Bio Data !!

19 January, 2026

திரைப்படம் : அங்கம்மாள். OTT : அமேசான் ப்ரைம். கதை : பெருமாள் முருகனின் “கோடித்துணி” சிறுகதை. அறிமுக இயக்குநர் : விபின் ராதாகிருஷ்ணன் முக்கிய நடிகர்கள் : கீதா கைலாசம் (அங்கம்மாள்) சரண் சக்தி,, பரணி. (அங்கம்மாளின் மகன்கள்) தென்றல் ரகுநாதன் அங்கம்மாளின் மூத்த மருமகள். முல்லையரசி ( மருத்துவர் மகன் காதலிக்கும் ஜாஸ்மின்) மேல் சட்டை போடாத ஆச்சி அல்லது அப்பத்தா அங்கம்மாள். ஒரு fusion ஆக பேத்தியை வைத்து Champ வண்டியோட்டிக் கொண்டே பழங் கதை பேசிப் போகிறார்கள். ஆரம்பமே இந்த படம் நமக்கு நிச்சயமாக பிடிக்கும் என்ற உறுதி அளித்தது. ஒரு சிலேட்டில் அங்கம்மாள் உச்சாணிப் பூவை வரைந்து பார்க்கும் போது , மனதிலேயே ஓராயிரம் கோலங்களோடு வசித்த என் அல்லி அக்காவிடமிருந்து ஒவ்வொரு கோலமாக ஸ்லேட்டில் போட வைத்து , நான் நோட்டுக்கு கொண்டு வந்த கோலங்களின் காட்சி ஞாபகம் வந்தது. அது என்ன உச்சாணிப்பூ. மலை மேல் பல வருடங்களுக்கு ஒரு முறை பூத்து கிராமம் எங்கும் வாசம் பரப்பும் பூ. அங்கம்மாளும் அத்தகைய ஒரு பூ தான். மற்ற பெண்களைப் போல் உண்டு, உறங்கி செத்து மடியும் சாதாரண வாழ்க்கையல்ல அவளுடையது. அங்கம்மாள் மகன் மருத்துவர் பவளம் தான் காதலிக்கும் பெண்ணிடம் ஒரு புகைப்படம் கேட்க “நான் போட்டோவில நல்லா இருக்க மாட்டேன் “ எனச் சொல்ல “நேரில மட்டும்” என்னும் அவனிடம் “சொல்லு, நேரில மட்டும் , என்ன நேர்ல மட்டும்“ என அவள் கேட்க “சொல்றேன். இரு படம் முடியட்டும் என அவளை இழுத்து தன் கன்னத்தில் கிஸ் அடிக்க வைக்கும் காட்சி செம ரொமான்ஸ். பவளத்தின் அப்பாவி அண்ணனாக பரணி நடிக்கிறார். பவளம் தான் காதலிக்கும் பணக்கார வீட்டின் குடும்பத்தினர் வருவார்களாதலால் அம்மா சேலைக்கு சட்டை போட்டு பழக வேண்டும் என்று வற்புறுத்த “என் மகனுக்காக சட்டை என்ன வேட்டி கட்டச் சொன்னாலும் கட்டுவேன்” என்று வெள்ளைத் துணியில் ப்ளவுஸ் தைத்து போட்டுக் கொள்கிறார். ஆனால் அதை ஓரிரு நாட்களிலேயே கழற்றியும் விடுகிறார் படத்தின் சில காட்சிகளில் அன்பும் காதலும் கலந்த கலவையோடு அங்கம்மாள் பார்க்கும் ஒரு முதியவர்( சிறு வயது நண்பராக இருக்கலாம் என்பது என் கணிப்பு. )முன் அந்த ப்ளவுஸும் வெட்கமுமாக நிற்பது போல் ஒரு காட்சி வைத்திருந்தால் இன்னும் எவ்வளவு அழகாக இருந்திருக்கும். பிடிவாதமான, கோபக்கார அங்கம்மா கதாபாத்திரத்துக்கு அவர்கள் போட்டிருக்கும் கருப்பு உதட்டுச் சாயம் அழுத்தமான உதடுகளைக் கொடுத்து , இன்னும் வலிமை சேர்க்கிறது. ஒரு மகனை வயக்காட்டில் வேலைக்கு அனுப்பி அடுத்த மகனை மருத்துவராக்குவது அந்தக் குடும்பத்துக்குள் எவ்வளவு பெரிய ஏற்றத் தாழ்வை உண்டாக்கும் என்பது சிந்திக்க வேண்டிய பிரச்னை. பரணி தாழ்வு மனப்பான்மையை உள் அழுத்தி தன் சோகத்தை நாதஸ்வரம் வாசிக்க கற்றுக் கொள்வதில் சமப்படுத்தும் , கொஞ்சம் கொஞ்சமாக சிறப்பாகவே வாசிக்கும் அண்ணன் கதாபாத்திரத்தில் ஜொலிக்கிறார். திரை உலகம் இவரை இன்னும் அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவரின் காதலி குடும்பம் இவர்கள் வீட்டுக்கு வரும் போது அங்கம்மாள் மகன் விருப்பப்படி மேல் சட்டை அணிந்து இருந்தாலும் , வந்த இளம்பெண் கையில்லாத , தோள்களை முழுவதுமாக தெரியும்படி அணிந்திருந்த ஆடை நவ நாகரீகம் என்று ஏற்றுக் கொள்ளும் சமூகத்தைச் சுட்டிக் காட்டி ஒருவர் அணியும் ஆடை அவரவர் விருப்பத்தைப் பொருத்தது. அடுத்தவர் அதைக் கட்டுப் படுத்துவது அவசியமற்றது என்ற கருத்தை வலியுறுத்து இருக்கலாம். செய்யவில்லை. கிராமத்துக்குப் பொருத்தமில்லாத நல்ல நிறமுடைய பையனுக்கு காதலியை மாநிறத்துக்கும் குறைவான நிறமுடைய ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநருக்கு சிறப்பு பாராட்டுகள். படம் முடிவடைந்தாலும் , என் மனம் இத்தகைய போராட்டக் குடும்பத்துக்கு சம்பந்தமே இல்லாத ஒரு இடத்தில் இருந்து மருமகளாக வந்து சந்திக்கப் போகும் பிரச்னைகளை வைத்து அங்கம்மாள் 2 எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது.

