ஒரு முக்கிய சந்தோஷ செய்தி,
இந்த கதை என் திருமண நாளான இன்று "இவள் புதியவள் " என்னும் பத்திரிகையில் மே மாத இதழில் வெளி வந்து இருக்கிறது என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவள் நல்ல நிறம். பெண்களை நல்ல நிறம்னு பொதுவா சொன்னாலும் அதில ரெண்டு மூணு வகை உண்டு. மஞ்சள் நிறம், வெண்மையும் மெல்லிய ரோஜா வண்ணமும் கலந்த நிறம், வெளிறிய வெண்மை நிறம். அவள் இதில் எதிலும் அடங்காமல் பொன் நிறமும், பளபளப்பும் உடையவளாய் இருந்தாள்.அவளை அவள் நிறத்திற்காகவே திருமணம் செய்திருந்தான் அவள் கணவன். அடர் நிறங்களில் உடை உடுத்தி அவளை வெளியே கூட்டிச் செல்லும் போது, பெருமையில் அவன் இன்னும் கொஞ்சம் உயரமாகத் தெரிந்தான். அவளுக்கு பிரியம் மென்மையான நிறங்கள் தான். அதெப்படி தனக்கு சொந்தமான ஒருத்தியை மற்றவன் பார்ப்பதை பொறாமையின்றி இவனால் எடுத்துக் கொள்ள முடிகிறது என்று பல முறை அவள் ஆச்சர்யப் பட்டதுண்டு.
இந்த கதை என் திருமண நாளான இன்று "இவள் புதியவள் " என்னும் பத்திரிகையில் மே மாத இதழில் வெளி வந்து இருக்கிறது என்பதை சந்தோஷத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவள் நல்ல நிறம். பெண்களை நல்ல நிறம்னு பொதுவா சொன்னாலும் அதில ரெண்டு மூணு வகை உண்டு. மஞ்சள் நிறம், வெண்மையும் மெல்லிய ரோஜா வண்ணமும் கலந்த நிறம், வெளிறிய வெண்மை நிறம். அவள் இதில் எதிலும் அடங்காமல் பொன் நிறமும், பளபளப்பும் உடையவளாய் இருந்தாள்.அவளை அவள் நிறத்திற்காகவே திருமணம் செய்திருந்தான் அவள் கணவன். அடர் நிறங்களில் உடை உடுத்தி அவளை வெளியே கூட்டிச் செல்லும் போது, பெருமையில் அவன் இன்னும் கொஞ்சம் உயரமாகத் தெரிந்தான். அவளுக்கு பிரியம் மென்மையான நிறங்கள் தான். அதெப்படி தனக்கு சொந்தமான ஒருத்தியை மற்றவன் பார்ப்பதை பொறாமையின்றி இவனால் எடுத்துக் கொள்ள முடிகிறது என்று பல முறை அவள் ஆச்சர்யப் பட்டதுண்டு.
இதெல்லாம் கொஞ்ச காலம் முன்பு வரை தான். இப்பொழுது ஒரு கவலை நெருஞ்சியாய் உறுத்திக் கொண்டிருக்கிறது. போன வாரத்தில் ஒரு நாள், சாவதானமான, குளியலின் போது தான் கண்ணில் பட்டது கெண்டைக் காலில் ஒரு ரூபாய் அளவு நிறமாற்றம். ஏற்கனவே நிறமான பெண்ணாய் இருந்ததால் பளிச்சென்று தெரியா விட்டாலும், ஒரு இடம் மட்டும் வெளிறி இருந்தது. இது மட்டும் தானா வேறு இடங்களிலும் இருக்கிறதா என்று நிறுத்தி நிதானித்து பார்க்கும் போது கழுத்தின் பின்புறம் முதுகு தொடங்கும் இடத்திலும் அது தன் வேலையைக் காட்டத் தொடங்கி இருந்தது.
ஏற்கனவே ஒவ்வொரு மாதத் தீட்டு பட்டதும் உள்ளத்தில் ஒரு நெருப்பெரிச்சல். மாமியாரின் முகத்தில் கூடுதல் கடுகடுப்பு. "தாலியைக் கட்டிட்டு வந்தோமா, புள்ளையப் பெத்தோமா னு இல்லாம என்ன எழவுடா இது" னு மகனிடம் புலம்பினாலும், அவன் தன் மனைவியின் அழகில் மயங்கிக் கிடப்பது நன்கு தெரியுமாதலால் மேற்கொண்டு எதுவும் சொல்வதில்லை. இந்த நிறமாற்றம் என்னன்ன மாற்றங்களை வீட்டினுள் கொண்டு வரப் போகிறதோ?
