Bio Data !!

31 July, 2024

நம் உடலில் எல்லா உறுப்புகளும் ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கும் போது அந்த உறுப்புகளின் இருப்பே நமக்குத் தெரியாது. அது செயல்படுவதில் சுணக்கம் ஏற்படும் போது தான் அப்படி ஒன்று இருக்கிறது என்பதையே உணர்வோம். அதே போல பூமித் தாய், பொறுமையின் சிகரமாய், நாம் அவளைச் சீரழிப்பதை எல்லாம் பொறுத்துக் கொள்ளும் போது நமக்கு அவள் அருமை தெரிவதே இல்லை. ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளை நாம் எவ்வளவு சீரழித்துக் கொண்டு இருக்கிறோம். கழிவுகளின் புகலிடமா நீர் நிலைகள். கடலினடியில் அத்தனை கழிவுப் பொருட்களின் குவியலாம். சீற்றம் கொண்ட அந்தப் பூமிப் பெண் தன் மேல் கொண்ட அருவருப்பில் தன்னைச் சுத்தம் செய்து கொள்ள வருவித்தது போல் இருக்கின்றது இந்த மழைச் சீற்றம். கண்டதையும் தின்று வயிற்றைக் கெடுத்தால் தலையில் வலி எடுக்கும். அதைப் போலவே இயற்கையும் தன்னைக் கெடுப்பவர் யார் என்று தேர்ந்து அழிப்பதில்லை. நாட்டின் சில இடங்களில் பேரழிவைப் போல சுணக்கம் ஏற்படும் போதாவது நாம் சுதாரித்து நம் தாய்க்கு செய்யும் தீங்குகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இரவில் உறங்கச் சென்ற அந்த அன்பு உள்ளங்கள் நினைத்திருக்குமா நாம் அப்படியே புதைந்து போவோம் என. இவ்வளவு காலமாய் மொத்தம் மொத்தமாய் உயிர்களின் இழப்பை பார்க்காத நாம் சமீப காலமாய் அடிக்கடி எதிர் கொள்வதை உணர்கிறோமா? எனக்கு பக்தி உண்டு. அதனால் " மக்கள் மேல் உள்ள கோபம் தணிந்து இந்த பிரபஞ்சத்தை காப்பாற்று" என என் இஷ்ட தெய்வத்திடம் விடாமல் வேண்டுகிறேன். நீங்களும் உங்கள் விருப்ப தெய்வத்திடம் வேண்டுகோள் வையுங்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நாம் ரசித்து வாழும் இந்த உலகம் அழிந்து விடக் கூடாது என்றாவது மனதார நினையுங்கள். நம் அனைவரின் நேர் மறையான எண்ணம் இந்த பூமியைக் காக்கட்டும். # thought from vaya nadu disaster 😭

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!