05 January, 2026

திருப்பலியில முக்கியமான இடம் எழுந்தேற்றம் என்பது. அப்போது இயேசு சிலுவையில் தன் உடலையும் இரத்தத்தையும் நமக்காகக் கொடுத்து மரணித்த நேரம் நினைவுபடுத்தப்படும். இது சார்ந்த என் எண்ணங்கள். இந்த எழுந்தேற்ற நேரத்தில் எல்லோரும் ரொம்ப பய பக்தியோடு பிரார்த்திப்பார்கள். நான் நெற்றி நிலம் தொட வணங்குவேன். அந்த நேரத்தில் என் நிரந்தரப் பிரார்த்தனை என் இரு மகள்களின் முதுகுத் தண்டுவடம் பலப்பட வேண்டும் என்பதாக இருக்கும். அதன் உடன் அப்போதுள்ள தேவைகளும் இணைந்து கொள்ளும். ஒரு வயதான மூதாட்டி அப்போது மிகுந்த சத்தத்தோடு பிரார்த்திப்பார்கள். மற்றவர்களுக்கு இடைஞ்சலாகத் தான் இருக்கும். நான் வந்த புதிதில் அவர்களிடம் சொன்னேன். "அடுத்தவங்களுக்கு தொந்தரவில்லாமல் செபிக்க வேண்டாமா" என. அப்போ என் தோழி சொன்னார்கள் " எத்தனையோ பேர் சொல்லி பார்த்தாச்சு. நீங்க சொல்லியா மாத்தப் போறாங்க" என்று. இன்று வரை மாறவில்லை. ஆரம்ப காலங்களில் நன்மையை நாவில் தான் வழங்குவார்கள். குருக்கள் மட்டுமே வழங்குவார்கள். இப்போது கன்னியரும் கொடுக்கிறார்கள். கொரோனா காலத்தில் நாவில் கொடுப்பது தடை செய்யப்பட்டது. இடது கையில் வாங்கி வலது கையில் எடுத்து நாமே உட் கொள்ள வேண்டும் எனக் கொண்டு வந்தார்கள். எனக்கு இடது கையில் வாங்குவது பிடிக்காது அதனால் வலது கையில் வாங்கி அப்படியே வாயில் இட்டுக் கொள்வேன். இப்போ கொரோனா காலம் முடிந்த பிறகு வாயில் கொடுக்கிறார்கள். இதில் குருக்களுக்கு என்ன சங்கடம் என்றால் ஒருவருக்கு வாயில் கொடுக்க வேண்டும் . அடுத்து வருபவர் கையை நீட்டுவர். அதற்கடுத்து வருபவர்களுக்கு கையில் கொடுக்க வேண்டும் என்று எண்ணும் போது திடீரென்று அவருக்கு நின்று வாங்குவது மரியாதைக் குறைவாகத் தெரியும் முழங்கால் போட்டு வாங்குவார். ரொம்ப பாவம் அவங்க. ஒவ்வொருத்தருக்கும் கிண்ணத்தில் எடுத்து கொடுத்தே கை விழுந்து போகும். இதில் இத்தனை வேறுபாடுகள். அதுவும் திருவிழா நாட்களில் மிகுந்த கூட்டம் இருக்கும். அசந்து போய் விடுவார்கள். அதனால் கன்னியாஸ்திரிகளும் கொடுக்கலாம் என்று வந்தது நல்லது தான். ஆனால் சொல்லி வைத்தது போல் அத்தனை பேருமே முக்காட்டை கழுத்தில் தான் போடுகிறார்கள். கிறிஸ்தவ முறைப்படி ஆலயத்தினுள் பெண்கள் தலை முடிய தெரிய இருக்கக் கூடாது. அப்படி இருக்க நன்மை வழங்குபவர்கள் இப்படி வருவது உறுத்தலாக இருக்கிறது. ஒரு சின்ன ஆலோசனை. யாராவது உரியவர்கள் பார்வைக்கு சென்று சேருதா பார்ப்போம். நன்மை கொடுக்கும் போது புடவையை சரி செய்து கொண்டிருப்பது கடினம். ஒரு நெட் தலையில் போட்டு முடிச்சிட்டுக் கொள்ளலாமே. உறுத்தாத மாற்றங்கள் வரவேற்கத் தக்கதே.!!
