27 February, 2025
நெஞ்சின் நினைவலைகள்
நான் நேற்று எழுதிய பதிவை தொடர்வதற்கு வசதியாய் தலைப்பு.
வயிற்றில் குழந்தை உருவாகி ஏழாம் மாத இறுதி. எனக்கென்னவோ இந்த பிரசவத்துக்கு அப்புறம் நம்ம கதைக்கு மங்களம் பாடிடுவாங்கன்னு ஒரு அழுத்தமான நம்பிக்கை.
அதனால் கடைசி முயற்சியாக சிங்கத்தை அதன் குகையில் சென்று சந்திக்க முடிவு செய்தேன். பெண் சிங்கம் தானே பார்த்துக்குவோம்னு ஒரு மெத்தனம்.
அப்பவும் என் கணவரும் அவர் நண்பரும் 'நீ அழுதுகிட்டே தான் வந்து நிற்கப் போறே போக வேண்டாம்னு ' தான் சொன்னாங்க. நான் தான் கேட்கலை. எங்க வீட்டுக் கதவை படுக்கும் போது தான் அடைப்போம். திறந்த வீட்டுல எதோ போல நுழைந்து விட்டேன்.
நேரா எங்க அம்மா கிட்ட போய் எங்க கிறிஸ்தவ முறைப்படி முழங்கால் போட்டு 'அம்மா என்னை மன்னிச்சுக்கோங்கன்னேன். அம்மா காலைப் பிடித்துக் கொண்டேன்.
அம்மா காலை உதறி நான் எது போல் நுழைந்தேனோ அதையே வசைச் சொல்லாக்கி வீட்டை விட்டு வெளியேறினார்கள். நான் அழ என் தங்கைகள் ஏதாவது சாப்பிட்டுட்டு போ என அழ நான் வீட்டை விட்டு வெளியேறினேன்.
இது தான் நடக்கும் என எதிர்பார்த்த என் கணவர் ' இதுவே கடைசி தடவையா இருக்கட்டும் ' என்றார். அவருக்கு அன்பு மனைவி அழுவதும் சகிக்க முடியவில்லை. இந்த நிலையில் மகளைப் பார்த்தும் மனம் இறங்கவில்லையே என்ற கோபம். வசதியான வீட்டுப் பிள்ளையை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டோமே என்று தன் மீதே கோபம். எல்லாம் சேர்ந்து என் மீதே கோபம் பட்டார்.
என் வயிற்றுப் பிள்ளைக்கு தாய் படும் பாடு சகிக்கவில்லை போலும். உரிய காலம் வரை உள்ளிருக்க பொறுமை இல்லை.
என்ன செய்தாள்?
நெஞ்சில் நினைவலைகள் ஆர்ப்பரிக்கின்றன .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!