ஐந்து ரூபா நாணயம்.
கவனமற்றவர்களிடம்
ஐம்பது பைசாவாகவும்
கவனமுற்றவர்களிடம்
ஐந்து ரூபாவாகவும்
மாறி மாறிப் பயணிக்கிறது
புதிய ஐந்து ரூபா நாணயம்.
எல்லைப் போர்
இரு வீட்டுப்
பெண்களுக்கிடையே யான
எல்லைப் போரில்
பெருக்கப் படாமலே கிடக்கிறது
கோமணத்துண்டாய்
கொன்றைப் பூக்கள்
காய்ந்து நிறைத்த
முற்றம்
ஆட்டோவில எல்லாம் வரக் கூடாது. இது புதுக்கவிதை, எப்படி வேணுமானாலும் எழுதலாம். ஆம்ம்மாம் .