மாவட்டத் தலைவர் தமுஎச, திரு சேதுராம கிருஷ்ணன் அவர்கள் தலைமை தாங்க , தேவர்பிரான் வரவேற்புரை தொகுத்து வழங்கியவர் சத்யா. நிகழ்வு இளம்பிறை எழுதிய "யாழினியின் புத்தன்" புத்தக வெளியீடு. புத்தகத்தை " தமிழ்ச் சுடர் "தீன் வெளியிட குழந்தைகள், குழலி, காயத்ரி , தன்யா பெற்றுக் கொண்டார்கள். இன்னும் பேசிய மற்றவர்கள் விவரம் அறிய இணைத்துள்ள அறிவிப்பைப் பாருங்கள். "யாழினியின் புத்தன். புத்தன் ஒருவருக்கு உலகம் போற்றும் ஞானியாய்த் தெரிவான். ஒருவருக்கு தன் பெண்டாட்டி பிள்ளைகளைத் தவிக்க விட்டுச் சென்ற பொறுப்பற்றவனாய்த் தெரிவான். ஒருவருக்கு ஆசைகளைத் துறக்க முடிந்த வல்லவனாய்த் தெரிவான். இந்த புத்தகம் யாழினியின் புத்தன் எத்தகையவன் என்பதைச் சொல்லும் என்று நினைத்துத் தொடங்கினேன். ஆசிரியர் இளம்பிறையின் தமிழ் வளம் நான் அவர்களோடு பேசும் போதே நன்கு அறிந்தது. அதே போல் அவர்கள் பேத்தி குழலிக்கு தன்னிடம் பேசுபவர் யாராய் இருந்தாலும் ஈர்க்கும் சக்தி உண்டு. அதுவும் நான் அறிவேன். இளம்பிறை பெரும்பான்மை பெண் சமூகம் நினைப்பதை மாற்றி யோசிப்பவர். சின்ன சின்ன நிகழ்வுகள் கதைகளாக கொடுத்திருக்கிறார்கள். அதுவும் நீதி சார்ந்த கதைகள். கார்த்திகா வரைந்திருக்கும் படங்களும் குழந்தைகளை ஈர்ப்பனவாக உள்ளன. எழுதப்பட்ட பகுதிகளுக்கு பொறுத்தமான தலைப்புகள். காலக் குழந்தைகள் பாட்டி கதைகள் கேட்டு நல்வழிப்பட வாய்ப்பு குறைவு. அதனால் இத்தகைய புத்தகங்களின் அவசியம் ஏற்படுகிறது. இதில் தன் அப்பனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த சரவணன் போல குழந்தைகள் பெரியவர்களுக்கு நல்ல பாடங்களைச் சொல்லிக் கொடுக்கின்றன. அது இன்னும் அவர்களை ஈர்க்கும். ஒவ்வொரு பக்கத்திலும் இறுதியில் கொடுக்கப்பட்ட நீதிக் கருத்துகள் எல்லா பக்கங்களிலும் கொடுத்திருக்கலாம். புத்தகத்தின் அளவு குழந்தைகள் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக உள்ளது. திரு நெல்லைக் கண்ணன் அவர்களின் " மீதமொரு முலை எறி" இருக்கும் வடிவில் இருக்கிறது. அது சரி யாழினியின் புத்தன் யாரு. அவரவர் கற்பனைக்கு தோன்றுபவர் அவரவர் புத்தன். நல்லா இருக்குதுல்ல.அதே போலத் தான் இயேசுவும். இயேசு மாதா போன்றவர்களை வெளிநாட்டு வெள்ளைக் காரர்கள் போலவே ஏன் காட்டணும்னு சில இடங்களில் கருப்பு நிறத்திலும் சிற்பங்கள் செய்து வைக்கிறார்கள். குழந்தைகளுக்கான எழுத்தை அதிகப்படுத்துவோம். இன்னும் கொஞ்ச நாளில் அவர்களே அவர்களுக்காக அதிகம் எழுதத் தொடங்குவார்கள். இப்பவே தொடங்கி விட்டார்கள்.

