Bio Data !!

21 September, 2012

அருணா பாஸ்கரன் ....

அருணா பாஸ்கரன் யார் என்று சொல்கிறேன் என்று முந்திய பதிவில் சொல்லி இருந்தேன்.

சுதந்திர போராட்ட வீரர் எஸ். டி ஆதித்தன் தான் இவரது தந்தை. அவரது கனவில் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வர் வந்து " உனக்கு குழந்தை வடக்கே உள்ளது " என சொல்லி இருக்கிறார். தினத்தந்தி அதிபர் ஆதித்தனார் இவரது சித்தப்பா. சிவந்தி ஆதித்தன் அவர்கள் மற்றுமொரு சித்தப்பா. அருணாச்சலேஷ்வர் நினைவாகத் தான் தனக்கு வடக்கே இருந்து பெண் குழந்தை கிடைத்ததும் அருணா என்று பெயர் வைத்திருக்கிறார்.

இவர் சுதந்திரத்திற்கு பின் நடந்த முதல் தேர்தலில் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நின்று முதல் எம். பி ஆனார். ஒரு முறை டெல்லி செல்லும் பொது முதல் வகுப்பு பெட்டியில் பயணம் செய்த பிரேம்நாத் ஷர்மா என்பவர் இவரிடம் " எத்தனை குழந்தைகள்? " என்று கேட்க கலங்கியபடி தனக்கு குழந்தைகள் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அதற்கு ஷர்மா மூன்றாவதாக குழந்தை உண்டாகி இருக்கும் தன்  மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தால் தத்து கொடுப்பதாக உறுதி அளித்து இருக்கிறார். அதே போல் பெண் குழந்தை பிறந்து எஸ். டி  ஆதித்தன் அவர்களுக்கு தத்து கொடுக்கப்பட்ட பெண் தான் அருணா.

நடிகர் சரத்குமார் இவரது அத்தை மகன். எழுத்தாளர் குரும்பூர் குப்புசாமி இவரது சம்பந்தார். அருணா அவர்களது எழுத்துக்கள் நடக்கும் நிகழ்வை கண் முன் கொண்டு நிறுத்துவதால் " மேடம் , நீங்க கதை எழுதலாமே ?" என்றேன். எங்க  வீட்டில "அருணா, எழுதுறதை இத்தோட நிறுத்திக்கோ, இதுக்கு மேல நீ எழுதினா கதை விடுறேன்னு சொல்லிடுவாங்க " னு சொல்றாங்கன்னு சொல்ல "நானும் உங்களை கதை விடத்தான் மேடம் சொல்றேன் " என்றேன். சிரித்தபடியே பேச்சை முடித்துக் கொண்டோம் .

4 comments:

  1. அறிந்து கொண்டேன்... மிக்க நன்றி...

    ReplyDelete
  2. மிக அருமையான பகிர்வு....உங்கள் பகிர்வுக்கு நன்றி.....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!