வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய நற்செய்தி,
அம்மா அப்பா வைத்த பேரை திருப்தி இல்லைன்னு வளர்ந்த பிறகு மாற்றிக்கிறோமே அது போல் நமது செல் தொலைபேசி ஆப்பரேட்டர் மேல் அதிருப்தி இருந்தால் எண்ணை மாற்றாமல் ஆப்பரேட்டர் மட்டும் மாற்றிக் கொள்ளலாம்.
இந்த வசதி உலகின் பல நாடுகளில் எப்போதோ வந்திருக்க நமக்கும் வந்தது நல்ல காலம்.
வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து இருக்கும் இந்த நாளில், அவர்கள் முன் சாய்ஸ் பரந்து விரிந்து கிடக்கிறது.
வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணி புரிபவர்கள், தங்கள் சொல், செயல், எண்ணம் அனைத்திலும் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாய காலம் இது. சொல், செயல் சரி, அது என்ன எண்ணம் என்கிறீர்களா? எண்ணத்தில் மாற்றம் கொண்டு வந்து விட்டால், சொல், செயல் பற்றி கவலைப் பட வேண்டியதில்லை, இல்லையென்றால் நாம் அசந்த நேரம் படம் எடுத்து ஆடி விடும் சொல் செயல் மூலம்.
சரி விஷயத்துக்கு வருவோம்.
மொபைல் எண் மாறாமல் நிறுவனத்தை மாற்றிக் கொள்ள நினைத்தால் நாம் செய்ய வேண்டியது இது தான்:
port (space) present mobile number, send sms to 1900
எட்டு இலக்கத்தில் ஒரு எண் ,உங்கள் கை பேசிக்கு எஸ் எம் எஸ் இல் வரும்.
எண் மாற்றுவதற்காக உள்ள விண்ணப்பத்தையும்(அதில் எஸ் எம் எஸ் இல் வந்த எண்ணை தவறில்லாமல் எழுதவும்), புது சிம் பெறுவதற்கான விண்ணப்பத்தையும் இணைத்து அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் கொண்டு கொடுக்கவும். எட்டு இலக்க எண் வந்து விட்டால் குறுகிய கால இடைவெளி தான் கொடுக்கப் பட்டிருப்பதால் உடனடியாக விண்ணப்பத்தை கொடுக்கவும்.
எண் மாறுவதற்கு பத்தொன்பது ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. BSNL அந்த தொகையை நீக்கி உள்ளது.
ஒரு முறை நிறுவனம் மாறி விட்டால் மூன்று மாதங்கள் அதில் இயங்க வேண்டியது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.
எண் மாறும் இடைவெளியில் சுமார் ஒரு மணி நேரம் மட்டும் செல் இயங்காது இருக்கும்.
prepaid , postpaid எண்கள் எல்லாமே மாற்றிக் கொள்ளலாம். postpaid ஆக இருந்தால் கடைசியாக பணம் செலுத்திய பில்லும், ரசீதும் கொண்டு செல்லவும். பழைய நிறுவனத்தில் கிடைத்த ரேட் கட்டர் போன்ற வசதிகள் புதிய நிறுவனத்தில் தொடர்ந்து கிடைக்காது.
Now this is the Golden Opportunity to become a fully transparent , customer oriented Govt. owned BSNL Mobile customer with out change of your mobile number with MNP.
Welcome to BSNL !!
பின் குறிப்பு: இடைவெளியில் இரு முறை சொடுக்குங்கள் ஒரு ஆச்சர்யம் உள்ளது.
இனி அனைத்து நிறுவனங்களிலும் நேர்மையை எதிர்பார்க்கலாம்.
ReplyDeleteUseful info.
ReplyDeleteuseful
ReplyDeleteநன்றி தமிழ், நன்றி சித்ரா, நன்றி பார்வையாளன்
ReplyDelete