16 September, 2026
நம் வாழ்வில் அறிமுகமாகும் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கும். ஒன்று நம்மால் அவருக்கோ அல்லது அவரால் நமக்கோ.
அந்தப் பணி முடியும் வரை நம்மோடு பயணிப்பார்கள். அந்த உறவு நம்மைப் பல ஆக்க பூர்வமான காரியங்களைச் செய்ய வைக்கும்.
அந்தப் பணி முடிந்ததும் அந்த உறவும் விலகி விடும். சில நேரங்களில் நாமே ஒரு கணக்குப் போட்டு ஒருவரை நெருங்கும் போது பிரபஞ்சம் நம்மோடு விளையாடிப் பார்க்கும்.
அந்த உறவை நம்மை விட்டுப் பிரித்து வைக்கும். சேர நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் முறித்துப் போடும். பிரிவில் உருகித் தவிக்க வைக்கும். வெகு அபூர்வமாய் சிலருக்கு அந்த உறவை நிரந்தரமாய் பிரித்து விடும். வேறு சிலரை அவர்கள் பிரிவிற்கு மனதை தயார் செய்யும் நேரம் வரும் போது இணைத்து விடும். இதெல்லாம் பிரபஞ்சத்தின் கைங்கர்யம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!