29 December, 2025

Gen Z குழந்தைகளின் பாய்ச்சல்

எங்க அப்பாவின் மாணவர் திரு பாப்பையா அவர்கள் ஒருவரைத் தான் அறிந்திருந்தேன் ஆதலால் அவரை மட்டும் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தேன். மற்றும் ஒரு மாணவர் " மேலும்" சிவசு ஐயா. இவரும் தூய சவேரியார் கல்லூரியில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியர். இந்த நிகழ்ச்சி பற்றி பாப்பையா சார் மூலம் அறிந்ததும் என்னை அழைத்துப் பேசினார். "அவ்வளவு அழகா உடை உடுத்தி வருவாரும்மா உங்க அப்பா ( என் உடை நேர்த்தியின் நதித் தலையணை அது தான் போல) " என்று சொன்னதோடு எங்க தாத்தா கணிதப் பேராசிரியர் சந்தியாகு அவர்களையும் நினைவு கூர்ந்தார். "வெள்ளை வேட்டி , ஜிப்பா, கழுத்தில் ஒரு சின்ன துண்டு, வகுப்புக்கு வெளியே காலணியைக் கழற்றி விட்டு வரும் அழகு" என அவரைப் பற்றியும் சொல்லி விட்டு தன் பேரன் எழுதிய ஆங்கில கவிதைத் தொகுப்பு வெளியீட்டுக்கு என்னை அழைத்தார். அங்கே போன பின் தான் தெரிந்தது அவர் பேரன் அனிருத்தின் அம்மாவைப் பெற்ற அம்மாவும் ஆதி மூலமும் நானும் தொலைத் தொடர்புத் துறையில் ஒன்றாகப் பணி புரிந்திருக்கிறோம். சிறப்பான நிகழ்வும் , ருசியான இரவு உணவும் மனதையும் வயிற்றையும் நிறைக்கத் திரும்பினேன். முதலில் இந்த GenZ குழந்தைகளின் பாய்ச்சல். மேடையில் மூன்று குழந்தைகள். செல்வன் அனிருத், செல்வி பார்கவி ரமேஷ், செல்வன் விஷ்ணு வெங்கடேஷ். அனிருத் எழுதிய புத்தகத்தின் பெயர் "The Shimmering joy of writing" ஈர்க்கும் பெயரும் , அழகான மேலட்டையும், கனக்கும் கவிதைகளுமாக அந்த புத்தகம் இருந்தது என்றால், நளினமான ஆடலோடு கூட அனிருத்தின் ஒரு கவிதையை அழகான ஆங்கிலத்தில் வாசித்தாள் பார்கவி. செல்வன் விஷ்ணு மற்றுமொரு கவிதையை மனதில் உருவேற்றி அழுத்தமான குரலில் பாராமலே சொன்னான். நமக்குத் தேவையான சில கருத்துகளும் சொல்லக் கிடைத்தன. தொடர்கிறேன்.

