11 June, 2025
# ரயில் பயணங்களில்
இந்த தலைப்பு என்னை நாற்பதாண்டுகளுக்கு முன் கொண்டு விட்டுத் திரும்பியது.
அப்போ எனக்குத் திருமணமாகி, முதல் குழந்தை பிறந்து, என் கணவர் வேலைக்குச் சென்று, இரண்டாவது குழந்தையும் வயிற்றில்.
அம்மா இன்னும் என் கணவருடன் சுமுகமாகவில்லை. அப்போ நாகரகோவிலில் நான் இருந்தால் வயிற்றில் குழந்தையுடன் முதல் குழந்தையைப் பார்ப்பது படினம் என்பதால் பாளையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து கணவர் கேரளாவில் இருந்து வரும் போது மட்டும் அங்கே போவேன். மற்ற நேரங்களில் அம்மா வீட்டில் இருப்பேன்.
அங்கிருந்து நாகர்கோயிலுக்கு தினம் ரயிலில் பயணம். பல இடங்களிலிம் பணி புரிபவர்கள் ஒன்றாக வந்து சேர்வார்கள். ஒரே பெட்டியில் ஏறி விடுவோம். அமர்க்களம் தான். நான் மட்டும் தான் திருமணமாகி வயிற்றில் குழந்தையோடு. ரொம்ப நல்லா கவனிச்சுக்குவாங்க.
என் பெண் பிறந்தது ஜனவரி 19. அக்டோபர் 31 ஒரு முக்கியமான தினம் . ஆம் அன்னை இந்திராவை சுட்டுக் கொன்று விட்டார்கள். ஒரே பரபரப்பு. மாலை ரயில் ஓடுமோ என மதியமே எல்லோரும் கிளம்பி ஸ்டேஷன் வந்திடுங்கன்னு சொல்லிட்டாங்க. நான் ஆட்டோவில் போகிறேன். அலுவலகத்தில் இருந்து ரயில் நிலையம் அரை மணி நேரம் பயணம். ஆட்டோவை கலகக்காரர்கள் வழி மறிக்கிறார்கள். புள்ளத்தாச்சின்னு சொன்னபடியேஆட்டோக்காரர் பத்திரமா கொண்டு ரயில் சேர்க்கிறார்
நெல்லை சென்று சேர்ந்து விட்டோம். பஸ் எல்லாம் நிறுத்தி விட்டார்கள். மறு நாள் நவம்பர் 1 நாகர கோயிலுக் கு முதன் முதலாக ரயில் விட்ட தினம். கொண்டாடுவதற்காக தோவாளை என்னும் இடத்தில் பூ கேட்டிருந்தோம். அவர்கள் கொடுத்து விட்ட பூக்குவியலை அப்படியே கூடையோடு பஸ் ஸ்டான்டில் வைத்து விட்டு நடக கத் தொடங்கினோம். அங்கிருந்து எங்க வீட்டுக்கு அரை மணி நேரம் நடக்கணும்.
முத்து என்றொரு நண்பர் வங்கி ஊழியர் உடன் வந்தார். வீட்டில் எங்க அம்மாவிடம் என்னை ஒப்புவித்து "இப்போ தான் அப்பாடான்னு இருக்குது" என்றபடி வீட்டிற குச் சென்றார்.
மறக்க முடியாத ரயில் நட்புகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!