13 June, 2025
விமான விபத்து 12.6.2025
(அகமதாபாதிலிருந்து லண்டனுக்கு மதியம் 1.38 க்கு கிளம்பியது
ஏர் இந்தியா விமானம். நான்கு நிமிடங்களுக்குள் எரிந்து கீழே விழுந்தது. அவசர வழி வழியாக குதித்துத் தப்பிய ஒருவரைத் தவிர 241 பேரும் மரணம். 😭)
# விமான விபத்து.( 12.6. 2025)
எல்லா பறவையும்
சிறகை விரிப்பதைப்
போலத் தானே
நானும் விரித்தேன்.
சிறுவர்கள்
கற்பனையில்
கார் ஓட்டுவதைப்
போலத் தானே
உற்சாகமாய்
மேலெழும்பினேன்.
ஒரு தாய்
தன் கருவில்
தாங்குவதைப்
போலத்தானே
அத்தனை பேரையும்
கரை சேர்க்க நினைத்தேன்.
சில ஆண்டுகள்
தனிமையில் வாடிய
என் மகன்
சந்தோஷமாய் தன்
மனைவியோடும்
மூன்று குழந்தைகளோடும்
ஏறினானே.
உலகத்திலிருந்தே
விடை பெறப் போவதை
அறியாத
இரண்டு செல்வங்கள்
"குட் பை இந்தியா"
என உற்சாகமாய்
விடை கொடுத்து
ஏறினார்களே!!
எல்லா நிலை மாற்றியும்
இயங்க மறுக்கிறதே
என சலிப்போடே
தன்
பயணத்தை
தொடங்கினானே
ஒருவன்.
உழைப்பாளர்
தினமாக
உற்சாகமாக
இருந்தது போய்
"மே தின அழைப்பு"
அலமந்து போய்
கொடுத்தானே
என் செல்வம்.
என்னோடிருந்தவர்கள்
மட்டுமின்றி
"சிவனே" ன்னு
நின்றவர்களையும்
அல்லவா காவு
கொடுத்து விட்டேன்.
மறைந்தவர்களின்
குடும்பத்து உறவுகள்
எப்படி
மீளப் போகிறார்கள்
இருந்தும் செத்தவர்கள்
அல்லவா அவர்கள்.
***( SOS னு அவசரத் தேவையில் இருப்பவர்கள் குரல் கொடுப்பதை அறித்திருக்கிறோம். "மே டே கால்" என்று ஒரு அறிவிப்பு இருக்கிறதாம். வேற வழியில்லை. நாங்கள் சாகப் போகிறோம் என விமான ஓட்டி அறிவிக்கும் அறிவிப்பாம் அது. அதைக் கொடுத்திருக்கிறார் விமான ஓட்டி. உற்சாகமாக புறப்பட்ட சில நொடிகளுக்குள் விமானத்தின் பழுது புலப்பட்ட அந்த நரக நொடி எப்படி இருந்திருக்கும்.)
*** (விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் அங்கே இருந்த சிலரும் மரணம்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!