28 April, 2025
# குழந்தைகளுக்கு இலக்கியம் படைப்பவர்கள் படிப்பவர்கள்
மாநிலச் செயலாளர்.சாலை செல்வம், பாண்டிச்சேரி. மாநில செயற்குழு உறுப்பினர் கமலாலயன்,
மாநில துணைப் பொருளாளர். கார்த்திகா கவின் குமார். எழுத்தாளர் உதய ஷங்கர் முன்னெடுக்க நிகழ்வு நடந்தது.
நாறும்பூநாதன் , கரிசல் குயில் இருவருக்கும் அஞ்சலி செலுத்துவதோடு நிகழ்வு தொடங்கியது.
வாண்டு மாமா நம் சிறு வயதில் கேள்விப்பட்ட பெயர். அவரது நூற்றாண்டு இந்த ஆண்டு.
இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அவை 1) வாண்டு மாமாவைக் கொண்டாடுவோம் 2)
தலை சிறந்த நூறு சிறார் புத்தகங்கள். இந்த வரிசை பிபிசி தொகுத்து அளித்தது. Alice in wonderland இதில் இரண்டாவது புத்தகமாக உள்ளது. நூற்றைம்பது வருஷங்களுக்கு முன் நடந்த கதை. அப்போதைய அரசை எதிர்த்து இந்த கதையில் வருகிறது. இந்த புத்தகங்களை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.
தமிழ் ஹிந்துவில் பணியாற்றும் ஆதி வள்ளியப்பன் மிகச் சிறந்த உரை ஆற்றினார்.
" கண்ணை மூடிக் கொண்டு நான் எழுதுவது தான் சிறந்ததுன்னு நினைச்சோம்னா நாம் தொடங்கின இடத்திலேயே தான் நிற்போம்.முன்னேற வாய்ப்பில்லை" என்று அழுத்தமாகச் சொன்னார்.
வாண்டு மாமா, தான் கதைகள் எழுத எடுத்துக் கொண்ட விஷயங்களுக்கு back ground work நிறைய பண்ணி இருக்கிறார். கிட்டத்தட்ட 200 புத்தகங்கள் எழுதி இருக்கிறார் .இவர் ஒரு சிலவற்றைத் தவிர்த்து, கை வைக்காத விஷயமே இல்லை எனலாம் . பாட்டில் மட்டும் கை வைக்கவில்லை. புதினம் அபுதினம் ரெண்டும் எழுதி இருக்கிறார்.
சரியாக ஆவணப்படுத்தப்படாததால் இன்றைய குழந்தைகளுக்கு வாண்டு மாமா பற்றி தெரியாமல் போய் விட்டது.
அடுத்து ஆர் வெங்கட்ராமன் இளையோருக்கான விஷயங்களை நிறைய எழுதினார். இவர் எழுதிய "ஒரு நாள் போதுமா" என்ற கதை கலைமகளைச் சேர்ந்த " கண்ணன்" பத்திரிகையில் வெளி வந்த்தாகச் சொன்னார் .
பேராசிரியர் ப்ரியதர்ஷினி அருமையான ஒரு வாழ்த்துரை வழங்கினார். பள்ளி, கல்லூரிகளில் உடை, கட்டி இருக்கும் கயிறு போன்றவற்றின் மூலமே ஜாதியம் எப்படி வளர்கிறது என வருத்தத்தோடுசொன்னார். அவர் சொன்னதில் ஒரு கருத்துஎனக்கு ரொம்ப பிடித்தது.
நாம் ஒரு பட்டம் வாங்குறோம்னா அதில் 30 க்கு மேற்பட்டோர் பங்கு உண்டு. ஆசிரியர், பள்ளியில் பணி புரிபவர், பள்ளி டிரைவர் உட்பட. நாம் பெற்றது பல. அதை எவ்வழியிலாவது திருப்பிக் கொடுக்கணும் என்றார். அதற்கு இந்த கதை சொல்லல் ஒரு வழிமுறை.
(தொடரும்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!