Bio Data !!

13 September, 2020

#எண்ணச் சிதறல்கள்

 ஒரு பெண் நெல்லையில் வீட்டுக்கே வந்து பார்லர் வேலை எல்லாம் செஞ்சு விடுவா. Mobile parlour. எப்ப நாம ஃப்ரீயோ அப்போ கூப்பிட்டா வந்திடுவா. ஒரு அறையை வாடகைக்கு எடுத்து பார்லர் நடத்துவதில் உள்ள பல சிக்கல்களை சொல்லி எனக்கு இது சௌகர்யமா இருக்கும்மா என்பாள். நமக்கும் சௌகர்யம். புறப்பட்டு செல்ல வேண்டாம்.


ஒரு முறை இப்படி அவள் வீட்டுக்கு வந்த போது அவளிடம் கொஞ்சம் பேச முடிந்தது.  

" தொழில் எப்படி இருக்குமா?"

பரவயில்ல மேம். ஆனா ஒரு சிலர் தான் ரொம்ப மோசமாக இருக்காங்க"

ஆம் நானும் நீங்க நினைச்ச மாதிரி தான் நினைச்சேன். 

ஆனால் பிரச்னை அதுவல்ல. திருமண அலங்காரத்துக்கு நான் போனால் உடனே பணம் வாங்க முடியாது. கவரிங் நகைகளை திருப்பிக் கொடுக்கும் போது பணம் தருகிறேன் என்பார்கள். பணமும் வராது. நகையும் வராது. எத்தனை போன் பண்ணினாலும் எடுக்க மாட்டார்கள். 


நகை இவர்கள் திருப்பிக் கொடுத்து விடுவார்கள் என்று நம்பி வேறு ஒருவருக்கு தருவதாக உத்தரவாதம் கொடுத்திருப்பேன். ரொம்ப கஷ்டமாயிடும். 


ஒருவர் பணமும் கொடுக்காமல் இந்த பெண் கேட்கும் போது " பாடி மசாஜ் பண்ணி விடுவீங்களா? " என்று கேட்டிருக்கிறார். இந்த பெண் தைரியமாக " என் கணவர் பண்ணுவார். அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறாள். 


இது பார்லர் நடத்தும் எல்லாருக்கும் நடப்பது தானே என்கிறீர்களா? நான் ஸ்பெஷலா எழுதறேன்னா பொண்ணு ஸ்பெஷலா இல்லாம இருக்குமா? இவள் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு இலவசமாக அலங்காரம் செய்து விடுகிறாள். இவ்வளவுக்கும் ரொம்ப வசதி படைத்தவளெல்லாம் இல்லை. "கல்யாணம்ங்கிற அந்த ஒரு நாள்ல தான் எல்லோருமே ஹீரோ ஹீரோயின் ஆகிறாங்க. அந்த பிள்ளைங்களுக்கும் ஆசை இருக்கும். வசதி இருக்காது. அதனால் எனக்கு வசதி படுறப்ப அவங்களுக்கு ஃப்ரீயா செஞ்சு விடுவேன். மனதுக்கு நிம்மதியா இருக்கும்" என்பாள். நல்ல மனசு ல்ல.


"வராத பணத்தை விட்டுடலாம் மேடம் ஆனால் நம்மை ஒருவர் ஏமாற்ற விடக் கூடாது. அதனால் எத்தனை முறை என்றாலும் போன் பண்ணி வாங்காம விட மாட்டேன்" என்பாள்.  


#மீள் தான். இன்று என்னமோ அந்த பெண் நினைவு வந்தது. இந்த கொரோனா காலத்தில் அந்த குடும்பம் என்ன செய்திருக்கும். கணவன் மனைவி இருவருமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாய் மொபைல் பார்லர் தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். இப்போ இயல்பு நிலை வந்திருக்கும்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!