27 February, 2025
#என் ஜன்னலுக்கு வெளியே
என் ஜன்னலுக்கு வெளியே நான். என்ன ஆச்சர்யமா இருக்குதா? ஒரு கால கட்டத்தில் எங்க வீட்டுக்கு எதிர் வீட்டு ஜன்னலில் அமர்ந்து எங்க வீட்டை அதாவது "என் ஜன்னலுக்கு வெளியே" இருந்து எங்க வீட்டை பார்க்க நேர்ந்தது.
சொல்றேன் சொல்றேன். இருங்க. என் காதல் திருமணத்தால் எங்க வீட்டுக்குள் எனக்கு அனுமதி இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் நான் கருவைச் சுமக்கத் தொடங்கி விட்டேன்.்
எல்லோருக்கும் மசக்கை காலத்தில் ஏதாவது சாப்பிடணும்னு தோணும்ல எனக்கு எங்க அம்மாவைப் பார்க்கணும் பேசணும்னு ஏக்கம் வந்திடுச்சு.
நானும் என் கணவரும் நாகர்கோவிலில் இருந்து பாளையங்கோட்டை வருவோம். என் கணவர் அவர் நண்பர் வீட்டுக்கும். நான் எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுக்கும் செல்வோம்.
நான் அமர்ந்திருக்கும் ஜன்னலுக்கு வெளியே எங்க அம்மா நடமாடுறது தெரியும். பார்த்துக் கொண்டே அழுதபடி அமர்ந்திருப்பேன். என் குழந்தை வயிற்றுக்குள் உருண்டபடி "அழாதே" ம்மான்னு எனக்கு ஆறுதல் சொல்லும்.
கொஞ்ச நேரத்தில் கிளம்பி என் கணவரின் நண்பர் வீட்டில் மதிய உணவை முடித்துக் கிளம்பி விடுவோம்.
எங்க அம்மா என்னைப் பார்க்கலைன்னு நான் நினைச்சிருந்தேன். ஆனால் பார்த்த அவர்கள் நான் போனதும் எதிர் வீட்டுக்குப் போய் " நானே வேணாம்னு ஒதுக்கின பிள்ளையை நீங்க எப்படி உள்ளே ஏத்துறீங்க" ன்னு சண்டை போட்டு இருக்கிறார்கள்.
எதிர் வீட்டு அம்மாவை சந்திரிகா அம்மான்னு அழைப்போம்.்மஞ்சள் பூசி நெற்றி நிறைய குங்குமம் வைத்து சுருள் சுருளான முடியில் எப்போதும் கோடாலி முடிச்சு போட்டு இருப்பார்கள். அவர்கள் ஒரே வார்த்தையில் " எங்க வீட்டுக்கு வர்ர பிள்ளையை நாங்க எப்படி வராதேன்னு சொல்ல முடியும். " னு முடிச்சிட்டாங்க.
ஒண்ணும் சொல்ல முடியாமல் எங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாங்க. இன்னொரு சந்தர்ப்பத்தில் ஜன்னலுக்கு வெளியே இருந்து பார்த்தவள் வீட்டுக்கு உள்ளேயே போனேன். அப்போதைய அனுபவம் திகில் அனுபவம். இதே போல் பொறுத்தமான தலைப்பு வரும் போது சொல்றேன்.
வர்ட்ட்டா!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!