Bio Data !!

25 May, 2012

சுகமான பயணம் -II


சுகப் பிரசவத்திற்கு அனைவருக்கும் ஆசை தான் 
குழந்தை பிறந்திருப்பதாக சொன்னதும் முதல் கேள்வி நார்மலா? சிசேரியனா ? இன்று சிசேரியனே நார்மலாகிப் போனது ஒரு பக்கம்.
ஆனால் அறிவியலின் வளர்ச்சியால் மூன்றாம் நாளே எழுந்து உட்கார சொல்லி விடுகிறார்கள். அங்கேயும் கட் அண்ட் பேஸ்ட் தான். முன்பு ஆப்பரேஷன் செய்து குழந்தை பெற்றதன் அடையாளமாய் வயிற்றில் ஒரு பெரிய புழுத் தையலை சுமக்க வேண்டும். இன்று அப்படி இல்லை அடி வயிற்றின் ஒரு பக்கமாய் ஒரு ஒட்டலின்  அடையாளம் அவ்வளவு தான். ஆனால் அந்த தையலில் நீர் வைத்து புண்ணாகி விட்டால் தொல்லை.அதை தவிர்க்க குளிப்பதற்கு முன் அந்த இடத்தில் தேங்காய் எண்ணையை தடவி விட்டால் நீர் அதிகம் ஒட்டாமல் ஓடி விடும். மருத்துவர் சொல்லும் மருந்தையும் தவறாது தடவி வந்தால் தப்பித்து விடலாம் கூடுதல் வேதனையிலிருந்து


ஆப்ரேஷன் செய்து குழந்தையை எடுத்தால் மூன்று நாட்களுக்கு தாய்க்கு சலைன் தான் ஏறும். சிலருக்கு அந்த நாட்களில் தாய்ப்பால் சுரப்பதில்லை. இருந்தாலும் குழந்தையை தாயிடம் விடுங்கள் . வேற எதுவும் கொடுக்க  வேண்டாம் என்கிறார்கள்.   அழுது கத்தித் தீர்க்கும் குழந்தையை காணச் சகியாமல் நர்சிடம் கேட்டு டின் பால் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாய் சங்கில் புகட்டினோம் திடீரென டாக்டர் வந்து பார்த்திட்டால் வாங்கிக் 
கட்டுவோம். "குடிக்க குடிக்க தான் வரும் . இந்தப் பால் குடுக்கிறதுக்கு யார் சொன்னா?" என்று கோபப்படுவார்கள். நமக்கு உதவி செய்த நர்சை காட்டிக் கொடுக்காமல் "பால் வரும் வரை குழந்தை என்ன செய்யும் என்று நம்முள் எழுந்த கேள்வியை உள்ளேயே அமிழ்த்தி அமைதியாய் 
நிற்க வேண்டும்.   இளங்காலை சூரியக் குளியலுக்காக நிற்கும் போது பக்கத்தில் விசாரித்தால் அங்கேயும் அதே கதை தான் என்று தெரிந்ததும் கொஞ்சம் மனம் தைரியம் அடையும் 
தொடர்ந்து குழந்தை முயற்சி செய்ய தாய்க்கும் இயல்பான உணவு கொடுக்க ஆரம்பித்ததும் பால் சுரக்கத் தொடங்கும். அதற்குள் பாட்டிலை பழக்கி விடாதீர்கள் குழந்தை தாயிடம் குடிக்க முரண்டு பிடித்து விடும். சங்கில் கொடுப்பது சர்க்கஸ் வித்தை தான். ஆனாலும் அது தான் நல்லது. 

பிறந்த ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு நாலே வேலை தான். பால் குடிப்பது, தூங்குவது, கக்கா , உச்சா போவது. ஆனால் அவர்களின் தேவையை சொல்ல அவர்களுக்கு தெரிந்த ஒரே மொழி அழுகை தான். நாம் தான் எந்த அழுகை எதற்கானது என்று புரிந்த நடக்க வேண்டும். நாம் பொதுவாக அழுதாலே பசி என்று தான் புரிந்து கொள்கிறோம் கொஞ்சம் அக்கறையோடு கவனித்தால் ஒவ்வொரு தேவைக்கும் அதன் உடல் மொழி நமக்கு புரிந்து விடும். கக்கா போக தவிக்கும் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டு ஆட்டு
என ஆட்டி விட்டு "என்ன ஆட்டினாலும் தூங்குதா பாரு " என குறைப்பட்டால் சரியாக இருக்குமா? அதன் உடல் மொழி புரிந்து விட்டால் குழந்தையை தொட்டிலில் இருந்து தூக்கி ஒரு சீட்டில் ப்ரீ ஆக படுக்க போட்டால் அதன் வேலை சுலபமாய் முடியும் குழந்தையை சுத்தம் செய்து தொட்டிலில் போடுங்கள் ஐந்தே நிமிடங்களில் உறங்கி விடும்.

பிறந்த குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுக்கும் வழக்கம் அநேகம் பேரிடம் இல்லை. கண்டிப்பாக இடையிடையே தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறந்த சில மாதங்களுக்கு அடிக்கடி கக்கா போகும் அதனால் உடம்பில் உள்ள நீர் சத்தை சமன் செய்து கொண்டே இருக்க வேண்டும். பாலூட்டும் தாய் தன் உணவில் அதிகம் கவனம் செலுத்தாமல் இருந்தால் குழந்தைக்கு அடிக்கடி வயிற்று வலி வரும்.  சேராத உணவினை மன உறுதியோடு தவிர்த்திட வேண்டும். சேரும் உணவினை பிடிக்கவில்லை என்றாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

(பாலூட்டும் தாய் உண்ண வேண்டிய உணவினை அடுத்த பதிவில் சொல்கிறேன் )


5 comments:

  1. நானும் நாட்களை எண்ணி கொண்டுஇருக்கிறேன் மேடம் ..இன்னுமொரு இருபது நாளில் நல்ல செய்தி சொல்லுகிறேன்

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் பாபு. உங்களுக்கு இந்த பதிவு சரியான நேரத்தில் உதவும் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    நன்றி. வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. பாட்டி யாக பதவி உயர்வு பெற்று இந்த கட்டுரை எழுதி உள்ளீர்கள்.மேலும் எழுத வாழ்த்ததுகள்._ஜோ

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!