Bio Data !!

19 November, 2023

நாவலின் பெயர் : அவர்கள் கிடக்கிறார்கள். ஆசிரியர் : ஜோதிர் லதா கிரிஜா முத்து சுந்தரி பதிப்பகம் விலை : ரூ 300 முதல் பதிப்பு : 2019 ரா.கி..ரங்கராஜன் அவர்களால் ஜோதிர் லதா அவர்கள் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனார். தமிழ்வாணன் , ஆர் வி, அழ. வள்ளியப்பா ஆகியவர்களால் ஊக்குவிக்கபட்டு 1968 ஆனந்த விகடனில் பெரியோர்களுக்கான எழுத்தாளராக அறிமுகப் படுத்தப் பட்டார். “ அவர்கள் கிடக்கிறார்கள்” மூன்று கதைகளின் தொகுப்பு. அதில் முதல் கதை தான் அவர்கள் கிடக்கிறார்கள். கதையின் தலைப்பினாலேயே வெற்று விமர்சனம் மட்டும் செய்யும் சமுதாயத்தை சாடும் கோபம் தெரிகிறது. தகப்பன் மட்டும் பணி புரிந்து தன் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டிய சூழலில் பொறுப்பற்ற தந்தையால் பாரம் சுமக்கும் தாய். ஜாதகக் கோளாரினாலும் ஏழ்மையினாலும் முப்பது வயது வரை திருமணம் ஆகாத ஒரு முதிர் கன்னி. அவளுக்கு முடித்துத் தான் தனது திருமணம் என்று இருக்கும் சூழலிலும் காதலித்து, சாகக் கிடக்கும் தன் காதலியின் தாய்க்காக வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் முடித்துக் கொண்ட அண்ணன். இவர்கள் இருவருக்கும் அடுத்து பிறந்திருந்தாலும் பொறுப்பாய் சிந்திக்கும் இளைய மகள் தேவகி. இவர்கலைக் கொண்ட குடும்பத்தின் மூலம் கதையைச் சொல்லி ஊடாக சமுதாய சீர்திருத்தக் கருத்துகளையும் தெளித்திருக்கிறார். பெண் பார்க்கும் படலம் எப்படி பெண்களின் உணர்வுகளைக் கொன்று ஜடமாக்குகிறது என்பதை அழகாக விவரித்திருக்கிறார்.முதன் முறை பெண் பார்க்க வரும் போது வேர்த்து விறுவிறுத்து வரும் பெண் மறுபடி மறுபடி அது வழக்கமாகும் போது எப்படி எந்த ஒரு உணர்வும் இல்லாமல் நடந்து கொள்கிறாள் என்று அழகாக சொல்கிறார். இத்தகைய நிகழ்வுகள் கதைகள் மூலம் ஆவணப்படுத்தப் பட வேண்டும். அப்போது தான் இளைய தலைமுறை தாம் எவ்வளவு முன்னேறிய நிலையில் இருக்கிறோம் என்பதை உணரும். படப்பிடிப்பு: இது இரண்டாவது கதை. ஒரு கிராமத்துக்குள் ஒரு சினிமா படப்பிடிப்பு யூனிட் வருகிறது. அதன் டைரக்டர் பாலா. அவனது வலது கை போன்ற எடுபிடி நட்டு. படம் எடு[ப்பதை வேடிக்கை பார்க்க வந்த பெண் வேலம்மா பாலாவைக் கவர்ந்து விடுகிறாள். ரசிக்கலாம். தன் படத்தில் நடிக்க வைக்க விரும்பலாம். ஆனால் பாலா அவளை அனுபவிக்க விரும்பி எடுக்கும் ஆபத்தான முயற்சிகள். அதன் விளைவு. வழக்கப்படி தப்பு செய்தவர் தைர்யமாக இருக்க பாதிக்கப்பட்ட பெண் தான் அசிங்கப்பட்டு விடுவோம் என மறைக்கிறாள். அவள் திருமணமாகி மறுபடி டைரக்டர் கண்ணில் பட்டு விடுகிறாள். சூடு கண்ட பூனையாய் இருந்தால் தானே பாலைக் குடிக்காது. இவன் மனிதன் அல்லவா. அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார். ரகசியம் பரம ரகசியம் : இது மூன்றாவது கதை. :தன் மகளைக் காணோம் என்று தேடுகின்ற ஒரு தந்தையை இரயிலில் சந்திக்கிறார்கள் மணியனும் அவர் தங்கையும். அவர்கள் தொடங்கி உள்ள துப்பறியும் தொழிலின் முதல் கேசாக அதை எடுத்து கண்டு பிடிக்கிறார்கல்> நாம் எப்படி எல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என்பதை கதையின் நடுவே சொல்கிறார் ஆசிரியர். கண்டு பிடித்தார்களா? கிடைத்த செய்தியில் வயதான தந்தை மகிழ்ந்தாரா? துடித்தாரா? கதை முழுவதும் ரகசியம் அழகாக காப்பாற்றப்பட்டு இருக்கிறது. ****************************************************************************

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!