இதே எண்ணத்தில் அவள் பேசா மடந்தையாகிப் போனாள். கணவனுடன் வெளியே செல்லும் போது லூகொடேர்மா வந்து பாதி வெண்மையும், பாதி கறுப்புமாய் இருப்பவர்கள் எதிரில் வந்தால் நடுநடுங்கிப் போவாள். அதன் பின் வீடு வரும் வரை எதுவும் பேசாமல் வந்தாலும் அதைப் பற்றிய அக்கறையே சிறிதும் இல்லாமல் லொடலொடத்துக் கொண்டே வருவான்.
தனது நெருங்கிய தோழியிடம் தன் சிக்கலை சொல்லி இருவரும் ஒரு வைத்தியரிடம் சென்றார்கள். கூச்சத்தோடு புடவையை விலக்கி காலை திருப்பிக் காட்டினாள். "அந்தப் பக்கம் திரும்பிக்கோம்மா, எந்த இடத்தில வலிக்குதுன்னு சொல்லு " என்ற படியே ஒரு குண்டூசியினால் நிறம் மாறிய இடத்திலும் மற்ற இடங்களிலும் மாறி மாறிக் குத்தினார். அவளுக்கென்னவோ எல்லா இடத்திலும் வலிக்கத் தான் செய்தது.
"பயப்பட ஒண்ணுமில்லை. வலி தெரியலைன்னா தான் பயப்படணும். நான் தர்ற குளிகையை தவறாமல் எடுத்துக்கணும். புளியை சாப்பாட்டில் குறைச்சுக்கிட்டால் மருந்து சீக்கிரமாய் வேலை செய்யும். மற்றபடி கத்திரிக்காய், நல்லெண்ணெய், கருவாடு அறவே ஒதுக்கிடணும் " என்று சொல்லி மருந்தும், தடவுவதற்கு எண்ணையும் தந்தார்.
"கண்டிப்பா குணமாயிடும்ல ஐயா" என்ற போது அவளைப் பார்ப்பதற்கே பாவமாய் இருந்தது. அவள் தோழி அவள் கையை மெல்ல பற்றி லேசாக அழுத்தினாள். உடனே கண்களில் நீர் பூத்தது,
"இது சரியாகலைனா நான் சாவறதைத் தவிர வேற வழி தெரியல " என்றபடி புடவை நுனியால் கண்களை மெல்ல ஒற்றிக் கொண்டாள்.
"தைரியமாப் போம்மா, எத்தனப் பேரை குணமாக்கின கை தெரியுமா இது " என்ற படி தன் வேலையை தொடர்ந்தார் வைத்தியர்.
"அப்போ நாங்க வரோங்கைய்யா" என்றபடி வெளியே வந்து செருப்பைப் மாட்டும் போது புடவை தடுக்க, குனிந்து சரி செய்யும் போது கவனித்தாள், கணுக்காலில் ஒரு அபாய மணி. அப்படியே அங்கே உள்ள திண்ணையில் அமர்ந்து அழத் தொடங்கினாள் சத்தமில்லாமல். கண்களில் மட்டும் தாரை தாரையாக நீர்.
"அழாதப்பா, அதான் மருந்து வாங்கிட்டோமே, சாப்பிட்டா சரியாயிடும். " என்றாள் தோழி.
" இல்ல ரம்யா எனக்கு பயமா இருக்கு. கடவுளாப் பார்த்து கண்ணில படாத இடமா வரப் பண்ணி இருக்கிறாரு. என் மாமியாருக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்னு தெரியல. இந்த மனுஷன் வேற அழகு அழகுன்னு கும்மி அடிக்கிறாரு. புள்ளையா குட்டியா நான் செத்தால் யாருக்கும் நஷ்டம் இல்லை. செத்திட வேண்டியது தான்." என்று சத்தம் கூட்டி அழத் தொடங்கினாள்.
இது போல் எத்தனை பேரை பார்த்திருப்பாரோ அந்த வைத்தியர், தன் வேலையை விட்டு வெளியே வந்தாரில்லை.
(இன்னும் வரும்)
(இன்னும் வரும்)
நல்ல கதை.
ReplyDeleteதிருமண நாள் வாழ்த்துக்கள்.
செம இண்ட்ரஸ்டிங் . ஒரே பாகமாக வெளியிட்டு இருக்கலாம்
ReplyDeleteநன்றி ரத்னவேல் ஐயா. அறிமுகம் இல்லாத பெரியவர்களும் வாழ்த்தும் பாக்கியம் தந்தது ப்ளாக்
ReplyDeleteரொம்ப பெரிசா போயிராது பார்வையாளன் அதான், இன்றும் வருகிறது அதன் தொடர்ச்சி பாருங்கள்.
ReplyDeleteஇனிய திருமண நாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteகதை ரெம்ப நல்லா போகுதுங்க...
நன்றி நாடோடி, எனது முதல் கதை அச்சில் பரவசமானேன் .
ReplyDelete