Bio Data !!

11 December, 2023

நாவலின் பெயர் : மதுரை மகுடம். ஆசிரியர் : கலைமாமணி விக்கிரமன் யாழினி பதிப்பகம். விலை : ரூ 125/- முதல் பதிப்பு : 2018 ஏறத்தாழ 207 ஆண்டுகள் மதுரையை ஆண்ட நாயக்க அரசர்களுள் சொக்க நாத நாயக்கர் 23 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவர் மனைவி மங்கம்மாள் இவர்கள் பற்றிய கதை தான் இது. சொக்க நாதரின் இறுதிக் காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளோடு சில கற்பனை கதாபாத்திரங்கள் சேர்த்து எழுதப்பட்ட கதை. சொக்க நாதரின் மகன் பெயர் முத்து வீரப்பர். அவர் மனைவி முத்தம்மாள். வழக்கமான சரித்திர நாவல்களில் இருப்பது போல் வர்ணனையோ விஸ்தாரமாக போரை விவரிப்பதோ இல்லை.ஆனால் அரசாட்சியை பிடிக்கவும் கவிழ்க்கவும் நடந்த சூழ்ச்சிகள் உண்டு. மெல்லிய காதல் உண்டு. நீரோடையில் மெல்ல நகர்ந்து செல்லும் காகிதக் கப்பல் போல கதை நகரும். ஆனால் வாசிக்க சுவாரஸ்யமாகத் தான் இருந்த்து. மதுரையின் மகுடத்தைப் பறிக்க ஆளாளுக்கு போட்டி. பாண்டிய மன்னருக்கு ஆண் வாரிசு இல்லாததே ஆசைக்குக் காரணம். இருந்தும் மகுடம் எப்படி உரிய வம்சத்தைச் சென்று சேருகிறது என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார். மங்கம்மாள் மிகுந்த பொறாமை கொண்டு முத்தம்மாளை வெறுக்கலானாள். தானே மதுரை மகுடத்தை அடைவது எப்படி என்று சிந்திக்கலானாள். அது வேறு கதை என்று முடித்ததால் பாகம் 2 வரும் என்று தோன்றியது. உறுதிப்படுத்தப் படவில்லை. அந்தக் கால அரசர்கள் தம் மனைவியரின் அறிவுச் சுடரை இரு கரம் குவித்துக் காத்தது பெருமையாகத் தான் இருக்கிறது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!