Bio Data !!

11 July, 2026

ஒரு ஞாயிறு அன்று நடந்த நீயா நானாவில் கோபிநாத் ஒரு கேள்வி எழுப்பினார். "ஆண்களுக்கு ரிஸ்க் எடுப்பதில் ஒரு விருப்பம் இருப்பது போல் பெண்களுக்கு தனக்கு வலி ஏறபடுத்திக் கொள்வதில் ஒரு அடிக்‌ஷன் இருக்கிறதோ? " என்றார். ஏன் சாமி! அப்படி இருந்தா குடிச்சுட்டு வந்து பெண்களை அடிக்கிற ஆண்கள் எத்தனை பேர் இருக்கிறாங்க. வலி கிடைப்பது ஒரு கஷ்டமா? அதற்கு டாட்டூ போட்டா வலியை அனுபவிக்கணும். ஆணானாலும் பெண்ணானாலும் அடுத்தவர் நம்மைப் பாரக்க வேண்டும் என்று ஒரு செயல் செய்தால் அது சரியில்லை. அதுல ஒரு வேடிக்கைப் பார்த்தீங்களா? கருப்பாய் இருப்பவர்களுக்கு நாம் அழகாக இல்லையோ என்ற காம்ப்ளெக்ஸ்சை உண்டாக்குபவர்கள் தான் தன் பொன் நிற தோலின் மேல் கருப்பாய் டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள். நிறத்தில் என்ன இருக்கிறது என்ற பாடத்தை இதில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!