும் என்று வாதாடுகிறார். கதையில் வரும் செம்புலிங்கம் ஒரு ஹிந்து. காசி ஒரு கிறிஸ்தவன். துரைவாப்பா ஒரு முஸ்லிம். பெயருக்கு பின் ஜாதியை நிலை நாட்டியே பழகிய அந்தக் காலத்திலேயே ஜாதி மத வேறுபாட்டை துறந்து எறிந்தவர்கள். அந்த காலத்தில் செம்புலிங்கத்தை " தென்னகத்து ரா்பின் கூட்" என்று அழைத்திருக்கிறார்கள். இந்த நூலுக்கு 1997 ஆம் ஆண்டுக்கான தினத்தந்தியின் உயரிய விருதான அமரர் சி.பா.ஆதித்தனார் விருது கிடைத்திருக்கிறது. ஒரு வித்தியாசமான மனிதரைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தைப் படிக்கலாம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!