Bio Data !!

09 March, 2026

மகளிர் தினம் 2026

பாளை சரோஜ் நினைவகத்தில் 7.3.2026 அன்று தமுஎச வி.எம் சத்திரம் கிளை முன்னெடுத்து நடத்திய மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. போன உடன் நான் கண்டது மொத்தமாக பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடையுடன் வட்டமாக அமர்ந்திருந்த காட்சி. நம்ம ஊர்ல இத்தனை பெண் ஆட்டோ ஓட்டுனர்களா? ஆச்சர்யப்பட்ட நான் உடனே போய் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டேன். பேரா. முத்துலட்சுமி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனரான நெல்லையைச் சேர்ந்த காந்திமதி இருக்காங்களான்னு கேட்டு, திருச்சி பெண் ஆட்டோ ஓட்டுனர் பற்றிய என் பதிவு 1,70,000 வியூஸ் போனதைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்கள் வரவில்லை. ஆனால் பெண் ஆட்டோ ஓட்டுனர்களை ஓரணியாக்கி பொறுப்பேற்று செயல் பட்டுக் கொண்டிருக்கும் தோழர் ஜெயஸ்ரீ அவர்கள் தான் அவரிடம் நான் விசாரித்ததை சொல்வதாகக் கூறினார்கள். அவர்களை மகளிர் தினத்தன்று மரியாதை செய்வதற்காக அழைத்திருந்தார்கள். துணிச்சலாக பெண்கள் எல்லா துறைகளிலும் இறங்குவதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. பதிவு எழுதும் போது ஒரு விஷயத்தை வலியுறுத்தச் சொன்னார்கள். "நெல்லை புது பஸ் நிலையத்தில் பெண்களுக்கான தனி ஆட்டோ ஸ்டான்ட் கேட்டு ஆட்சியாளரிடம் மனு கொடித்திருக்கிறார்களாம். அதை செஞ்சு கொடுக்கச் சொல்லி வலியுறுத்தி எழுதுங்கம்மா" என்றார்கள். சாராள் டக்கர் கல்லூரி அருகில் உள்ள நிலையத்தில் ஐந்து பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் காத்து இருக்கிறார்களாம். சிறப்புல்ல !!!! பெண்கள் கல்லூரி அருகில் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் இருப்பது வெகு சிறப்பு. உரியவர்களின் கவனத்துக்கு இது எப்படியும் போய் விடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு் . செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையோடு வேண்டுகோள் வைப்போம். செய்து கொடுங்கள் ஐயா. வணங்குகிறோம். நிகழ்ச்சி பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன். காத்திருங்கள்

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!