08 January, 2023
அப்பா!!
இந்த படத்தில் நடுவில் அமர்ந்திருப்பவர் தான் அபாக்கியவானான என் அப்பா. ஏன் இப்படி சொல்றேன்? மனசு நிறைய மனைவி மக்கள் என்று ஆசைகளை நிறைத்து வைத்திருந்தவர் தன் பிள்ளைகளின் வளர்ச்சி ஒன்றைக் கூட பார்க்காமல் 41 வயதில் மரித்துப் போனார். இன்று அவருடைய பிள்ளைகளும் பேரப் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளும் இருக்கும் உயரத்தைப் பார்க்க அவர் இல்லையே என்ற வருத்தம் அரித்துக் கொண்டே இருக்கிறது.
சிறிய உருவம் தான். ஆனால் கம்பீரம். கல்லாரியில் பிசிக்ஸ் பேராசிரியர். பெயர் சூசை ரத்தினம். அவருடைய மாணவர்களில் சிலர் என்னுடன் முக நூலில் நட்பில் இருக்கிறார்கள். அவருடைய இரு மாணவர்கள் bency & Parimelazhagar Pari என்னுடன் முக நூல் நட்பாய் இருந்து இன்று கடந்த காலமாகிப் போனவர்கள்.
என்சிசி அதிகாரி. ரொம்ப ஸ்டிரிக்ட். அதனாலேயே நான் அடிகள் பல வாங்கி இருக்கிறேன். அந்த என்சிசி கம்பு யாரெல்லாம் பார்த்திருக்கீங்க. கருப்பு நிறத்தில் வழ வழன்னு இருக்கும். உச்சியிலே தங்க பூண் அலங்கரிக்கும். அடிச்சா ஒவ்வொரு அடியும் உடம்பில் ஒரு வரி எழுதும். அடியின் முற்றுப் புள்ளியாய் அந்த தங்க பூணால் உச்சி மண்டையில் ஒரு "நச்" .
வாழ்க்கையை ரசித்து வாழ்ந்ததாகத் தோன்றுகிறது. அவங்க வேலை பார்க்கும் போது வகுப்பு இருக்கும் நேரம் மட்டும் கல்லூரிக்குப் போனால் போதும் அதனால் நான் குழந்தையா இருந்தப்போ வேலைக்கு ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு அப்பா தான் என்னை வளர்த்திருக்காங்க. அதனாலேயே அவர் இறக்கும் வரை எனக்கு அம்மாவை விட அப்பான்னா தான் ப்ரியம் அதிகம். இப்போ இந்த படத்தில அப்பா கூட இருக்கிற யாரோ ஒருவர் முக நூலிலும் உலவிக் கொண்டு இருக்கலாம். இல்லை அவர்களின் பிள்ளைகள் இருக்கலாம். அப்படி யாராவது ஒருவர் தொடர்பு கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பில் இந்த படத்தை பகிர்கிறேன்.
இன்னும் அப்பா பற்றி சொல்ல பல விஷயங்கள் இருக்குது. சமயம் வரும் போது அப்பப்போ சொல்றேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!