09 November, 2025
#காதலின் இரண்டாம் நிலை
காதலின் முதல் நிலையிலேயே பல காரணங்களால் நிறுத்திக் கொள்பவர்களும் உண்டு. இரண்டு பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்கும். ஆனா செட் ஆகாதுன்னு மேலே கொண்டு போகல என்பார்கள். நமக்குப் பிடித்தவர்களுக்கு நம்மைப் பிடித்திருக்கிறது என்பதே போதுமானதாய் இருக்கும்.
காதலின் இரண்டாம் நிலை.
இருவருக்கும் பிடித்திருந்தாலும் உள்ளூற ஒரு சந்தேகம் ஊடாடிக் கொண்டே இருக்கும்.
உண்மையிலேயே நம்மைப் பிடிக்குமா? நம்மைப் போலவே பலரையும் பிடித்திருக்குமா? நம்மை நமக்காகவே பிடிக்குமா? வேறு ஏதேனும் hidden agenda இருக்குமா? இது இரண்டு பேருக்கு உள்ளுமே தனித் தனியாய் ஓடும்.
ஆனால் அதை மறைத்தபடியே பழகிக் கொண்டிருப்பார்கள். ஆரம்பப் பழக்கத்தில் எல்லோருமே நல்லவர்கள். தம் எதிர் மறை பகுதிகளை மறைத்துக் கொள்வார்கள். சிலர் நேர்மையாய் இருக்க விரும்புபவர்கள் தம் குறைகளைச் சொல்வார்கள். ஆனால் அந்த ஆரம்ப மோகத்தில் அது பெரிதாய்த் தெரியாது.
நெருக்கமாக இருப்பது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் கொஞ்சம் விலகியே இருப்பார்கள். ஆணோ பெண்ணோ இதைப் பெருமையாய் எடுத்துக் கொண்டு பிறரிடம் பறை சாற்றுபவர்களும் உண்டு. இருவருமே வெளியே தெரியாமல் கொண்டு போவதும் உண்டு.
இந்த இரண்டாம் நிலை நீடிக்கும் போது ஆரம்ப ப்ரியம் குறைந்து விலகிக் கொள்வோம் இது நாம் நினைத்த அளவுக்கு அபூர்வமானதல்ல என்று நாகரீகமாக பிரிந்து விடுபவர்களும் உண்டு.
நாம் இருவரும் ஒருவருக்காகவே ஒருவர் படைக்கப் பட்டு இருக்கிறோம். இவர் தான் என் குறைகளை நிறைவு செய்பவர். என் பலவீனத்தில் இவருக்கு பலம். என் பலத்தில் இவருக்குப் பலவீனம் எனப் புரிந்து ஈகோ இல்லாமல் இருந்தாலோ , இல்லை ஈகோ இல்லாதது போல் காட்டிக் கொண்டாலோ காதல் தன் மூன்றாம் நிலைக்கு நகரும்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!