15 November, 2025
#காதலின்நான்காம்நிலை
காதலின் நான்காவது நிலையில் போராட்டங்கள் அதிகரிக்கும். இருவருக்கும் தினசரி வாழ்க்கையே திண்டாட்டமாக இருக்கும். எதிர்ப்புகள் வலுக்கும். அதை நேர் கொள்ள இருவரும் இறுக்கமாக கைகளைப் பிணைத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு கஷ்டங்கள் தேவை தானா என இருவரில் ஒருவர் நினைத்தாலும் அங்கே காதல் பணால்.
போராட்டங்கள் அதிகரிக்கும் போது ஒரு சில புல்லுருவிகள் உள் நுழையப் பார்க்கும். அது வரை பெரிதாய் ரசிக்காமல் இருந்தவர்களைக் கூட வேறொருவர் காதலிக்க ஆரம்பித்ததும் தனக்கு வேண்டும் எனத் தோன்றும். எப்படியாவது தட்டிப் பறிக்கத் துடிக்கும்.
இந்தப் போராட்டங்கள் பல ரூபம் எடுத்து வரும். ஆணவக் கொலைகளாய். பெற்றோரின் உணர்ச்சி மிகுந்த ப்ளாக் மெயில்களாய், மொட்டை கடிதாசிகளாய் , அனானிமஸ் கால்களாய். அன்பு என்பது மிகவும் அழுத்தமாக இருந்தால் மட்டுமே இந்த நிலையைக் கடந்து திருமணம் வரை செல்ல முடியும்.
அப்பாடா காதலின் நிலைகளை ஒரு வழியா முடிவுக்கு கொண்டு வந்து திருமணத்தில் விட்டுட்டீங்களான்னு கேட்டா இன்னும் முடியலங்க. இன்னும் இருக்குது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!