Bio Data !!

14 November, 2023

அஞ்சலி கோபாலனின் சிறப்புரை கேட்க வாய்க்கப்பெற்றது. விஷயம் கொஞ்சம் கடினமானது தான். ஜீரணித்துக் கொள்ளுங்கள். HIV யிலிருந்து தொடங்கினார்கள். ஆரம்பத்தில் AIDS ஆண்களுக்கு மட்டுமே வருகிறது என்றும் அவர்களது தவறான நடவடிக்கைகளே காரணம் என்றும் இருந்த காலங்களை விட அது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட வருகிறது என கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் தான் மருந்துகள் கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்ட தொடங்கினராம். நீங்கள் பிறரைப் பார்த்து எந்த வயதில் ரசிக்கத் தொடங்கினீர்கள் என்று கேட்டார். 10, 11, 14 என பல பதில்கள் வர 8யிலிருந்து 14 லுக்குள் என்றார். அப்படி நீங்கள் முதன் முதலில் ரசிக்க தொடங்கியவர் உங்கள் gender ஐ சேர்ந்த வரா எதிர் பாலினத்தவரா என நினைவிருக்கிறதா? என் றார். இல்லை. ஏனென்றால் அது அந்த வயதில் தவறு என கற்பிக்கப்படவில்லை. வளர்ந்த பிறகு ஒரே பாலினத்தில் வரும் ஈர்ப்பு சமுதாயத்தால் தவறு என்று கற்ப்பிக்கப்பட்ட காரணத்தால் அது மன உளைச்சலை தருகிறது. ஆனால் இந்தியா வில் அங்கீகரிக்க படாத சமயத்தில் கொலை செய்வது, கொள்ளை அடிப்பது போல ஒரு குற்ற செயலாகவே கருதப்பட்டது. இங்கு அவர் நடந்த ஒரு கதையை சொன்னார். இரண்டு ஆண்கள் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏற்ப்பட்ட ஈர்ப்பால் திருமணத்தில் இணைந்து முப்பது ஆண்டுகள் இருந்தனர். அரசல் புரசலாய் அவர்கள் குடும்பங்களுக்கும் தெரிந்திருந்தது. ஒருவர் நோய் வாய் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடுத்தவர் அவரருகில் வர மறுக்கப்படுகிறார். தன் இணை இறந்த பின்பு அந்த சடங்குகளிலும் அவரை கலந்து கொள்ள விடவில்லை. நடிகை மவுனிகா இயக்குனர் பாலு மகேந்திரா இறந்த சமயத்தில் "அவர் கன்னம் தொட்டு முத்தம் கொடுக்க அவர் குடும்பத்தினர் சம்மதிக்க வில்லை என ஒரு பேட்டியில் சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது. இரண்டும் ஒரே விதமான சோகம் தான். அன்பில் பாலினம் ஏது? நான் நினைப்பதுண்டு இது சந்தர்ப்பம் , இயல்பு, சூழல் என பல காரணங்களால் ஏற்படும். இதற்கு சட்ட திருத்தம் தேவையா? இதற்கு போய் போராடுகிறார்களே என. ஆனால் இதை கேட்ட பின் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு விஷயத்தை இயல்பாக பேசுவதும் மாணவர்கள் அதை விட இயல்பாக கேட்டுக் கொள்வதும் அவர்கள் துணிந்து கேட்ட சந்தேகங்களும் சந்தோஷம் தருவதாய் இருந்தது. விருப்பமற்ற தருணத்தில் தன் பாலினர் அணுகும் போது அதை எப்படி எதிர் கொள்வது என்பது ஒரு ஆக்க பூர்வமான கேள்விக்கு உதாரணம். முக நூலில் மெசெஞ்சரில் கூட இந்த மாதிரி தொல்லைகள் வருவதாக நண்பர்கள் குறிப்பிடுவதுண்டு. அதை மென்மையும் கடுமையும் கலந்த விதத்தில் மறுக்க வேண்டும். பஸ்களில் இரவுப் பயணங்களில் ஸ்லீப்பர் பஸ்களில் ஆண்கள் இந்த விதமான தொல்லைகளை சந்திக்கிறார்கள். காமம் இப்பொழுதெல்லாம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. அது ஆண், பெண், குழந்தைகள், முதியவர் என யாரையும் விட்டு வைக்காமல் பஸ்பமாக்கி கொண்டு செல்கிறது. குழந்தை கள் தினமான இன்று ஆண் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என உறுதி எடுப்போம். இந்த உலகில் வாழும் உரிமை பெற்ற அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுப்போம். இது நான் 2019 இல் எழுதிய பதிவு.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!