Bio Data !!

14 November, 2023

நண்பர் ஒருவர் பேசிய ஸூம் மீட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு ராணுவ வீரர். விடுப்பில் வந்திருக்கிறார். அவர் ஆனந்தம் ஃபௌண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் பேசினார். அவரது அனுபவங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் உங்களுக்காக இதோ!! "யாரெல்லாம் எல்லாம் கிடைத்து நிறைவான வாழ்க்கை வாழ்கிறீர்கள்" என்ற கேள்வியோடு தொடங்கினார். "எனக்கு இன்று கிடைப்பதெல்லாம் மிகவும் நிறைவாக இருக்கிறது ஏனென்றால் லடாக்ல பணி புரிந்த போது வீட்டுக்கு ஒரு போன் பண்ண நாலு மணி நேரம் காத்திருந்திருக்கிறேன். லடாக் ல இருந்து ஊருக்கு வரும் போது எப்போ வரவேன்னு உறுதியா சொல்ல முடியாது. வான நிலை மாற்றம். பணி புரியும் இடத்தில் உள்ள சூழல் இப்படி பல விஷயங்கள் சார்ந்தது நம் பயணம்" என்றார். ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் பணி புரியும் போது பாதை தவறி நாம் சென்று கொண்டிருக்கும் குழுவை விட்டுப் பிரிந்து விட்டால் அவர்களைக் கண்டு பிடித்து சேருவது மிக கடினம். இப்படி பல கஷ்டமான சூழலில் பணி புரிவதால் கிடைக்காத எதுவுமே எனக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் இன்றைய தலைமுறையோ சின்ன சின்ன ஏமாற்றங்களுக்கும் தற்கொலை தான் தீர்வு என்று முடிவெடுக்கிறார்கள்" என்றார். இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை் வயது நாற்பதுக்குள் தான். ஒரு துக்கமான சூழலை விவரித்தார். நண்பர்களோடு சேர்ந்து ஜாலி மூடில் பேசி சிரித்துக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவரின் தந்தை மூன்று நாள் முன்னதாக இறந்து விட்டதாக தகவல் வருகிறது. இறந்த துக்கத்தைக் காட்டிலும் தந்தை அங்கே இறந்திருந்த பொழுது நான் இங்கே சந்தோஷமாக சிரித்து விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறேனே என்று நண்பரின் கதறல் வாழ்நாளில் மறக்க முடியாதது என்றார். " H"abitual improvement ஐ பற்றி பேசினார். இதனால் முதலில் நான் என்னை உணர்வேன். அதன்பின் உலகம் என்னை தானாய் அறியும் என்றார். இது நமக்கான முக்கிய படிப்பினை. உலகம் புரிந்த பின் அடுத்த செயலில் இறங்குவோம் என்றிருந்தால் சரிப்படாது. "A" for apple சொல்லிக் கொடுக்காமல் ஒவ்வொரு எழுத்துக்கும் இப்படி நல்ல செயல்களைச் சொல்லிக் கொடுக்கலாம் என்றார். "E"arly to bed early from bed. இதை இன்று வரை கடைப்பிடித்து வருவதாக சொன்னார். விடியலில் எழுந்து விட்டால் எனக்குப் பின் எழும் அத்தனை பேரையும் நான் வெல்கிறேன் என்று வைரமுத்து சொல்லியதை மேற்கோள் காட்டினார். அப்படியானால் எழும் போதே பலரை வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. "லவ் டுடே. " இன்றை மட்டுமே நேசியுங்கள் "L"earning and listening. ஐந்து வயது மகனின் பேச்சையும் உன்னிப்பாய் கேட்பேன். அது கூட பல சந்தர்ப்பங்களில் உதவி இருக்கிறது என்றார். "S"ay sorry. And say thanks . அது நம் எதிரில் இருப்பவரிடம் நம்மைப் பற்றிய நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும் என்றார். "P"lanning and punctuality "D"edication காலம் என்பது பொன் போன்றது அல்ல. உயிர் போன்றது. பொன் போனால் திரும்ப பெற்று விடலாம். உயிர் அப்படி அல்ல. எதை எவர் கண் விடல் என்பது மட்டுமல்ல எந்த சமயம் விடுவது என்பதிலும் நாம் கவனமாய் இருக்கணும். ஒரு காரியம் அது தவறான காலத்தில் செய்யப்பட்டதாலேயே கூட தவறாகிப் போகும் என்றார். மொத்தத்தில் மிகச் சிறந்த உரையையும் இன்றைய மாணவர்களின் தெளிவான சிந்தனையை கேள்விகளிலும் கேட்க முடிந்தது. நன்றி வினோத்!!!

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!