19 December, 2025

காந்தா. டிஸ்னி ஹாட் ஸ்டாரில்

Disney Hotstar படத்தின் பெயர் காந்தா இயக்குநர் : செல்வமணி செல்வராஜ் முக்கிய கதாபாத்திரங்கள்: துல்கர் சல்மான், சமுத்திரகனி, ராணா டகுபதி, பாக்யஸ்ரீ தயாரிப்பாளர்கள் : ராணா டகுபதி, துல்கர் சல்மான் ( அட!!) மற்றும் இருவர். தமிழ் திரைப்பட உலகத்தின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவதரின் கதையின் லேசான சாயல் தெரிகிறது. தன் சூப்பர் ஸ்டார் பதவியை தன் கோபத்தால் இழந்து மிகவும் பரிதாப நிலைக்குச் சென்று மரித்தவர் தியாக ராஜ பாகவதர். உடையில், பேச்சில் சுற்றுச் சூழலில் அந்த காலத்தை மிக அழகாக்க் கொண்டு வந்திருக்கிறார்கள். துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ இருவர் முகமும் கதா பாத்திரத்துக்கு மிகவும் பொருந்திப் போகின்றது. நடிப்பில் சமுத்திரக்கனி, ராணா, பாக்யஸ்ரீ மூவருக்குமே சபாஷ் சரியான போட்டி. எப்போதுமே ஒருவர் உயிரை எடுக்குமளவு கோபம் இரண்டு ஆண்களுக்கு இடையில் வருவது பெண் சம்பந்தமாக அல்லது நிலம் சார்ந்ததாக இருக்கும். இங்கே பெண் சார்ந்து வருகிறது. ஆனால் பலியாவது ஓருயிரா?? இல்லை. இல்லை. துல்கரின் மாமனாராக வழும் நிழல்கள் ரவி ஒரு சாயலில் நாசர் போல, ஒரு சாயலில் சங்கிலி முருகன் போல ஒரு சாயலில் நிழல்கள் ரவி போல மாறி மாறித் தெரிகிறார்.் சமுத்திரக்கனி திரைப்பட இயக்குநர் . தன் அம்மாவின் கதையாக சாந்தா என்னும் படத்தை எடுக்க அந்த பெயரை சாந்தா என மாற்ற வேண்டும் என்பதில் தொடங்குகிறது இயக்குநர் கதாநாயகன் இருவருக்கும் இடையேயான ஈகோ. கதாநாயகிக்கு தன் மனைவி அந்தஸ்தை கொடுக்க துல்கரும் , தன்னை வளர்த்து முதல் படம் கொடுத்த சமுத்திரக் கனியின் விருப்பத்தை மீறி துல்கரை மணம்முடிக்கத் துணிந்த பாக்யஸ்ரீ யையும் நடந்து விடுகிறது அந்த அசம்பாவிதம். படம் ரொம்ப நல்லா எடுத்திருக்கிறாங்க. பாருங்க.