Bio Data !!

10 November, 2025

#எண்ணச்சிதறல்கள். ஜாய் கிறிஸ்சில்டா. ஒரு காலத்தில் நடிகை விஜயலக்ஷ்மி வீடியோவா போட்டு ஓஞ்ச மாதிரி இப்போ இந்தப் பொண்ணு போட்டு கிட்டு இருக்கிறாங்க. அவங்க பேசுறதுல ஏமாற்றப்பட்ட ஆதங்கம் தெரியுது. வயிற்றில் குழந்தையோட ஏகப்பட்ட பிரச்னைகள் சந்திச்சதால குழந்தையின் உடல் நலத்திலும் குறைபாடு. முதல் கணவரிடத்தில் இருந்து விவாகரத்து வாங்கும் போது தன் மகனுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க நினைத்திருக்கிறார். அப்போ விவாகரத்து காலம தாழ்த்தப்படுதுங்கிறதால "உன்னையும் உன் மகனையும் நான் நல்லா கவனிச்சுக்கிறேன் . ஏன் compensation கேட்டு டிலே பண்றன்னு சொன்னதால ம்யூச்சுவலா விவாகரத்துக்குக் கையெழுத்து போட்டு கொடுத்ததா சொல்றாங்க. இப்போ இவரும் ஏதோ சூழலில் வயிற்றில் ஒரு குழந்தையையும் கொடுத்து விட்டு ஒதுங்கி விட்டார். அந்த ஆற்றாமை தான் பேச்சில் தெரிகிறது. பிள்ளைகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாய்க்கு மட்டும் தானா? DNA test எல்லாம் இருக்கும் இந்த காலத்திலேயே என் பிள்ளை தானா என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். அப்போ அந்தக் காலம்??? நினைச்சே பார்க்க முடியவில்லை நம் முது பெரும. கிழவிகள் பட்டிருக்கக் கூடிய பாடுகளை. தான் பெரிய நடிகர்களுக்கு உடைகளைத் தேர்வு செய்யும் பணியில் இருந்ததாகவும் , ரங்கராஜ் ரொம்ப பொஸ்ஸஸிவ்வாக இருந்ததால் வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே இருந்து முழு நேரமாக அவரைக் கவனித்துக் கொண்டதாகச் சொல்கிறார்கள். அதே போல் ரங்கராஜ் பக்க செய்திகளும் இருக்கலாம். நமக்கு எது உண்மை எது பொய்யென சரியாகத் தெரியாத போது அதைப் பற்றி கருத்து சொல்ல நான் வரவில்லை. **இந்த நிகழ்விலிருந்து நாம் படிக்க வேண்டிய படிப்பினையை மட்டும் சொல்ல நினைக்கிறேன். நாம் சம்பந்தப்பட்ட என்ன முடிவை எடுக்க வேண்டும் என்றாலும் அதை அடுத்தவர் தீர்மானிப்பதையோ , அல்லது நம்மை அந்த முடிவுக்கு உந்தித் தள்ளுவதையோ நாம் அனுமதிக்கக் கூடாது. ** **நமக்கான முடிவை நாம் தான் எடுக்க வேண்டும். ஏற்கனவே திருமணம் ஆனவருடன் ரிலேஷன்ஷிப்பில் வர நேர்ந்தால் சட்டப்படி பிரிந்திருக்கிறார்களா என்பதை நிச்சயம் செய்து கொண்டே உறவில் இறங்க வேண்டும். At least குழந்தை உண்டாகும் முன்னாவது உறுதி செய்து கொள்ள வேண்டும்.** எந்த ஒரு கால கட்டத்திலும் அவர்கள் போடும் "தங்கங்களையும், தேவதைகளையும் , அழகிகளையும்" நம்பி நம் வேலையை விட்டு கொடுக்கவே கூடாது. பெற்றவர்கள் எவ்வளவு ஆசையோடு தம் பிள்ளைகளை தம் காலில் நிற்க வைக்கிறார்கள். அதை அவ்வளவு சுலபமாக உதறித் தள்ளி விடக் கூடாது. சில விஷயங்களை நிர்ப்பந்தித்தால் கூட, ஆரம்பத்தில் நாம் மாட்டோம் என்று அழுத்திச் சொல்லி விட்டால் அவர்கள் அதை ஏற்றுக் கொண்டு விடுவார்கள். அட்லீஸ்ட் இழப்பு கொஞ்சம் குறைவாகவாவது இருக்கும். சோஷியல் மீடியா நமக்கு நியாயம் பெற்றுத் தராது. அடுத்தடுத்த விஷயங்களுக்கு மாறி மாறிப் போய்க் கொண்டே இருப்பார்கள். அதனால் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாக செய்த பிறகே ஒரு உறவுக்குள் இறங்க வேண்டும். **மூன்றாவது நம் எதிர் பாலினர் அழகாக இருப்பதாலேயே அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய கட்டாயமில்லை. அழகையும் உண்மையையும் இணைத்தே சிந்திக்கிறோம். அதை முதன் முதலாக நிறுத்த வேண்டும். ** கவனமாக இருங்கள். யாருமே 100% அக்மார்க் நல்லவர்களல்ல. 100% நம்பத் தகுந்தவர்களுமல்ல. உஷாரா இருங்க.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!