இரவானால்
உன் கரங்களின்
அணைப்புக்குள்
கற்பனையாய்
அடங்கி விடுகிறேன்.
புரண்டு படுக்க
முடியாமல் நீ
என்னைப் புறம்
தள்ளுவதில்லை.
பாரமாய்
அழுத்துகிறேனென
புலம்புவதுமில்லை.
அணைப்பைக்
கொண்டு
கலவியில் முடிக்க
என் அலுத்த உடலை
அவசரப்படுத்துவதில்லை.
அகால வயதில்
கரு தாங்கி , அலமந்து
கூனிக் குருகி
பெண் மருத்துவரின்
பார்வைக் குறுவாளின்
பலி ஆக வேண்டியதில்லை.
இரவானால்
உன் கற்பனை
அரவணைப்பில்
அற்புதமாய்
உறங்கி விடுகிறேன்.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!