06 March, 2025
#இயற்கையின் மனிதாபிமானம்
நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே இயற்கையின் மனிதாபத்தினால் தான்.
இந்த பதிவின் முடிவில் நீங்களும் என் கருத்துக்கே வந்து விடுவீர்கள்.
இயற்கை என்பது ஐந்து முக்கிய பகுதிகள் கொண்டது. அவை நிலம், நீர், காற்று, வானம், அக்னி.
நிலம் தன் உடலை குலுக்கிக் கொண்டு கொஞ்சம் சரிந்தால் நிலச் சரிவு. இன்னும் கோபம் அதிகம் கொண்டால் பகலில் சரியாமல் இரவில் மக்கள் உறங்கும் போதே சரிந்து அப்படியே கபளீகரம் பண்ணும்.
நீர் :நிலம் தாய் என்றால் கடல் என்பது தாயின் தாய். அம்மம்மா. அவ்வளவு எளிதில் கோபப்படாது. தன்னிடம் வரும் பேரப் பிள்ளைகளிடம் அலை அலையாய் விளையாடும் அம்மம்மா கோபம் அதிகரித்தால் சுனாமியாய் வந்து மொத்தத்தையும் சுருட்டிச் செல்லும்.
வானம்: அந்த அம்மம்மாவின் தங்கையான சின்னப் பாட்டி மழை அன்பாய் மழை பொழியா விட்டாலும் சிக்கல். எக்கச் சக்கமாய் பெய்தாலும் சிக்கல்.இந்த மழையை சரியான அளவில் , நேரத்தில் தந்து நம்மைக் காப்பது வானம்.
சூறாவளியாய் காற்று அச்சுறுத்தாமலும் , அடர் நெருப்பாய் பரவி காடுகளைக் கூட விட்டு வைக்காமல் பஸ்பமாக்காமலும் நம்மைக் காக்கும் அப்பாவாய், அண்ணனாய் காற்றும் நெருப்பும்.
இப்போ சொல்லுங்க நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே இயற்கை மனிதாபிமானத்தோடு நடந்து கொள்வதால் தானே.
நாம் மனிதாபத்தோடு நடந்து இயற்கையை கோபப்படுத்தாமல் பாதுகாத்து நாமும் பாதுகாப்பாய் இருப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!