நெஞ்சுக்கும்
வயிற்றுக்குமிடையே
வட்டமிடும்
பட்டாம்பூச்சியின்
மென்னி திருகி
இளங் காதலின்
பரவசத்தை
புதைத்து மூடிய
மிதப்பில்
என்னை யாருமினி
ஏங்கி அழ விட
முடியாது.
உதடு பிதுக்கி
புலம்ப விட
முடியாது.
கண்ணீர் முட்ட
கலங்க வைக்க
முடியாதென
இறுமாந்திருந்தேன்.
தோற்றுப் போய்
பட்டாம்பூச்சிப்
படபடப்பு
இளங் காதல்
பரவசத்தை
பிரசவிக்க
உணர்ந்தேன்
காதலென்பது
முற்றாய்
அழிக்க முடியா
அணுக்களென.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!