Bio Data !!

13 September, 2026

நாவலின் பெயர் : ருத்ரா ஆசிரியர் : வான்மதி ஹரி விலை : ரூ 280 AVR publishing. "ருத்ரா" நாவலின் மூலம் வான்மதி ஹரி என்ற எழுத்தாளர் எனக்கு அறிமுகமானார். ருத்ராவைப் பற்றிய அட்டைப் பட அறிமுகமே வாசிக்கத் தூண்டியது. " அனலில் முக்குளித்த அக்னியவள். காரிகையின் கை கோர்த்து கயவர்களின் பிடியிலிருந்மு தப்பித்த கங்கையவள். ஆதவனின் அகம் சேர்ந்த ஆழியவள் தன் குருதி தெறிக்க அரக்கர்களை வதம் செய்ய அவதாரம் எடுத்த ருத்ர சக்தியவள்" இது தான் ருத்ரா என்று தன் பெயரை மாற்றிக் கொண்ட பவித்ரா பற்றிய அறிமுகம். தீரன் ஒரு விபத்தில் தாய் தந்தை இருவரையும் பறி கொடுத்த இளைஞன். காவல் துறை அதிகாரி. ருத்ராவைப் பார்த்ததும் அவள் பின்புலம் எதைப் பற்றியும் ஆராயாமல் இவள் தான் தனக்கு உற்ற வாழ்க்கைத் துணை என முடிவெடுத்து மணக்கிறான். தீரனின் உயிர் நண்பன் அருண். உயிர் நண்பன் என்றால் உயிரையும் கொடுக்கத் துணிந்த நண்பன். அவனும் காவல் துறையைச் சேர்ந்தவன் தான். கதையின் ஆரம்பம் தீரன் , ருத்ரா இருவரின் காதல் வாழ்க்கையை அழகுற உரைக்கிறது. திடீரென்று கதை திசை மாறி பவித்ரா ருத்ராவாக ஏன் மாறினாள். எப்படிப்பட்ட ஆபத்திலிருந்து தப்பி வந்திருக்கிறாள் உலக அளவில் பெண்ணுடல் வியாபார சந்தையை துவம்சம் பண்ண எவ்விதம் உதவுகிறாள் என்று பரபரப்பாக பயணிக்கிறது. புதிது புதிதாக புதுக் களங்களைக் கொண்டு கதை உருவாக்குபவர் பிறப்பது ஆரோக்கியத்தின் அறிகுறி தான். நான் ரொம்ப ரசித்த வாசித்த நாவல்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!