14 September, 2025
நிம்மதி வேண்டும் வீட்டிலே.
# நிம்மதி வேண்டும் வீட்டிலே.
ஒரு நாளின் 24 மணி நேரத்தில் தூங்குவது, சாப்பிடுவது, வெளியே கிளம்புவது போன்ற நேரங்களை விடுத்து வீட்டில் மீதி இருக்கும் நேரம் ரொம்பக் கொஞ்சம்.
அந்த கொஞ்ச நேரத்தில் ஒருவருக்கொருவர் வாக்குவாதம், சண்டை, மனஸ்தாபம், கோபம். அது அலை போல மீதி நேரங்களையும் பாதிக்கும். அதிகரித்துக் கொண்டே போனால் வீட்டுக்கு வருவதையே மனம் விரும்பாது. ஆணானால் பல பழக்கங்கள் வர வழி வகுக்கும். பெண்ணானால் பெரும்பாலும் வேறு நட்பை நாடும். அந்த நட்பு தரும் பலத்தில் தன் துயரத்தைக் கடக்க முயலும். முடியாத போது விவாகரத்தில் முடியும்.
இதுவே பிள்ளைகள் ஆனால் காதலிக்க நினைக்கும். நண்பர்களோடு சேர்ந்து தீய பழக்கங்களுக்கு அடிமையாகும்.
இது எல்லாம் இல்லாமல் போக வீட்டில் இருக்கும் அந்தக் கொஞ்ச நேரம் அடுத்தவர் விருப்பு வெறுப்புகளை மதித்து நடந்தால் போதும்.
" அந்த செய்தித் தாள்ல தேர்வா வரப் போகுது. இவ்வளவு நேரம் படிக்கிறீங்க" என்றோ
" இந்த சீரியல் எல்லாம் பார்த்து பார்த்துத் தான் உன் மைன்ட்டே பொல்யூட் ஆகிப் கிடக்குது" என்றோ
" "இதெல்லாம் ஒரு நிகழ்ச்சின்னு எப்படித் தான் பார்க்கிறீங்களோ" என்று முதியவர்களைப் பார்த்தோ
"ஒரு நாள் இல்ல ஒரு நாள் அந்த செல்லைத் தூக்கி உடைக்கப் போறேன் பாரு" என்று பிள்ளைகளைப் பார்த்தோ சொல்லாமல்
அவரவர் கடமையை முடித்த பின்னான நேரத்தை அவரவர் விருப்பப்படி செலவழிக்க அனுமதித்தாலே பாதிச் சண்டை குறைந்து விடும்.
தான், தன் விருப்பம் என்று சுய நலமாய் இல்லாமல் , கொஞ்சம் பெருந்தன்மையோடு இருப்பவரை பலி கடா ஆக்காமல் , இருந்தாலே வீட்டுக்குள் நிம்மதி இருக்கும்.
எல்லாவற்றிற்கும் மேலாக நிம்மதியாய் இருக்க முக்கியத் தேவை பணம். குடும்பத்துக்கு தேவையான பணம் சம்பாதிப்பதிலோ, செலவழிப்பதிலோ அத்தனை பேருக்கும் கவனம் இருக்க வேண்டும்.
அவ்வளவு தாங்க. இனி அவரவர் போய் அவரவர் வேலையைப் பார்ப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!