Bio Data !!

07 August, 2023

புத்தகத்தின் பெயர் : போராட்ட வாழ்க்கை. ஆசிரியர் பூமி பாலகன் மலர்விழி பதிப்பகம். விலை ரூ 120/- முதல் பதிப்பு : 2013 நியாயமான காரணங்களுக்காக ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் இணைந்து நடத்திய ஒரு போராட்டத்தை தொட்டு கற்பனை கலந்து இப் பெருங்கதை எழுகிறது. இது இத்தகைய போரட்டங்களில் கலந்து கொண்ட பலருக்கு கடந்த காலத்தை நினைவு படுத்தலாம். இப் புதினத்தின் கதாநாயகன் வேலுச்சாமியின் வாழ்க்கையே ஆசிரியரின் வாழ்க்கை. கொஞ்சம் கற்பனை கலந்தது. விண்ணும் மண்ணும் மாசடைந்து சுற்றுப்புறங்கள் எல்லம் நாசமாகிப் போயின. கல்வித் துறையும் பொல்லாதவர்கால் ந்ல்லவரல்லாதவர்களால் ஏனைய துறைகளைப் போல் கெட்டுப் போய் விட்டதே என்ற ஆதங்கம் நாவல் முழுக்க ஒலிக்கிறது. கதை தொடங்குவதே சென்னை மத்திய சிறைச் சாலையில் தான். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப் பட்டு இருக்கிறார்கள். போராட்டத்தின் முக்கிய புள்ளியான வேலுச் சாமியைப் பார்க்க கிராமத்திலிருந்து அவர் தாய் தங்கம்மாள் வந்ததை அறிந்து மனம் கலங்கிப் போகிறார். அவர் தாய் அது வரை கிராமத்தை விட்டு வெளியேவே வ்ராதவர். பணி நிரந்த்தரம் ஆகாத வேலுச்சாமி போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டதால் ப்ல இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப் படுகிறார். தளராது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் மற்ற மாநிலங்களில் வாங்கும் ஊதியத்தை விட குறைவாக வாங்குவதைக் சுட்டிக் காட்டி ஒன்று திரட்டுகிறார். இது ஒரு அவலம். நிதி சம்மந்தமான போரட்டங்களுக்கு மட்டுமே மக்கள் அதிகம் கூடுகிறார்கள். சங்கங்களை வலுவிழக்கச் செய்ய போட்டி சங்கங்களை அரசே மறை முக ஆதரவு கொடுத்து உருவாக்குவதைப் பர்றி சொல்கிறார். சங்கங்களில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்ட ஊழியர்களுக்கு கதையோடு தம்மை பொருத்திப் பார்க்க முடியும். முதன்மைக் கல்வி இயக்குனரின் நேர்முக உதவியாளர் தங்க முத்துவைப் பற்றி சொல்லும் போது “ சிவந்த நிறமும் ஐந்தே முக்கால் அடி உயரமும் அவரின் செயல்பாடுகளுக்குத் துணை நின்றன. நினைத்ததைச் சாதித்துத் கொள்ளும் திறமை அவருக்கு இருந்தது” என்கிறார். நம் மக்களின் அழகுக்கும் கம்பீரத்துக்கும் மயங்கும் , அஞ்சும் குணத்தை இப்படி அடிக் கோடிட்டுக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றியது. பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் கொடுக்கும் பாலியல் தொல்லை உயர் அதிகாரிகளின் எதேச்சாதிகாரப் போக்கில் பிறக்கும் அதிரடி உத்தரவுகள் அதனால் ஊழியர்கள் அனுபவிக்கும் வேதனைகள் என பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார். உறுதியான கண்கள் அகன்ற மார்பு கடப்பாறை போன்ற நீண்ட கை கால்கள் அழகான முடி வெண்கலக் குரல், சிங்கம் போன்ற நடை கொண்ட வேலுச்சாமிக்கு கதையில் பெண் துணை இல்லை யென்றால் சுவாரஸ்யமேது . அந்தப் பஎண் துணை வேல் விழி என்ற ஆசிரியை. வேல் விழியும் அவளுடன் சில பெண் ஆசிரியைகளும் போராட்டத்தில் கலந்து சிறைக்கு செல்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் சிறையில் உடல் நிலை சரியில்லாமலும் மாரடைப்பாலும் உயிரிழந்த 27 ஆசிரியர்கள் தந்த நினைவில் உடல் நிலை சரியில்லாதவர்களை மறியல் செய்ய வேண்டாம் என்று சங்கமே ஒதுக்கி விடுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் வேலுச்சாமி வேலையிலிருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். அப்போது உடனிருப்பவர்கள் அவரோடு பேசினால் கூட தன் மீதும் பழி வாங்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என் அஞ்சி ஒதுங்குகிறார்கள். நானும் இதே போல் ஒரு சந்தர்ப்பத்தில் அதிகாரியின் தவறான பேச்சைத் தட்டிக் கேட்ட போது அனுபவித்திருக்கிறேன். என்னிடம் பேசினாலே மதிப்பெண்ணில் கை வைத்து விடுவார்களோவெனும் அச்சத்தில் என்னிடமிருந்து ஒதுங்குவார்கள். அப்போதெல்லாம் துணை புத்தகங்களே! ஒரு போராட்டத்தின் உண்மை நிலவர்ம் தெரிந்து கொள்ள கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!